சரச சல்லாப வீடியோ - கல்யாண நாளில் என்னாகும் நிலைமை?
மீக்கு மாத்திரம் செப்தா - தெலுங்கு இயக்கம் - சமீர் சுல்தான் ஒளிப்பதிவு - மதன் குணதேவா இசை சிவகுமார் போனில் செய்யும் சிறிய தவறு எப்படி கல்யாண நாளில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள். தருண் பாஸ்கர் இயக்காமல் நடித்திருக்கிற படம். படத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் இவரும், அபினவ்வும் செய்யும் காமெடிகள்தான் படத்தைப் பார்க்க வைக்கின்றன. பட வாய்ப்புக்காக தருண் ஒரு உப்புமா இயக்குநரை சந்திக்கிறார். அந்த சமாச்சாரம் நடக்கும் வரையில் அவர் உப்புமா ஆள் என தருணுக்கு தெரியாது. படத்தில் தருணின் பெயர் ராகேஷ். அங்கு பார்த்தால், ஒரு பெண், ஒரு பெட், ஒரு லைட் என எல்லாம் மினிம மாகவே இருக்கிறது. யெஸ் ராத்திரி வீரன் ரக படம்தான். இதுதெரியாத தருண், காலை நீட்டிப்போட்டு... பெட்டில்தான். படுத்து தூங்கிவிடுகிறார். ஏசி காற்று தூக்கத்தை அள்ளித்தருகிறது. இவருக்காக சாப்பிட சோறு எடுத்துவரச் சென்ற பெண், இதனால் டென்ஷன் ஆகிறாள். அதனால் என்ன செல்போன் கேமராவை திருப்பிவைத்து உறங்கும் நிலையில் இயக்குநர் சொன்ன சமாச்சாரத்தை முடிக்கிறார