இடுகைகள்

யானைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடம்பெயரும் யானைகள்!

படம்
  இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன் தகவல் வெளியிட்டுள்ளது.  இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர்.  தகவல்: DowntoEarth

யானையை வேட்டையாடத் தடையில்லை!

படம்
ஆப்பிரிக்காவிலுள்ள போஸ்ட்வானாவில் யானைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. எனவே அரசு, யானைகளை வேட்டையாட வாங்க என தடையை நீக்கியுள்ளது.  ஆப்பிரிக்காவின் சாவன்னா யானைகளைக் காக்கும் நாட்டில் இப்படியொரு நிலைமையா என சூழலியலாளர்கள் நொந்துபோயுள்ளனர். காரணம் மேற்சொன்ன அறிவிப்புதான். யானைகளை வேட்டையாடும் தடையை நீக்கியது, அரசியல் விளையாட்டு என பலரும் கருதுகின்றனர். போஸ்ட்வானா அதிபரான மோக்வீட்ஸி மைசிசி , கிராமத்தினரின் ஓட்டுக்களைப் பெற இதுபோல அறிவிப்புகளை வெளியிடுகிறார் என்கிறது அரசியல் வட்டாரம். தற்போது போஸ்ட்வானாவில் 130000 யானைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. யானைகள் இரைக்காக வீடு, வயல், தோட்டம் புகுந்து தாக்குவதை இத்தடை நீக்கும் என சூழலியல்துறை கூறியுள்ளது. யானைகளை வேட்டையாடுவதற்காக வெளிநாட்டினர் ஆப்பிரிக்கா வருவது சுற்றுலா வருமானத்தையும் அதிகரிக்கும் என வேற லெவலில் யோசிக்கிறது அரசு. ஆனால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. சட்ட விரோதமாக யானைகளை சுட்டுக்கொல்வதும் அதிகரித்து வருகிறது. 2007 - 2014 வரையில் யானைகளின் எண்ணிக்கை 30 சதவீதம் சரிந்தது. யானைகளை கொல்வதற்கான தடை 2014 ஆம் ஆண்டு