இடுகைகள்

செயற்கைக்கோள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்பிரிக்க கண்டத்தின் வேளாண்மை பொருளாதாரத்தை மேம்படுத்த முயலும் இளம்பெண் கேட் கலோட்!

படம்
  கேட் கலோட் என்ற பெண்மணி கென்யா நாட்டைச் சேர்ந்தவர். இவர்,2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமினி என்ற தகவல்தள நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம், ஆப்பிரிக்காவில் உள்ள விவசாய நிலங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறது.  மண்வளம்,ஈரப்பதம், மழை ஆகிய தகவல்களை செயற்கைக்கோள் மூலம் சேகரித்து வருகிறது. கலோட்டின் நோக்கம், விவசாயிகளுக்கு காலநிலை பற்றிய தகவல்களை  எஸ்எம்எஸ் வழியாக வழங்குவதுதான். இதன் மூலம் அவர்கள் பயிர்களை கவனித்து வளர்க்கலாம், லாபம் பெறலாம். ஆப்பிரிக்க கண்டமே இதன் மூலம் லாபம் பெறும். இந்த திட்டத்தை சற்று விரிவாக பார்ப்போம்.  மொத்தம் ஆறு செயற்கைக்கோள்கள் வானில் அலைந்து திரிந்து ஆப்பிரிக்காவின் 11.7 மில்லியன் சதுர மைல் நிலப்பரப்பு பற்றிய காலநிலை தகவல்களை சேகரிக்கும். இதை வைத்து காலத்தே பயிர் செய்து, பராமரித்து லாபம் பெறலாம். வெள்ளம், பூச்சி தாக்குதல், மழை பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு போன் வழியாக அனுப்பி எச்சரிக்கப்படும். ஆப்பிரிக்க கண்டமே வேளாண்மையை அடிப்படையாக கொண்டதுதான். எனவே, அதை மேம்படுத்துவதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும்.  உலகளவில் உள்ள விவசாயம் செய்யப்படாத தரிசு

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

இஸ்ரோ - செய்த சாதனைகள் - இந்தியா 75

படம்
  இஸ்ரோ - சாதனைகளின் வரலாறு 1962  விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி - இன்கோஸ்பார் அறிவியலாளர் சாராபாயால் உருவாக்கப்பட்டது.  1963 நவம்பர் 21  தும்பாவில் சவுண்டிங் ராக்கெட்டை தயாரித்து விண்ணில் ஏவினார்கள் 1969 ஆகஸ்ட் 15  இஸ்ரோ அமைப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.   1975 ஏப்ரல் 19 இந்தியாவின் முதல் செயற்க்கோளான ஆர்யபட்டா உருவாக்கப்பட்டு செலுத்தப்பட்டது.  1971 ஸ்ரீஹரிகோட்டாவில் ஷார் மையம் உருவாக்கப்பட்டது. தற்போது இதன் பெயர் எஸ்டிஎஸ்சி.  1977 ஜனவரி 1  செயற்கைக்கோள்களால் கிராமங்களிலும் டிவி ஒளிபரப்பு கிடைத்தது.  1979 ஜூன் 7  பூமியைக் கண்காணிக்கும் பாஸ்கரா என்ற சோதனை முறையிலான செயற்கைக்கோள்  விண்ணில் ஏவப்பட்டது.  1979 ஆகஸ்ட் 10 எஸ்எல்வி 3 முதல்முறையாக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுவும் சோதனை முறையிலான முயற்சிதான்.  1981 ஜூன் 19  ஏரியன் விண்வெளி ராக்கெட்டில் ஆப்பிள் என்ற தொலைத்தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள் ஏவப்பட்டது.  1987 மார்ச் 24 எஸ்எல்வி மேம்படுத்தப்பட்ட வடிவில் உருவாக்கப்பட்டு அறிமுகமானது.  1993 செப்டம்பர் 20 பிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது

விண்வெளியை ஆக்கிரமிக்கும் செயற்கைக்கோள்!

படம்
  புவி வட்டப்பாதையில் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் அதிகரித்து வருகின்றன.  செயல்படாத செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்கவும், அதன் போக்குவரத்தைச்  சீர்படுத்தவும் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் முயன்று வருகின்றன.  தற்போது உலக நாடுகளில் ஆய்வுக்காகவும், இணையச்சேவை சார்ந்தும் ஏராளமான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. ஆனால் புவி வட்டப்பாதையில் ஏராளமான செயற்கைக்கோள்கள் சுற்றி வருவதால், புதிய செயற்கைக்கோள்களுக்கு இடமேயில்லை என்ற சூழ்நிலை உருவாகிவருகிறது. உலகநாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மைய பொறியாளர்கள் விண்வெளியில் இயங்கும், செயல்படாத செயற்கைக்கோள்களின் போக்குவரதை ஒழுங்கு செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 22ஆம் தேதி சர்வதேசி விண்வெளி மையத்திற்கு எச்சரிக்கை ஒன்று வந்தது. பூமிக்கு 400 கி.மீ . தொலைவுக்கு மேலே செயற்கைக்கோளின் பாகம் ஒன்று,  விண்வெளி நிலையத்தை தாக்க வருவதாக ஆய்வாளர்கள் கூறினர். உடனே நிலையத்திலிருந்த ராக்கெட்டை உசுப்பி ஆய்வாளர்கள் மோதலிலிருந்து தப்பினர். 1999ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச விண்வெளி நிலையத்தி

இரண்டு மணிநேர வானிலையை கூகுள் கணிக்கிறது! - சாத்தியமா?

படம்
  தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் என்றால் வானிலை ஆய்வு மையத்தில் மைக்குகள் சகிதம் நிருபர்கள் எப்போதும் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இப்போது நிலைமை சமூக வலைத்தளம் மூலம் நிறைய மாறியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தில் செயற்கைக் கோள் படங்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் சிலர் சொல்லும் கணிப்புகள் மக்களுக்கு நிறைய உதவுகிறது. வானிலை ஆய்வு மையம், அதிகாரப்பூர்வமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அவர்கள் அடுத்து முப்பது ஆண்டுகளுக்குள் பேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கி மக்களோடு பல்வேறு வானிலை தகவல்களை பகிர்வார்கள் என நம்பலாம்.  இப்படி அரசு அமைப்புகள் அதிகாரப்பூர்வமாக சரியான தகவல்களை அறிவிக்கவேண்டும் என அடம்பிடிப்பதால், நாம் தொழில்நுட்பத்தையே நம்ப வேண்டியதுள்ளது. கூகுள் இந்த வகையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி வானிலையைக் கணிக்கலாம் என்று கூறியுள்ளது.  செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை நிறைய தகவல்களைக் கொடுத்தால் போதுமானது. அதை வைத்து காலநிலையை ஓரளவுக்கு துல்லியமாக கடைபிடிக்கலாம்.  லண்டனில் உள்ள கூகுளின் டீப் மைண்ட் குழுவினர், இதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்கள், அடுத்த இரண்டு மணிநேரத்தில் மழை பெ

விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்!

படம்
  விண்வெளிக் குப்பைகள் ஏற்படுத்தும் அபாயம்! விண்வெளியில் பூமியின்  அருகிலேயே அமைந்துள்ள கீழ்மட்ட சுற்றுப்பாதையில் எதிர்காலத்திற்கான ஆபத்து குவியலாக உருவாகத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான  செயற்கைக்கோள்களின் கழிவுகள்தான் அவை.  இந்த பிளாஸ்டிக் கழிவுகள் 1 மி.மீ அளவிலிருந்து 1 செ.மீ அளவுகள் வரை உள்ளன.  செயலற்றுப்போன செயற்கைக்கோள் உள்ளிட்ட கழிவுகளை எரிக்க லேசர் கதிர்கள், காந்தம் மூலம் அதனை சேகரித்து அழிப்பது உள்ளிட்ட முயற்சிகளை உலக நாடுகள் முயற்சிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிகள் துகள்களை உடனே கைப்பற்றி அழிப்பதும் சாதாரண காரியமல்ல; ஈர்ப்புவிசையின் விளைவாக 56 ஆயிரம் கி.மீ வேகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள்  பூமியைச்  சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதனை நுட்பமாக கவனிப்பதே சவாலான காரியம்.  தற்போது எம்ஐடி பல்கலைக்கழகம் பிளாஸ்டிக்குகளை அதிவேகத்தில் படம்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. எம்ஐடியில்  மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் எஞ்சினியரிங்  துறையைச் சேர்ந்த ஆய்வாளர் முஸ்தபா ஹசானி கங்காராஜ், அத்துறை தலைவரான கிறிஸ்டோபர்  ச்சூ(Schuh) ஆகியோரின் புதுமையான ஆராய்ச்சிக் கண்டுபிடிப

விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!

படம்
  விண்வெளியில் செயற்கைக்கோள் போர்!  விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் பல்வேறு நாடுகளும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள்களை நிறுத்துவதற்காக போட்டியிட்டு வருகின்றன.  இன்று உலக நாடுகள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் போன்றவற்றையும் செயற்கைக்கோள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். நாட்டின் பல்வேறு துறைசார்ந்த வளர்ச்சியிலும் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதன் விளைவாக பல்வேறு நாடுகளும் விண்வெளியிலுள்ள புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த போட்டியிட்டு வருகின்றன. இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் முன்னிலையில் உள்ளன.  1978ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி மையம் நேவ்ஸ்டார் 1 என்ற ஜிபிஎஸ் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதற்குப்பிறகு பல்வேறு நாடுகளும் ராணுவம், தகவல்தொடர்பு, விவசாயம் என பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகின்றன.  அண்மையில், அமெரிக்க விமானப்படை தனது பிளாக் 3 செயற்கைக்கோள்களை மேம்படுத்த 4 பில்லியன் டாலர்களை செலவிட முடிவு செய்துள்ளது. ”விண்வெளியில்  சரியான இடத்தில் செயற்கைக்கோள்களை நிறுத்துவதன் மூலம் நாட்டிலுள்ள பல்வேறு விஷயங்களை கட்டுப்

நவீன காலத்தின் மிகச்சிறந்த தொழிலதிபர்! துணிச்சல், தைரியம், தொலைநோக்குப்பார்வை, அசாதாரண வெளிப்படைத்தன்மை கொண்ட எலன் மஸ்க்

படம்
              2020 ஆம் ஆண்டின் சிறந்த தொழிலதிபர் ! அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டக

மழை பெய்யும்போது இணையமும், செல்போனும் செயல்படாது! - இதற்கான அறிவியல் காரணம் என்ன?

படம்
    மழைக்காலத்தில் ஏற்படும் இயற்கையான தடங்கல்கள் ! மழைக்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் , இணையப் பயன்பாடு என இரண்டுமே பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றன 1860 ஆம் ஆண்டு , ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் ஜேம்ஸ் மேக்ஸ்வெல் , புதியவகை மின்காந்த அலையை கண்டுபிடித்தார் . அதற்குப்பிறகு இயற்பியலாளர் ஹென்ட்ரிச் ஹெர்ட்ஸ் , மேக்ஸ்வெல்லின் கோட்பாட்டை சோதித்துப் பார்த்து , அதனை உறுதியும் செய்தார் . 1895 ஆம் ஆண்டு கோல்கட்டாவில் சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் , மின்காந்த அலை மூலம் 23 மீட்டர் தூரத்தில் வயர்களின்றி செய்தியை அனுப்பமுடியும் என்பதை செய்து காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் . இன்று நாம் செய்தியை இணையத்தின் வழியாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் . இதற்கு காரணமாக இருப்பது எலக்ட்ரான்கள் . அவற்றில் உருவாகும் மின்காந்தவிசை .   இரு எலக்ட்ரான்களுக்கு இடையில் மின்காந்த விசை உருவாகும்போது நாம் செய்தி அனுப்ப முடிகிறது . எளிய உதாரணமாக நாம் ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் அலைநீளத்தில் கண்களால் பார்ப்பதால் , அதனை எளிதாக உணர்ந்துவிடுகிறோ்ம் . தொலைத்தொடர்பு வசதி முன்னேறாத

இந்தியா தொழில்நுட்பத்தில் முந்துகிறதா?

படம்
தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் இந்தியா தன் சாட்டிலைட்டை தானே தகர்த்து, தொழில்நுட்ப ரீதியிலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் சீட்டையும் ரிசர்வ் செய்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல் பரப்பு 1000 கி.மீ. (தற்போது நடந்த தாக்குதல் 300 கி.மீ.பரப்பு) ரஷ்யா  600 கி.மீ. அமெரிக்கா 6000 கி.மீ. சீனா 10000 - 30000 கி.மீ. இருவகை சாட்டிலைட் ஏவுகணைகள் டாசாட்(DAASAT) இவ்வகை ஏவுகணையே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இன்டர்செப்டர் சிஸ்டம் உதவியின்றி வட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி கொண்டது. வட்டப்பாதை ஏவுகணை இதனை முதலில் வட்டப்பாதையில் பொருத்தி பின்னர் செயற்கைக்கோளை நோக்கிச் செலுத்தி அதனை அழிப்பது. இதிலும் சீனாவை ஒப்பீடு செய்தால் இந்தியாவுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். காரணம், விண்வெளி குப்பைகளை லேசர் ஆயுதம் மூலம் அழிப்பது வரை யோசித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சீன விடுதலைப்படை. பூமியைச் சுற்றி 320 ராணுவச் செயற்கைக்கோள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதில் முந்துவது அமெரிக்கா. அமெரிக்கா 140 செயற்கைக்கோள்களையும், ரஷ்யா 80 செயற்கை

’இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது’

படம்
சதீஸ் ரெட்டி, டிஆர்டிஓ நேர்காணல் இந்தியா தன் சாட்டிலைட்டை ஏவுகணை மூலம் தகர்த்து எறிந்துள்ளது. சக்தி எனும் திட்டத்தைப் பற்றி டிஆர்டிஓ இயக்குநகர் சதீஸ் ரெட்டி பேசுகிறார். இந்தியா இன்று உலகநாடுகளின் லிஸ்டில் இணைந்துள்ளது. நீங்கள் இந்த திட்டம் பற்றி விரிவாக கூறுங்களேன்.  சக்தி எனும் இத்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2016-17 வாக்கில் தொடங்கினோம். திட்டத்தை வேகமாக்கியது ஆறுமாதங்களுக்கு முன்புதான். முன்பே நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஏவுகணையை உருவாக்கி சாதித்துள்ளோம். இதில் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுங்கள். இதில் பயன்படுத்திய தொழில்நுட்பம் பற்றி பேசமுடியாது. ஆனால் இதில் சவால்கள் என்பது மூன்று இடத்தில் இருந்தது. இலக்கின் மீதான துல்லியம், இலக்கை சரியான கோணத்தில் தாக்கும் திட்டம், டெக்னாலஜியைப் பயன்படுத்தி இலக்கை சரியான முறையில் அணுகுவது ஆகியவை பெரும் சவாலாக இருந்தது. இதன்மூலம் நாம் அடையும் நிலை என்ன? இந்தியா தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவில் தயாரானது என்ற பெருமை கொண்டது. இதன் அமைப்பு, மென்பொருட்கள், சென்ச