இடுகைகள்

குட்பை 2025 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2025ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பிய உணவு - பிரியாணி!

படம்
  2025ஆம் ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவுகள் தமிழ்நாட்டில் உணவு என்றால் பஞ்சாய்ப் பறப்பார்கள். கோவிலில் உணவு, இருபது ரூபாய் உணவு, பௌர்ணமி, அமாவாசை உணவு என எப்படி உணவு போட்டாலும் அதை வாங்கித் தின்ன பெரும் கூட்டம் திரள்வது வாடிக்கை. தார்ச்சு கட்டிடம் கட்டியவனும் இலவச சோறு வாங்க மாரியம்மன் கோவில் வாசலில் காத்திருப்பான். ஒரு வேளை சோறு வீட்டில் ஆக்கவேண்டியதில்லை என குடும்பத்தையே கூட்டிவந்து புதிதாக மணமாகி வந்த மருமகளைக் கூட லைனில் இணைத்துக்கொள்ளும் தாராளமனம் கொண்ட மக்கள் வாழும் தேசமிது. ஸ்விக்கி நிறுவனம் மக்கள் அதிகம் விரும்பிய உணவுகள் என தன்னுடைய ஆர்டர் லிஸ்டை ஆராய்ந்து புள்ளிவிவரம் ஒன்றை தயாரித்துள்ளது. இது அவர்களுடைய வணிகத்திற்கானதுதான். இருந்தாலும் அதை நாமும் பொருட்படுத்தலாம். நம்மிடம் என்டிஏ அரசைப் போல உணவைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. பிரியாணி 93 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் கோழி, ஆடு, மாடு, பன்றி எத்தனை என்று தெரியவில்லை.பர்கர் 44 மில்லியன் அளவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பர்கர் சாப்பிடும் மக்களை இனி மதவாத குண்டர் குழுக்கள் என்ன செய்வார்களோ.... இ...

2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்!

படம்
 2025ஆம் ஆண்டை எண்களாகப் பார்ப்போம்! இந்தியா, மதவாத கட்சியின் ஆட்சியில் டாலருக்கு எதிராக ரூ.90 அளவுக்கு சரிவை சந்தித்திருக்கிறது. மன்மோகன்சிங் ஆட்சியில் ரூபாய் சற்றே சரிவை சந்தித்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலில் ஊளையிட்ட நடிகர்கள், மும்பை ஊழல் தொழிலதிபர்கள் இப்போது கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். தனக்கு வரவேண்டிய பதினைந்து கோடி ரூபாய், இன்னொரு செய்தியாளரிடம் சென்றுவிட்டதற்காக கோஸ்சாமி மட்டுமே ஆரவள்ளி மலைத்தொடர் சுரங்கம் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ரூபாய் பற்றி இன்னும் யாரும் எதுவும் பேசவில்லை. பேசினால் வீட்டுக்கு, அலுவலகத்திற்கு ரெய்டு வரும். சோனம் வான்சுக் போல விசாரணையி்ன்றி சிறையில் வைக்கப்படுவார்கள். கிறித்தவர்கள் போல எரித்தே கொல்லப்படலாம்.  பஞ்சாபி பாப் ஸ்டார் கரன் ஆஜ்லா இந்தியாவுக்கு வருகிறார். இவரது இசைப்பயணத்திற்காக 1,00,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.  உச்சநீதிமன்றத்தில் தேங்கியுள்ள ஒட்டுமொத்த வழக்குகளின் எண்ணிக்கை 88,417. இது இதுவரையிலான நீதிமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கை. நேர்மையாக செயல்பட்டால் உடனே அந்த நீதிபதியை இடமாற்றம் செய்யும் சனாதன தர...