இடுகைகள்

பசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேனில் அடைக்கப்பட்ட உணவு கெட்டதா? - உண்மையா - உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை விட அவ்வப்போது சந்தையில் விற்கப்படும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவதே சிறப்பு.  உண்மை அதெல்லாம் காசு கொட்டிக்கிடப்பவர்களுக்கு சரி. சாதாரண ஏழை மக்களுக்கு சரிபடாது. கேனில் உள்ள பழங்கள், காய்கறிகளை குறைந்த விலைக்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கலாம். சந்தையில் விற்கும் பழங்கள், காய்கறிகளின் விலை மாறிக்கொண்டே இருக்கும். அதை அந்தந்த நேரத்தில் வாங்குவது அனைவருக்கும் முடியாது. சத்துகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. புதிதாக பறித்து விற்கப்படும் காய்கறி, பழங்களைப் போவே கேனில் அடைக்கப்பட்ட பழங்களும் இருக்கும். சத்துகள் பெரிதாக இழக்கப்படாது. அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படு்ம் சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சோதித்துக்கொண்டு சாப்பிட்டால் நல்லது.  கொழுப்பு என்றாலே கெட்டதுதான். உண்மை 1940ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு அதிகமான உணவுகளை எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ஆபத்து. கொழுப்பு குறைவான உணவுமுறை இதய நோய்களை குறைக்கும் என ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். 1980ஆம் ஆண்டு கொழுப்பு குறைவான உணவுமுறை மக்கள் அனைவருக்குமே நல்லது. இதயநோய், உடல் பரு

பசுக்களைத் தாக்கி பால் சுரப்பைக் குறைத்து கொல்லும் எல்எஸ்டி நோய் - பாதுகாப்பது எப்படி?

படம்
            பசுக்களைக் காப்பாற்றுங்கள் - தலித்துகளுக்கு எதிரான கட்டுரை அல்ல கால்நடைகளை தாக்கும் வைரஸ் நோய்  வேகமாக வட இந்தியாவில் பரவி வருகிறது. அதன் பெயர் எல்எஸ்டி. போதை வஸ்தாது பெயர் என்பதால் அதே அளவுக்கு கிளுகிளுப்பாக இருக்கும் என நினைக்கவேண்டாம். இது பசுக்களை கொன்று வருகிற வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர். லம்பி ஸ்கின் டிசீஸ் என்பதுதான் எல்எஸ்டிக்கான விளக்கம். கார்பிபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த வைரஸ் இந்நோயை ஏற்படுத்துகிறது. உணவு, நீர் ஆகியவற்றில் ஏற்படும் கலப்படம் மற்றும் பூச்சிகள், கொசு, உண்ணி ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய் கால்நடைகளுக்கு குறிப்பாக பசுக்களுக்கு பரவுகிறது. நோய் பரவி முதிர்ச்சி அடையும் காலம் 4 முதல் 14 நாட்கள். பசுக்களின் நிணநீர் கணுக்கள் வழியாக கிருமிகள் பரவி பசுக்களைப் பாதிக்கின்றன. அறிகுறிகள் என்னென்ன? உடல் வெப்பம் அதிகரிப்பு, சரியாக சாப்பிட முடியாது, பால் சுரப்பு குறைந்துவிடும், மூக்கில் நீர் வடிவது, எடை குறைவு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், மகாராஷ்டிரா, உ.பி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தி அத

வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

படம்
  ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது! உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர்.  ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்! உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.   பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1 உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாள

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/ http

தன்னை பசுவாக உணரும் மனநிலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  கொரில்லா மகிழ்ச்சியாக இருந்தால் ஏப்பம் விடும்! உண்மை. இரையாக கிடைத்த உணவில் அதிக பங்கு கிடைத்தால் கொரில்லா குழுவில் உள்ள  கொரில்லாக்கள் ஏப்பம் விடுகின்றன. ஏப்பம் விடுவது நாம் தொண்டையை சரி செய்துகொள்வது போலவே இருக்கும். ஏப்பம் விடும்போது, உம்..உம் என்ற ஒலிதான் வரும். கூட்டத்தலைவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபிறகு, மற்ற கொரில்லாக்களும் அதை அப்படியே பின்பற்றும். மனிதர் தன்னை பசுவாக கருதுவது மனநல குறைபாடு! உண்மை. மனிதர் தன்னை பசு அல்லது எருதாக கருதுவதை போன்த்ரோபி (Boanthropy) என்ற மனநல குறைபாடாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். கல்லீரலில் ஏற்படும் போர்பைரியா(Porphyria),சைபிளிஸ் ( syphilis) ஆகிய நோய்கள் போன்த்ரோபி குறைபாட்டை ஊக்குவிப்பதாக மருத்துவர்கள் விளக்கம் தருகின்றனர். போன்த்ரோபி குறைபாடு ஒருவருக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது.  https://thedailywildlife.com/do-gorillas-burp-when-they-are-happy/  https://www.thefactsite.com/100-strange-but-true-facts/

விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

படம்
  மருத்துவர் தபேஷ் மாத்தூர் 2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார்.  பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன.  விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது.  செயற்கைக் கால்களை

சைவ உணவால் குழந்தைகளை மெல்ல கொல்லும் அரசியல்வாதிகள்!

படம்
  மாட்டிறைச்சி அரசியல் குஜராத் மாநிலம் உலகிலேயே அதிகம் வளர்ச்சியடைந்துள்ளது என பலரும் நமக்கு விபூதி அடித்துள்ளனர். ஆனாலும் உண்மையான செல்வம் என்பது மனிதவளத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுதான். அதனை இங்குள்ள சைவ அரசியல்வாதிகள் கணநேரம் மறந்துவிட்டனர் போல.  மாநிலத்தில்  80 சதவீத குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் ஆறு மாதம் முதல் ஐம்பத்தொன்பது மாதம் வரையிலான வயதைக் கொண்டவர்கள் இதனை சொன்னது வெளிநாட்டு தன்னார்வ அமைப்பு அல்ல. ஆத்மநிர்பாராக செயல்படும் குடும்ப சுகாதார துறையின் ஆய்வுதான். ஏறத்தாழ ஒட்டுமொத்த நாடுமே மன்னர் ஆட்சிகாலத்தைப் போல மாறிக்கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில்தான் மன்னர் எந்த மதமோ, அதே மத த்தை மக்களும் பின்பற்றவேண்டும். மறுப்பவர்களை கொன்றுவிடுவார்கள். அல்லது மிரட்டி மதம் மாற்றுவார்கள். இப்போதும் குறிப்பிட்ட நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு பிடித்த விஷயங்களை மக்கள் மேல் திணித்து வருகிறார்கள்.  இதன்படி குஜராத்தில் சைவ உணவு வாசிகள், நான் - வெஜ் சாப்பிடும் பழக்கத்தை ஒழிப்பதை இப்போது தங்களது கடமையாக கொண்டுள்ளார்கள். ஏன் இப்படி என்று கே

மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

படம்
            உண்மையும் உடான்சும்! பசு , தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது ரியல் : உண்மைதான் . எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ , அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு . பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள் . இது அனுபவத்தால் ஏற்படுவது . 2014 ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம் , நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர் . மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும் ரியல் : உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும் . இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது . இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது . தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம் . உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு , அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள் , இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடல

பால் வருமானத்திலிருந்து விவசாயிகள் வெளியே வரவேண்டும்! - பசு சாணம், கோமியத்தில் புதிய பொருட்கள்- அசத்தும் தொழில்முனைவோர்

படம்
          மாடுகளை இறைச்சிக்காக கொல்வது கர்நாடக மாநிலத்தில் சட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது . டிசம்பர் 9, 2020 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது . அமுலின் தலைவர் வர்கீஸ் குரியன் காலத்திலிருந்தே மாடுகளை இறைச்சிக்காக கொல்வதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் போராடி வந்துள்ளன . இதற்கு எளிமையான காரணமாக பால் வளத்தை இழந்த மாடுகளை விற்காதபோது , விவசாயி கடனாளி ஆகிவிடுவார் என குரியன் அன்றே பதிலடி கொடுத்துள்ளார் . இத்தனைக்கும் வெண்மைப் புரட்சி எப்படி சாத்தியமானது ? குரியனின் பல்வேறு திட்டங்கள் மூலமாகத்தான் . புதிய கர்நாடக அரசின் சட்டம் மூலம் ரூ .10 லட்சம் வரையில் அபராதங்களை விதிக்க முடியும் . பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று . காங்கிரஸ் கட்சி இதனை அரசியல்ரீதியான நோக்கம் கொண்டது , மக்களைப் பிரிப்பது என கருத்து சொல்லியிருக்கிறது . இச்சட்டம் மூலம் கால்நடைப்பண்ணைகளில் பசுக்களை திருடுவது குறையும் என விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் கூறியுள்ளன . விமர்சகர்கள் இது தேவையில்லாத சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தும் என்று கருத்து சொல்லியிருக்கின்றனர் .

அரசியலமைப்புச்சட்டப்படி செல்லாத சட்டம் லவ் ஜிகாத், தேர்தலுக்காக இதனை முன்னிலைப்படுத்துகிறார்கள்! - மிஹிர் ஶ்ரீவஸ்தவா, எழுத்தாளர்

படம்
                  லவ் ஜிகாத் என்பது தேர்தலைக் குறிவைத்து நடக்கும் யுக்தி எழுத்தாளர் மிஹிர் ஶ்ரீவஸ்தவா பிரன்ட்லைன் திவ்யா திரிவேதி லவ் ஜிகாத் என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாக எப்படி கூறுகிறீர்கள் ? உண்மையில் இந்தியாவில் நடக்கும் இயல்பான திருமணங்களை ஊடகங்கள் உலகில் பார்வையில் வேறுவிதமாக மாற்றிக் காட்டுகிறார்கள் . இது எப்படியென்றால் அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் யாருடைய பக்கம் செயல்படுகிறதென அனைவருக்கும் தெரியும் . அதில் வரும் செய்திகள் எப்படி , யாருக்கு சார்பாக இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா ? அதுபோலதான் இதுவும் . என்ஐஏ இதுவரை லவ் ஜிகாத் என்பதற்கான ஒரு ஆதாரத்தைக் கூட காண்பிக்கவில்லை . திருமணம் செய்துகொண்ட சிலரை ஊடகங்களும் காவல்துறையும் குறிவைக்கின்றனர் . வழக்கு , சர்ச்சை காரணமாக அவர்கள் வாழ்க்கை நாசமாகிறது . ஊடகங்கள இதனை பெரிதுபடுத்தி லாபம் சம்பாதிக்கின்றனர் . புலனாய்வு அமைப்புகள் ஒருவரின் திருமணம் தேசபாதுகாப்பிற்கு ஆபத்து என அலறுகின்றன . இதெல்லாம் தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் செய்யும் தூண்டுதல்தான் .   அப்போது இந்துகள் ஆபத்த

சாதி வன்முறைகளை மறைக்கவே இந்தியா அகிம்சை நாடு என்று கூறப்பட்டது! - அபர்ணா வைதிக், வரலாற்று ஆய்வாளர்

படம்
              வரலாற்று ஆய்வாளர் அபர்ணா வைதிக் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் லவ் ஜிகாத் முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புழக்கமாகி நடைபெற வாய்ப்புள்ளதா ? இந்து என்பதை நம்மில் பலரும் கேட்டுப்பழகியது 19 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் என்பதை நினைவுகூருங்கள் . அப்போதிலிருந்து இந்து என்பது பெரும்பான்மையான பல்வேறு ஊடகங்களில் ஒலித்தபடிதான் இருக்கிறது . ஆனால் லவ் ஜிகாத் என்ற சட்டம் இப்போது குறிப்பிட்ட மாநிலத்திற்கான சட்டமாக உள்ளது . நாளை இது நாடு முழுக்க அமலாகும் வாய்ப்புள்ளது . லவ் ஜிகாத் என்ற சட்டம் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டமாக இருந்தாலும் இது இந்து முஸ்லீம் என்ற இரு மதங்களைக் கொண்டது மட்டுமல்ல . முஸ்லீம் , கிறிஸ்துவ அமைப்புகள் உத்தரப்பிரதேசத்ததிலுள்ள சமர் , சந்தால் , தோம் , லாய் பேகிஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரை தங்கள் மதத்திற்கு மாற்றிவந்தன . இதனால்தான் ஆரிய சமாஜமும் , இந்து மகாசபையும் இந்து மக்கள் எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினர் . லவ் ஜிகாத் என்பதே மேல்சாதியைச் இந்து பெண்களை கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்கள்

பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி

படம்
        அதுல் சதுர்வேதி         விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே ? இந்த அமைப்பு தனியார் துறையினர் பால் , இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது . இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும் . இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் . வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும் . உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? நீங்கள் கூறும் உற்பத்தித்திறன் , பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன . நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும் , பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம் . அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் . இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்