இளம்பெண் கொல்லப்பட்டது சாதிரீதியான கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்! பிரசாந்த் குமார், ஏடிஜிபி, உ.பி
வல்லுறவு நடக்கவில்லை! பிரசாந்த் குமார். ஏடிஜிபி, உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? செப்.14க்குப் பிறகு உளவுத்துறை தகவல்படி, சாதி மோதல்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறவிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வரும் மிரட்டல்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை பயன்படுத்தினோம். நாங்கள் பாதுகாப்பு வழங்காதபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தாலும் காவல்துறைதான் பொறுப்பு என்பார்கள். உள்ளூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமைதான். இறந்துபோன பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்திருக்கும் என்கிறீர்களா? இன்னும் வழக்கு பற்றிய முறையான விஷயங்களை பதிவு செய்யவில்லை. சிபிஐ விசாரணை எதற்கு? வழக்கு வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாக மாநில காவல்துறை, சிபிஐயோடு இணைந்து செயல்படவிருக்கிறது. சாதி மோதல்களை ஏற்படுத்த முனைந்த குழுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? இந்த சதியை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை செய்து வரு