இடுகைகள்

சுகேத் திட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

படம்
  சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்! உடனே எங்கே என்றுதானே அனைவரும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் அல்ல. பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி மாவட்டத்தில் இப்படி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுகேத் எனும் கிராமத்தில்  கிராம மக்களுக்கு இலவசமாக கிடைத்த கேஸ் சிலிண்டர்களை தொழுவத்திலுள்ள சாணி, குப்பைகளைக் கொடுத்து இலவசமாக எரிவாயும் நிரப்பிக்கொள்ளலாம். இதனை உருவாக்கியவர்கள் இருவர். இருவருமே சமஸ்பூர் மாவட்டத்தில் மத்திய விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருவரின் பெயர் ராஜேந்திர பிரசாத், மற்றொருவர் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா.  மத்திய அரசு கிராம மக்களுக்கென இலவசமாக கேஸ் சிலிண்டர்களை உஜ்வாலா திட்டத்தின்படி வழங்கி வருகிறது. இதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். அப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனை எரிவாயு நிரப்ப போதுமான பணம் கிராமத்து ஏழை மக்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்காகத்தான் பசுக்களின் சாணியைக் கொடுத்து எரிவாயுவை நிரப்பும் மாடலை உருவாக்கினோம் என்றார் ஸ்ரீவஸ்தவா. பீகாரின் முசாபர் நகர், ஜார்க்கண்டின்  டியோகர் நகரிலுள்ள கோவில்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், இலைகள் ஆகியவற்றை