இடுகைகள்

377 சட்டம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

377 சட்டத்தை நீக்க போராடும் வக்கீல் குழு!

சர்ச்சை சட்டம் 377! ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளியாக்கும் இந்தியச்சட்டம் 377(1862) யை மாற்றக்கோரி பல்வேறு மனித உரிமை அமைப்புகள் , எல்ஜிபிடிக்யூ (  LGBTQ- Lesbian ,  Gay ,  Bisexual , and  Transgender ) குழுவினரும் போராடி வருகின்றனர் . 1871 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இச்சட்டப்படி இயற்கைக்கு விரோதமான வழியில் பாலுறவு கொள்வோருக்கு அபராதம் பிளஸ் ஆயுள் வரை தண்டனை அளிக்க முடியும் .  எல்ஜிபிடி குழுவினரை தண்டனையிலிருந்து காக்க , நீகா நாக்பால் , பிரீதா  குமார் , சௌரப் கிர்பால் , மேனகா குருசாமி , அருந்ததி கட்ஜூ உள்ளிட்ட ஐவரைக் கொண்ட வழக்குரைஞர்கள் குழு வாதிட்டு வருகிறது . " எனது நண்பர்கள் கூட இச்சட்டத்தினால் குற்றவாளியாக்கப்படும் நிலை இவ்வழக்கை மனிதநேயப்படி வாதாட எடுத்துள்ளேன் . அரசியலமைப்பு சட்டப்படி இச்சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை உண்டு ." கனிவாக பேசுகிறார் வழக்குரைஞர் நீதா நாக்பால் .  இக்குழுவிலுள்ள பிற வழக்குரைஞர்கள் நால்வரும் வழக்கிற்கான ஆராய்ச்சிப்பணியைச் செய்து வருகின்றனர் . மேனகா கு