இடுகைகள்

நாகப்பட்டினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுனாமி பாதிப்பால் உருவான நன்செய் அமைப்பின் சூழல் பணி!

படம்
  2004ஆம் ஆண்டு. டிசம்பர் 26 அன்று நாகப்பட்டினம் கடற்புரத்தில் சுனாமி பேரழி ஏற்பட்டது. அதை இன்றுவரை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை. அந்தளவு இயற்கை தன் ஆற்றலை மனிதர்களின் கட்டுமானங்கள் மீது பதிவு செய்தது.  அப்போது ஜே செந்தில்குமாருக்கு வயது 18. வரலாறு படிப்பில் இளங்கலைப் பட்டதாரியாக இருந்தார். சுனாமி பாதிப்பை ஈடுகட்டும் செயல்களில் ஈடுபட்ட மனிதர்களோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.  பதினெட்டு ஆண்டுகள் ஆனாலும் பாதிப்பை இன்னும் செந்தில்குமார் மறக்கவில்லை. சூழலியல் பாதிப்பை சரிசெய்ய 2019ஆம் ஆண்டு நன்செய் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு தேனி பகுதியில் பசுமையான சூழல் பரப்பை உருவாக்க உழைத்து வருகிறது.  2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இயற்கை பேரழிவுதான் எனக்கு சூழல் பற்றிய கவனத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் காலநிலை மாற்றம், வெள்ளம் இப்படி பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்களைத் தேடினேன் என்றார் செந்தில்.  நன்செய் அமைப்பின் முக்கியமான பணி, ஆணிகளைப் பிடுங்குவதுதான். அதாவது, மரத்தில் சுடர்மணி ஜட்டி, ஜான்சன் சூப்பர் மார்க்கெட், ஜியோ தள்ளுபடி ஆஃபர் என ஒட்டிவிட்டு செல்கிறார்கள் அல்லவா? இவற்றைப் பிடுங

நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

படம்
  நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார்.  மண்ணுக்கு சொந்த