இடுகைகள்

சேதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலநடுக்கத்தை முன்னறிவோம்!

படம்
  நிலநடுக்கத்தை முன்னறிவோம்! பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு வருகிறது. இந்த அ

ஆற்றுத் துண்டாடலால் நடைபெறும் சேதங்கள்! - வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு கூடுகிறது!

படம்
வெள்ளத்தால் மாறும் ஆற்றின் வழித்தடம்! 2008ஆம் ஆண்டு, இந்தியா- நேபாளத்தின் எல்லையில் உள்ள கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, 30 லட்சம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் அழிந்தன.  வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே கூறாத அறிவியலாளர்கள், அரசு ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன என்பதே உண்மை. இந்த சம்பவத்தில் நாம் அறியவேண்டியது, ஆறு தன் வழித்தடத்தை மாற்றிக்கொள்வதேயாகும்.  பெரியளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகு, ஆற்றின் வழித்தடம் மாறுவதற்கு, ரிவர் அவல்ஷன் (River avulsion) என்று பெயர். தமிழில் வெள்ளத் துண்டாடல் எனலாம். ஆற்றின் வழித்தடத்தில் காலப்போக்கில் அரித்துச் செல்லும் மண்ணில் உள்ள வண்டல் கீழே படியும். இப்படி படியும் மண் ஆற்றின் நீர்ப்போக்கைத் தடுக்கும். இதனால் ஆற்றின் நீர் வேறுவழியாக செல்ல முயலும். இதனால் ஆற்றின் கரைப்பகுதிகளில் ஏற்படும் சேதம், நிலநடுக்கம் ஏற்பட்டால் உருவாவதைப் போலவே இருக்கும். கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோசி ஆறு, வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் வழித்தடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு மாறியது. ஆற்ற