இடுகைகள்

அருண் நல்லதம்பிகட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு

வண்ணத்தால் நீர்த்துப்போகும் மக்களின் வாழ்வு                    அருண் நல்லதம்பி         மஞ்சள், துணிகள், மக்களின் விருந்தோம்பல் என்று பலவகைகளில் பெரும் புகழ்பெற்றது ஈரோடு மாவட்டம். செய்யும் தொழில் என்பது தனக்கு தரும் பயன்களை விடவும் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கணக்கிலெடுத்து செயல்பட்டது முன்னோர்களின் காலமாகிவிட்டது. இன்று பெருகிவரும் உலகமயமாதல் சூழல், தாராளமயக்கொள்கை என பல்வேறு நாடுகள் தொழிற்சாலைகளின் கழிவுகளை இயற்கையை பாதிக்காமல் அழிப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர். ஆனால் கிடைக்கும் வருவாய் இயற்கையை குறித்து மட்டுமல்ல தன் சக மனிதர்கள் குறித்தும் சிந்திக்க இடம் தர மறுத்து எஜமானனாகிவிடும் போது, நம் நிலைதான் என்ன? வியாபாரத்தில் கெட்டி! மக்கள் நலத்தில்?             ஈரோடு மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சாயத்தொழிற்சாலைகள் பலவும் அரசின் ஒழுங்குமுறைக்குப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று முறையா