இடுகைகள்

பேருந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைப் பயணம்!

     சென்னைப் பயணம் - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... மாணவர் நாளிதழில் வேலை செய்து அதைவிட்டு விலகிய பிறகு, நேர்காணல் ஒன்றுக்கு ஒருமுறை சென்னைக்கு சென்றதோடு சரி. அதற்குப்பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஒருமுறை, பாத்திரங்களை எடுக்கச் சென்றபோது மெட்ரோ ரயில் காரணமாக மயிலாப்பூர் குதறப்பட்டிருந்தது. அப்போது, பேருந்துகள் எங்கே சென்று எங்கே திரும்புகின்றன, எது பேருந்து நிறுத்தம் என்றே தெரியவில்லை. அப்படியான நிலையில்தான் மயிலாப்பூர் அன்றைக்கு இருந்தது.அன்று அறையில் உள்ள அத்தனை பாத்திரங்களையும் முழுக்க எடுக்கமுடியவில்லை. பாதி பாத்திரங்களை அய்யங்கார் எங்கே உள்ளது என மறந்துவிட்டார். பிறகு, நாங்கள் ஊருக்கு வந்தபிறகு பாத்திரங்கள் தன்னுடைய அறையில்தான் உள்ளன என்று பொறுப்போடு தெரிவித்தார். அந்த முறை பயணத்தில் அம்மாவும் உடன் பயணித்தார். இருவருக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகியது. ஓரியண்ட் ஃபேனை எல்லாம் ஒருவழியாக சரக்கு கட்டணம் கொடுத்து கொண்டு வந்துவிட்டோம். ஆனால் சென்னையில் மிச்சமுள்ள பாத்திரங்களை போய் எடுத்துவா என்று அம்மா, சொல்லிக்கொண்டே இருந்தார். அவருக்கு சில பாத்திரங...

நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!

 நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்! தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.  கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா...

நான்கு இட்லி ஒரு உளுந்துவடை - பேக்கேஜ் உணவுக்கடைகளின் வணிக உத்திகள்

 நான்கு இட்லி ஒரு உளுந்துவடை திருவண்ணாமலை செல்வது என்பது அங்கு குடிகொண்டுள்ள தெய்வத்தை பார்க்க அல்ல. அப்படி நிறையப் பேர் நினைப்பார்கள். அந்த தெய்வத்தை வழிபடும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை. எனவே, அந்தப்பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை. பதிலாக மதுரை காரியாப்பட்டியிலிருந்து புலம் பெயர்ந்து திருவண்ணாமலையில் வாழும் நண்பரை பார்க்க சென்றேன். பெரிதாக ஒன்றும் இருக்காது. அவருடன் பேசுவது, நான்கைந்து கடைகளில் இட்லி, புரோட்டா தின்பது, சில நூல்களை வாசிப்பது அவ்வளவுதான் திருவண்ணாமலைக்கான பயணம் என்பது. பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது.  சிலசமயங்களில் ஆன்மிக நண்பர், வெளிநாட்டு பக்தர்களுக்கு புகைப்படம், வீடியோ எடுத்து தருவது என ஒப்புக்கொண்டு வேலை செய்வதுண்டு. அப்போது தன்னைப் பார்க்க வரும் என்னைப்போல ஆசாமிகளை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டுவிடுவார். அப்புறம் என்ன ஏற முடியாத மலைகளில் பேண்டும் சட்டையுமாக தொங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இப்படி ஒருமுறை கந்தாஸ்ரமம் செல்ல முயன்றபோது நேரிட்ட இடர்ப்பாடு சொல்ல முடியாத கஷ்டத்தை உடலுக்கும் மனதுக்கும் கொடுத்தது.  முஸ்லீம்கள் தாங்கள் வாழும் நாடு எதுவாக இருந...

வாசனையாக மாறியவளை முகரும் நாசி!

படம்
  பேருந்தில் ஏறும்போதே வாசனையின் தாழியில் வழிதவறி விழுந்தேன் மெல்ல மெல்ல நாசிகளில் நிரம்பிய வாசனை ஒரு பெண்ணின் உடலிலிருந்து என தோன்றியபோது.. நறுமணத்தில் மூழ்கத் தொடங்கியிருந்தேன்.   தீராத வாசனை திசையெங்கும் அலைக்கழித்தது திடீரென வாசனை வற்றிப்போனது மெதுவாக குறைந்த வாசனை நாசியைக் கூட அறியாமல் கடந்து போயிருந்தது அதிர்ச்சியுற்றவனாக கடந்த வாசனையின் வழிதேடி ஓடத் தொடங்கினேன். கூந்தல் அலைபாய ஒருத்தி மட்டும் முன்னே போய்க்கொண்டிருந்தாள். தீரா வாசனை அவளுடனே சென்று கொண்டிருந்தது முழுமையாக வாசனையாகவே மாறியிருந்தாள் நான் நாசியாக…  கவிதை- குமார் சண்முகம் படம்  - பிக்ஸாபே

நுகர்வை குறைத்தால் சூழல் பிழைக்கும்!

படம்
  நுகர்வைக் குறைத்தால் சூழல் பிழைக்கும்! உலகளவில் வெப்பமயமாதல், சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நீர், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் அளவு கூடுவது, சூழலின் சமநிலையை நிலைகுலைய வைக்கும். இந்த விளைவுகளை சமாளிக்க நாம், நமது நுகர்வைக் கவனித்து குறைத்தாலே போதுமானது.  மின்சாரத்தைப் பயன்படுத்துவது என்பது, இன்று நவீன வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சமாக மாறிவிட்டது. வீடு, வணிகம், தொழிற்சாலை என மின்சாரப் பயன்பாடு தடையில்லாமல் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து முயன்று வருகின்றன. ஐ.நாவின் மனித மேம்பாட்டு தொகுப்பு பட்டியில் (HDI) கூட தனிநபர் செலவழிக்கும் அளவு 2000 - 3000 கிலோவாட்(kWh) என்று கணிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தை வைத்து ஒருவர் செலவழிக்கும் தோராய மின்சார அளவு கணிக்கப்படுகிறது. இதன் வழியாக அவரது வாழ்க்கை எப்படி செழிப்பாக அல்லது ஏழ்மையாக உள்ளதா என கணிக்கிறார்கள்.   வளர்ந்த மேற்குநாடுகளில் ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒருவரின் வருமானத்திற்கும், அவரின் மின்சார நுகர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன...

நான் செய்த விஷயம் காலத்திற்கும் நிலைத்து நிற்கவே நூல் எழுதினேன்! - சோனு சூட் , இந்தி நடிகர்

படம்
                சோனு சூட் திரைப்படங்களில் நடித்து வில்லனாக பெற்ற புகழை விட மனிதநேய உதவிகளால் உலக நாடுகள் வரை பாராட்டப்படும் ஆளுமை . மும்பையில் இவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரிடமே உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என அமைச்சர்களே சொல்லத்தொடங்கினர் , ஆனால் மாநில அரசு அவரை பாஜகவின் ஆளாக பார்த்து விமர்சித்தது . பின்னர் சோனுசூட் முதல்வரை சந்தித்த பிறகு நிலைமை மாறியது . அதெல்லாம் விடுங்கள் . ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோனு சூட்டிற்கு மனிதநேய உதவிகளை மக்களுக்கு வழங்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது . அதேநேரம் ஐயம் நோ மேசியா என தன்னுடைய சுயசரிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் . இப்படி புத்தகம் எழுத உங்களைத் தூண்டியது எது ?   பேராசிரியராக பணியாற்றி என் அம்மாதான் இதனைச் சொன்னார் . உன்னுடைய வாழ்க்கையை நீ காகித்ததில் எழுதி வைக்கவேண்டும் . அதுதான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றார் . இந்த நூலின் மூலம் கர் பேஜோ திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டவது என பலரும் அறிய வாய்ப்பு கிடைக்க...