இடுகைகள்

கனிமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ

செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பீகார், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான காடுகள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடிகளின் வாழ்க்கை மோசமாகிக் கொண்டே வருகிறது. கனிமங்களை அகழ்ந்தெடுக்க இம்மக்களை பல்வேறு வசதிகளைத் தருவதாக கூறி வேறு இடங்களுக்கு மாற்ற அரசும், தனியார் அமைப்புகளும், கூலிப்படையினரும் முயன்று வருகின்றனர. அங்கு மக்கள் எப்படி இருக்கிறார்கள் என செருக்குறி ராஜ்குமார் எழுதிய கட்டுரைகளின் சுருக்கமான தமிழாக்கமே இந்த நூல்.  நூலை வாசிப்பதன் மூலம் ஆதிவாசி பழங்குடிகள் எந்தளவு அரச பயங்கரவாதத்தின் பாதிப்பில் உள்ளனர் என்பதை அறியலாம். நூலில் உள்ள இந்து நாளிதழுக்கு செ.ரா அளித்த நேர்காணல் முக்கியமானது. அதில் அவர் வெளிப்படையாக பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதில் கட்சி ரீதியான விமர்சனங்களும் உள்ளடங்கும்.  நூலை ஸ்கேன் செய்தும் வாசிக்கலாம்.... நூல்களை வாசிக்க.... செவ்வானத்தில் வெள்ளை நட்சத்திரம் நூல் https://www.amazon.in/dp/B0BNQFWFL5 நட்பதிகாரம் https://www.amazon.in/dp/B08B14WJ6M நெ.1 சமூக தொழில் அதிபர் https://www.amazon.in/dp/B08CCW8P7F ஜனநாயக இந்தியா https://www.am

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!

படம்
  வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்! பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.  சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.  நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.  பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வா

புவியியல் - கனிமத்தைக் கண்டறிவது எப்படி?

படம்
  கனிமத்தை அறிதல் சில கனிமங்கள் நீலம், மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கும். இப்படி இருந்தால் இவற்றை எளிதாக கனிமங்கள் என அடையாளம் காணலாம். கனிமங்களுக்கு ஏற்படும் நிறத்தை குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள ஒளியை உள்வாங்கும் காரணம் எனலாம். கனிமங்களின் வடிவமைப்பிற்கு ஏற்றபடி ஒளியை உள்வாங்கும் தன்மை அமையும். இதன்காரணமாக இதன் நிறங்களும் மாறும்.  கிரிஸ்டல் பொதுவாக அனைத்து கனிமங்கள் கிரிஸ்டல் அமைப்பில் இருக்கும். அனைத்து அணுக்களும் குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் முப்பரிமாண தன்மையில் அமைந்திருப்பதை கிரிஸ்டல் அமைப்பு எனலாம். அணுக்களும் அதன் பிணைப்பும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். அணு அல்லது மூலக்கூறுகள்  ஒரே மாதிரியான அமைப்பில் இணைந்திருப்பதை யூனிட் செல் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த யூனிட் செல்களே, கிரிஸ்டல் அமைப்பை தீர்மானிக்கின்றன.  யூனிட் செல்கள் ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தாலும் கனிமங்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் சேர்க்கைகளைக் கொண்டவை. கிரிஸ்டல் அமைப்பு, அணுக்களின் கட்டமைப்பு, நிலப்பரப்பு சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைகிறது.  தகவல் Nature guide rocks and minerals

புவியியல் - துணுக்குகள்!

படம்
  ப்ரூசைட் 1824ஆம் ஆண்டு, அமெரிக்க கனிமவியலாளர் ஆர்ச்சிபால்ட் ப்ரூஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்ட கனிமம். புரூசைட் என்பது, மெக்னீசியம் ஹைட்ராக்சைடு கலவை. வெள்ளை, பச்சை, பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களின் கலவையாக இருக்கும்.  காணவேண்டிய குகைகள் ஆர்டா குகை, ரஷ்யா கடல் நீருக்கடியில் உள்ள குகை. உலகில் கடல் நீருக்கடியில் அமைந்த நீளமான குகைகளில் இதுவும் ஒன்று. உலகளவில் ஆழ்கடல் நீச்சல்வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் இதுவே.  ஹாங் சன் டூங், வியட்நாம் குகையில் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. உலகில் உருவான இயற்கையான பெரிய குகைகளில் இந்த குகை, முக்கியமானது. மரங்கள் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக உயரத்தில் வளர்ந்துள்ளன.  டாப்சின்ஸ்கா ஐஸ் கேவ், ஸ்லோவேகியா இந்த குகையில் உள்ள சுவர்கள் எல்லாமே ஐஸால் ஆனவை. 26 மீட்டர் உயரத்திற்கு ஐஸ் உருவாகியுள்ளது. வெளியிலுள்ள காற்று குகையின் வெப்பநிலை மைனஸ் 3.8 டிகிரி செல்சியசாக பாதுகாக்கிறது.  ஜெயன்ட் காஸ்வே (Gaint causeway) அயர்லாந்தின் வடக்குப்பகுதியில் ஜெயன்ட் காஸ்வே அமைந்துள்ளது. இங்கு கற்களால் அமைந்த தூண்கள் போன்ற வடிவில் பாறைகள் காணப்படுகின்றன. இங்குள

துரத்தும் துரோக சதிவலையில் மாட்டிக்கொள்ளும் இளவரசன் பால்! - டுயூன் 2021

படம்
  டுயூன் ஆங்கிலம் ஆங்கிலத் திரைப்படம். ஹாலிவுட்டில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படம். இதனை நவீன தொழில்நுட்பத்தில் வினோதமான பல்வேறு பொருட்களை வைத்து பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.  என்ன கதை? இதுவேறுவகையான உலகம். இப்போது உலகம் என்பது விண்வெளியில் தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு உலகங்களை கட்டுப்படுத்துவது பேரரசர். அவருக்கு கீழே உள்ள கப்பம் கட்டும் சிற்றரசர்கள் பலர் உண்டு. அதில் புகழ்பெற்றது, அட்ரெய்டஸ். இதற்கு எதிரி பாரோன்.  பாரோன், பல்வேறு ஆண்டுகளாக அதாவது எண்பது ஆண்டுகளாக அராக்கிஸ் எனும் பாலைவனத்தை கைக்குள் வைத்து ஆள்கிறார்கள். அங்குள்ள ஸ்பைஸ் எனும் கனிம வளமே முக்கியமான காரணம். ஆனால் திடீரென பேரரசர், அந்த பாலைவனம் இனி அட்ரெய்டஸிற்கு சொந்தம். பாரோன் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கூறிவிடுகிறார். இதனால் அங்கு அட்ரெய்டஸ் அரச குடும்பமும், ராணுவமும் செல்கிறது. ஆனால் அது அட்ரெய்டஸ் குடும்பத்தை அழிக்க பேரரசர் விரிக்கும் வலை. சதித்திட்டம் என்பதை அட்ரெய்டஸ் அரசர் டியூக் அறிவதில்லை. அறிந்தாலும் சொல்லாமல் இருக்கிறார் என கொள்ளலாம்.  அவருக்கு ஒரே நம்பிக்கை அவரது மகன் பால் அட்ரெய்டஸ் தான். வ

எது கனிமம்?

படம்
  தெரியுமா ?  எது கனிமம்? நிலக்கரி, எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றையும் கூட கனிமம் என பொதுவாக கூறலாம். இவை தேசத்தின் முக்கியமான இயற்கை வளங்களாகும். மேற்சொன்ன பொருட்களை துல்லியமாக அடையாளப்படுத்த ஹைட்ரோகார்பன் எனலாம். திரவங்கள் மற்றும் வாயுக்களை கறாரான விதிகளின்படி பார்த்தால் கனிமம் இல்லை என்று கூறிவிடலாம். வைரம், மரகதம் ஆகியவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன. இயற்கையாக உருவாகவில்லை என்பதால் இவற்றை கனிமம் என்று கூறமுடியாது. உணவில் உள்ள கனிமங்கள் என்று கூறப்படுபயான இரும்பு, கால்சிய்ம, ஜிங்க் ஆகியவற்றையும் துல்லியமாக கனிமம் என்ற வகையில் வரையறுக்க முடியாது.  ஒரே வேதிப்பொருட்களைக் கொண்ட உலோகங்கள்  தங்கம், செம்பு.  உலோகமல்லாத சல்பர், கார்பன் ஆகியவற்றை இயற்கையான கூறுகள் (Native elements) எனலாம்.   உலோகம் அல்லது பகுதியளவு உலோகம் சல்பருடன் இணைந்தால், அதனை சல்பைடு எனலாம். எ.டு. சால்கோசைட் (Chalcocite) இதிலுள்ள உலோகம், செம்பு.  நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வேதிப்பொருட்கள் உலோகத்தோடு இணைந்தால் அதனை ஹைட்ராக்சைடு எனலாம். எ.டு. ப்ரூசைட் (Brucite), இதிலுள்ள உலோகம், மாங்கனீசு.  ஹாலோஜன் பொருட்களான குளோரின

ரத்தினங்கள் - அறிவோம்

படம்
  ரத்தினங்கள் ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.  கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும்.  தகவல் nature guide rocks and minerals book

வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! - புதிய ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கனிமம்

படம்
  வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்

படம்
  பிரகாஷ் லூயிஸ்  எழுத்தாளர் நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா? இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.  நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.  ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா? 2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோ

குடும்பத்தை, காதலை காப்பாற்றுவதை விட நாடே முக்கியம்! ஸ்டோர்ம் ஐ - சீன தொடர்

படம்
              ஸ்ட்ரோம் ஐ சீன தொடர் Director: Yu Bo (于波) Screenwriter: Liang Zhen Hua , Jia Chang An , Jiang Da Qiao யூட்யூப் தீவிரவாத அமைப்புகளுக்கு விற்கப்படும் கனிம விற்பனையை உளவு அமைப்புகளை எப்படி கண்டுபிடித்து தடுக்கின்றன என்பதுதான் மையக்கதை . தேசிய பாதுகாப்பு , நாடு என்று வந்துவிட்டால் தனிப்பட்ட நபர்களுக்குள் காதலோ , நட்போ இருக்கக்கூடாது என உறுதியாக வலியுறுத்தும் தொடர் . சீனாக்காரர்கள் என்பதால் இப்படி கூறப்பட்டிருக்கலாம் . தேசிய உளவு அமைப்பின் தலைமையகம் ( பெய்ஜிங் ), ஜின்குவா என்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்தை கண்காணிக்கிறது . இதன் வணிகம் சார்ந்த நடவடிக்கைகள் சந்தேகமாக இருப்பதால் , தனது இரண்டு திறமையான அலுவலர்களை சாங்குவான் நகருக்கு அனுப்புகிறது . சாங்குவான் நகரில் உள்ள உளவு அமைப்பின் கிளைப்பிரிவு உளவாளி ஒருவரை பின்தொடர்கிறது . ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிகிறது . ஆனால் அந்த உளவாளியை பின்தொடர்ந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடிப்பதில் மேற்சொன்ன இரண்டு திறமைசாலிகள் உதவுகின்றனர் . கிளை அமைப்புடன் தலைமையக ஆட்கள் இருவரும்

கடல் சூழலை ஆராயும் தானியங்கி ஆய்வுப்படகு! - செயில்ட்ரோன்

படம்
  கடலை ஆராயும் செயில்ட்ரோன் ஆய்வுப்படகு! கடல் பகுதியை ஆய்வுக்கருவிகள், சாதனங்கள் மூலம் ஆராய்வது மெல்ல வேகம் பிடிக்க த் தொடங்கியுள்ளது. இதனை ஆராய்வதில் கடல் பாதுகாப்பு, இயற்கைவளம் , வணிகம் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கடல் போக்குவரத்து, அதிலுள்ள வளங்கள், உயிரினங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்வது என்பது,  நவீன காலத்திலும் சவாலாக உள்ளது. தற்போது அமெரிக்காவில் செயில்ட்ரோன் எனும் தானியங்கி ஆய்வுப்படகு  உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் ஆய்வுகளை செய்யமுடியும் என்று கூறுகிறார்கள். இதில் ஆய்வுக்காக யாரும் பயணிக்க வேண்டியதில்லை.  செயில்ட்ரோன் 72 அடி நீளம் கொண்ட செயில்ட்ரோன், பாய்மரப் படகு போன்ற வடிவிலானது. தானியங்கி முறையில் இயங்க கூடிய செயில்ட்ரோன், தோராயமாக 3,688 மீட்டர் தூரம் கடலை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. காற்று மற்றும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஓராண்டிற்கு இடையறாது கடலில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம். இதில் பொருத்தப்பட்டுள்ள சோனார் கருவியிலிருந்து உருவாகும் ஒலி அலைகளால்  7 ஆயிரம் மீட்டர் தூரம் கடலை அளவிடலாம். செயற்கைக்கோளுடன் இணைப்பிலுள்ள செயில்

விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்

படம்
pixabay எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர் விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும். ஆஸ்டிராய்டு மைனர் கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான். அட்மாஸ்பியர் ஓவர்சீயர் பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும். கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்!  இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. புரோபல்சன் இஞ்சினியர்! இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா,