செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்
pixabay.com செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல! நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை. நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி. pixabay.com பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, க