இடுகைகள்

ஶ்ரீரங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்கா எனும் அசோகவனத்தில் அலைகழியும் ராமன்! - அமெரிக்க தேசி - அருண் நரசிம்மன்

படம்
              அமெரிக்க தேசி அருண் நரசிம்மன் தமிழினி திருச்சி ஶ்ரீரங்கத்தில் படித்த இயற்பியல் பட்டதாரி அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பு படிக்கச் சென்று அந்த கலாசாரத்தில் கலந்து என்ன கற்றுக்கொண்டார் , பெற்றுக்கொண்டார் என்பதுதான் கதை . தேசிகன் நரசிம்மச்சாரி என்ற கதைநாயகனின் பெயர்தான் , அமெரிக்கன் தேசி என்று மாறியிருக்கிறது . நூல் ஏறத்தாழ சேட்டன் பகத்தின் நாவல் போன்றதுதான் என்று மேலோட்டமாக தோன்றும் . ஆனால் வாசிக்கும்போது , அந்த நினைப்பே உங்களுக்குள் வராது . காரணம் , அருண் நரசிம்மன் அந்தளவு தமிழ் இலக்கிய விஷயங்களை உள்ளே நுட்பமாக வைத்திருக்கிறார் . தமிழ் பாசுரங்களை , திருக்குறள்களை சூழலுக்கு ஏற்ப நுணுக்கமாகப் பயன்படுத்தியிருப்பதால் நாவல் எழுநூறு பக்கத்திற்கு நீண்டாலும் பெரிய சோர்வு ஏற்படவில்லை . நிறைய இடங்களில் அவல நகைச்சுவை காட்சிகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது . எழுத்தாளரின் சொல்லாட்சி ஆச்சரியப்படுத்துகிறது . தேசிகன் என்ற வடகலை பிராமணர் , அமெரிக்காவில் தான் காணும் அனைத்