இடுகைகள்

மதம்-துறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியூஜென் துறவிகள்- சமணத்தில் துறவு எப்படி சாத்தியமாகிறது?

படம்
புதிய தலைமுறை துறவிகள் !- ச . அன்பரசு அண்மையில் மும்பையில் சமண மதத்தைச் சேர்ந்த பதினாறு நபர்கள் புத்தம்புது துறவியாக தீக் ‌ ஷை பெற்றுள்ளனர் . இவர்களில் பெரும்பாலானோரின் வயது முப்பதே முப்பதுதான் . துறவியான அனைவருமே தொழிலில் , கல்வியில் , பணியில் அத்தனையிலும் டாப் பொசிஷனில் இருப்பவர்கள் . ஏன் தங்கள் பணியை , சொத்துக்களை விட்டு பிச்சைப்பாத்திரம் ஏந்த விரும்புகின்றனர் ? மும்பை புறநகரான போரிவலியில் அமைந்துள்ள சிம்பொலி கிரிக்கெட் மைதானம் . விஐபி வீட்டு கல்யாணம் போல சொகுசு கார்களில் ஜிகுஜிகு சேலைகளில் முகம் மலர்ந்த சிரிப்புடன் பெண்கள் இறங்குகின்றனர் . குளுமையான நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர் . மெல்லியதாக இசை ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த ஸ்பாட்டில்தான் பதினாறு துறவிகளின் வாழ்க்கை புத்தம் புதிதாக தொடங்கப்போகிறது . ஆண்களும் , பெண்களும் ஸ்ட்ரிக்ட்டாக பிரிக்கப்பட்டு அமர்ந்திருந்த ஹாலில் பண்டிட் மகராஜின் தலைமையில் தீக் ‌ ஷை பூஜை அமளிதுமளியாக நடந்துகொண்டிருந்தது . கேமரா ட்ரோன் ஒன்று நடக்கும் நிகழ்வுகளை