இடுகைகள்

இடதுகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகில் ஜோம்பிகள் உருவாக வாய்ப்புள்ளதா? உண்மையும் உடான்ஸூம்

படம்
      உலகில் ஜோம்பிகள் உருவாவது சாத்தியம்தான் ! ரியல் : 1968 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கில திரைப்படங்கள் வழியாக ஜோம்பிகள் பற்றி சிந்தனைகள் பேசப்படத் தொடங்கின . சாபம் அல்லது நுண்ணுயிரிகளின் தாக்குதல் காரணமாக ஜோம்பிகள் எனும் சதை தின்னும் கொடூர மனிதர்கள் உருவானதாக காமிக்ஸ்கள் , சாகச நாவல்கள் கூறின . பூமியில் நிலவும் கடும் குளிர் , அனல் வெயில் , மழை , புயலுக்கு இவர்கள் தாக்குப்பிடித்து வாழ முடியாது . மூளை செயல்படாதபோது , உடல் உறுப்புகள் தன்னிச்சையாக செயல்படாது . ஜோம்பிகள் பெரும்பாலும் தலையில் அதிகம் காயங்களோடு இருப்பதால் , அவர்கள் நடந்துவருவது , ஒருவரைத் தாக்குவது சாத்தியமில்லை . நுண்ணுயிரிகள் தாங்கள் தாக்கும் உயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை இருக்கும் . ஜோம்பிகள் நுண்ணுயிரி தாக்குதலால் இறப்பதற்கே வாய்ப்பு அதிகம் . ஐம்புலன்கள் வேலை செய்யாது , செரிமானத் திறன்கள் இல்லை என்பதால் ஜோம்பிகள் பூமியில் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை . நாம் பயணிக்கும் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது ரியல் : உண்மை . இங்கு நம்மை சுமந்து பல்வேறு நகரங்களுக்கு இடையில் பறக்கும் விமானங்களின் எந