இடுகைகள்

உலகம்-சர்வாதிகார சவுதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனித உரிமை ஆர்வலர்களை ஒடுக்கும் சவுதி!

படம்
சர்வாதிகாரப்பிடியில் சவுதி ! உலகளவில் பெண்களின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு ஐ . நா அமைப்பினால் விருது பெற்றுள்ள சமார் படாவி மற்றும் நஸிமா அல் - சடா உள்ளிட்ட பெண்ணுரிமை செயல்பாட்டாளர்களை சவுதி அரேபியா அரசு கைது செய்துள்ளது . கடந்த மே 15 அன்று தொடங்கிய பெண்ணுரிமை போராட்டங்களை தொடர்பாக இவர்களோடு மேலும் பல்வேறு போராட்டக்காரர்களையும் அரசு மூர்க்கத்தனமாக கைது செய்து வருகிறது . 2012 ஆம் ஆண்டு ஐ . நா அமைப்பால் துணிச்சல் பெண் என விருது பெற்ற படாவி , பெண்கள் வாகனம் ஓட்டவும் முனிசிபல் எலக்‌ஷன்களின் ஓட்டுபோடவும் பல்வேறு மனுக்களை அரசுக்கு எழுதி அனுப்பிய போராளி . க்வாடிஃப் பகுதியைச் சேர்ந்த அல் - சடா , 2015 ஆம் ஆண்டு உள்ளூர்தேர்தலில் பங்கேற்று பின் போட்டியிட மறுக்கப்பட்ட வரலாறு கொண்டவர் . " சீர்திருத்த பாதையில் நடைபோடும் என எதிர்பார்க்கப்பட்ட சவுதி அரேபியா தொழிலதிபர்கள் , பெண்ணுரிமையாளர்கள் , சீர்திருத்தவாதிகள் உள்ளிட்டோரை கைது செய்வது அரசின் சர்வாதிகார எண்ணத்தை வெளிப்படுத்துகிறது " என்கிறார் மனித உரிமை கண்காணிப்பகத்தைச் சேர்ந்த சாராலெ வொய்ட்சன் . அல் - சடா , படாவி இருவரின