இடுகைகள்

நூல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விதிகளில் சிக்கிக்கொண்டு தடுமாறும் மனித மனங்களின் போராட்டம்! - பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

படம்
  பகடையாட்டம் தத்துவ சாகச நூல் யுவன் சந்திரசேகர் 375 பக்கங்கள் தத்துவநூல் போல தொடங்கி வளர்ந்து திடீரென திகில் திருப்பத்தோடு சாகச நாவலாக மாறி நிறைவடைகிறது. தொடக்கத்தில் படிக்க தடுமாற்றம் இருந்தாலும்  யுவன் சந்திரசேகரின் மாயத்தன்மை கொண்ட எழுத்துகள் நம்மை வாசிப்பிற்குள் இழுக்கின்றன. மூன்று ஆங்கில நூல்களை வாசித்து, அதன் அடிப்படையில் பாத்திரத்தின் தன்மைகளை வடிவமைத்து நாவலாக்கியிருக்கிறார். அதை ஆசிரியர் சொல்லாமல் கூட மறைத்திருக்க முடியும். ஆனால் நேர்மையாக அதை கூறிவிட்டார். நூலின் பின்னுரை முக்கியமானது. தவிர்க்காமல் வாசியுங்கள்.  சீனா, நேபாளத்தின் எல்லையில் உள்ள படைப்பிரிவின் ராணுவ அதிகாரி மேஜர் க்ருஷ்தான் கதையை தொடங்குகிறார். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு சண்டையில் கால்களை இழந்த நண்பன் நானாவதி நினைவுக்கு வருகிறான். இதில் இருந்தே நூலின் தத்துவப்பகுதி தொடங்கிவிடுகிறது. போரின் அபத்தம், அதன் காரணமாக ராணுவம் அறிமுகமில்லாதவர்களை கொலை செய்வது, குழப்பம், உடல் அங்கங்கள் ஹீனமாவது என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் பேசப்பேச நமது மனமும் அதே திக்கில் மெல்ல நகர்கிறது.  க்ருஷ் எதையும் பிறரிடம் சொல்லாத ஆள். ர

புதிய நூல்கள் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
 

இங்கிலாந்து ஊடகங்கள் ஈராக் போரின் போது நடந்துகொண்ட முறை! - நூல் விமர்சனம்

படம்
  வாட் தி மீடியா ஆர் டூயிங் டு அவர் பாலிடிக்ஸ் ஜான் லாய்ட் ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜான் லாய்ட் எழுதிய நூல். தனது செய்தி சேகரித்தலுக்காக முக்கியமான விருதுகளைப் பெற்றவர். அவர் எழுதிய இந்த நூல் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊடகங்கள், ஈராக் போரின்போது எப்படி அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்டன. அதன் விளைவுகள் என்ன என்பதை ஆராய்கிறது.  அரசின் பணத்தில் இயங்கும் இங்கிலாந்து ஊடகமான பிபிசி, ஈராக் போரின் போது எடுத்த நிலைப்பாடு, அதன் இயக்குநர்கள், தலைவர்கள் எப்படி எதுமாதிரியான கருத்தியல் கொண்டவர்களாக இருந்தனர். அரசியல் ரீதியாக ஊடகங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள், கருத்தியல், நிர்வாக ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்த முனைந்த பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் என பல்வேறு விஷயங்களை நூல் பேசுகிறது. இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஊடகங்களை, அங்கு நடக்கும் ஊடக அரசியல் பற்றி பேசிவிட்டு உடனே இங்கிலாந்து நாட்டின் ஊடக பிரச்னைகளுக்கு ஆசிரியர் திரும்பிவிடுகிறார்.  இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்களை தனியார் தொழிலதிபர்கள்தான் நடத்துகின்றனர். இவர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நேரடியான, மறைமுகமான ஆதரவ

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்கட்ட

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படிப்பட்ட நெ

நிர்வாணப்படம் எடுத்து சினிமா வாழ்க்கையை பலிகொடுத்து கொலையான நடிகர்!

படம்
  பாப் கிரேன் சினிமா, டிவி நடிகர்களின் வாழ்க்கையை திரையிலும் அதற்கு பின்னாலும் மக்கள் பின்தொடர்கிறார்கள். கவனிக்கிறார்கள். இப்படி கவனிப்பதில் மக்களுக்கு சுவாரசியம் கூடுகிறது. நடிகர்கள் அவர்களின் புகழுக்கு கொடுக்கும் விலையாக அந்தரங்க வாழ்க்கை உள்ளது. இந்த வகையில் அரிசோனாவைச் சேர்ந்த நடிகர் பாப் கிரேன் இணைகிறார். இவர் 1960களில் வெளியான ஹோகன்ஸ் ஹீரோஸ் தொடரில் முன்னிலை நடிகராக இருந்து பிரபலமானவர். பாலியல் சார்ந்த வினோத பழக்கங்கள் அவரது டிவி தொடர் வட்டாரத்தில் கசிய, வேலைவாய்ப்பை இழந்து, மனைவி விவாகரத்து செய்துவிட குடியில் பாதி அழிந்தார். மீதியை அவரது நட்புகள் அழித்தன. 1978ஆம் ஆண்டு ஜூன் 29 அன்று விண்ட்மில் டின்னர் தியேட்டருக்கு சொந்தமான கட்டிடத்தின் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கொலைக்கு காரணமானவர்களை யாரென இன்றுவரை கண்டறிய முடியவில்லை. இறந்துகிடந்தவரின் கழுத்தில் மின்சார வயர்கள் தொங்கின. இடது காதின் மேற்புறம் பஞ்சு வைக்கப்பட்டு இருந்தது. நாற்பத்தொன்பது வயதில் பாப் கிரேனின் வாழ்க்கை பரிதாபமாக முடிவுக்கு வந்தது. பாப் கிரேனுக்கு இரண்டு மனைவிகள் உண்டு, ஒருவர், அவரது பள்ளிக்கால

தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

படம்
  தெரிஞ்சுக்கோ – விளையாட்டு   டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே. ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும். குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள். 1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற   ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது.   பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.   நூல் இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ்” என்ற நூலின் 6,904   ப

நூலின் மீது காதல் கொண்டவர்களைப் பற்றிய நூல் - பைபிலியோஹாலிசம் - டாம் ராபே

படம்
  பைபிலியோஹாலிசம் நூல் அட்டை டாம் ராபே பைபிலியோஹாலிசம் டாம் ராபே பாரதி புத்தகாலயத்தின் புதிய புத்தகம் பேசுது இதழில் ச.சுப்பாராவ் என்பவர் புத்தக காதல் என தொடரை எழுதி வருகிறார். மாதம்தோறும் நூல்களைப் பற்றிய நூல்களை அறிமுகம் செய்கிறார். அதில்தான் பைபிலியோஹாலிசம் என்ற நூல் கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றி. பைபிலியோஹாலிசம் என்றால் நூல்களை வாங்கி சேகரித்து வைக்கும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம். இந்த வகை குறைபாடு கொண்ட ஆட்கள் உலகில் நிறையப் பேர் உண்டு. இவர்கள் நூல்களை வாசிக்கிறார்களா என்றால் அதில் கவனம் இருக்காது. செம்பதிப்பு, மலிவுவிலைப்பதிப்பு, கெட்டி அட்டை, பளிச்சிடும் தாள் என ஒரே நூலை பல்வேறு தரத்தில் வாங்கி வீடு முழுக்க அடுக்கி வைத்திருப்பார்கள். நூல்களை வாங்கி வீட்டில் கொண்டு வந்து அடுக்குவதே இவர்களது வேலை. இப்படி நூல்களை வாங்குபவர்கள், வாசிப்பவர்கள், அரிய நூல்களை வாங்குபவர்கள், நூல்களை வாசிப்பதே வாழ்க்கை என இருப்பவர்கள என ஏராளமானவர்கள் பற்றி பகடியான முறையில் டாம் ராபே   விவரித்து எழுதியிருக்கிறார். ஏனெனில் அவரே பைபிலியோஹாலிக்தான். நூல்களை வாசிக்கும் வேட்கை கொண்டவர்கள் பற்

அமெரிக்காவில் சீரியல் கொலைகாரர்களைப் பிடிக்க தனிப்பிரிவைத் தொடங்கியவரின் போராட்டம்!

படம்
  மைண்ட் ஹன்டர் நூல் மைண்ட் ஹன்டர் ஜான் டக்ளஸ்   அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான் டக்ளஸ், பிஹேவியர் சயின்ஸ் என்ற பிரிவை எப்படி தொடங்கி சீரியல் கொலைகாரர்களைப்பிடித்தார், அதற்கு அவர் உடல், மன ரீதியாக கொடுத்த விலையைப் பற்றி நூல் நெஞ்சிற்கு நெருக்கமாக நின்று பேசுகிறது. ஜான் டக்ளஸ் என்ற அதிகாரி, குவான்டிகோ காவல்துறையில், புரொஃபைல் செய்யும் ஆய்வுப்பிரிவில் தனி நபராக வேலை செய்து பின்னாளில் அதில் நாற்பது ஆட்கள் வேலை செய்யுமளவு சூழலை மாற்றுகிறார். இந்த முன்னேற்றத்திற்கான பயணம் எப்படி இருந்தது என்பதை அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை பகடியாக விளக்கி கூறுகிறார்.   தொழிலில் ஆர்வம் கூடிய காரணத்தில் பள்ளி ஆசிரியையான மனைவியை விவாகரத்து செய்யும் சூழல் ஏற்படுகிறது. அதையும் அவர் வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறார். ஏனெனில் மனம் முழுக்க குற்றவாளிகளைப் பற்றிய நினைவுடன்தான் வாழ்ந்திருக்கிறார். இது, தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை என அனைவரையும் வளர்த்தெடுத்தது அவரது மனைவி பாம்தான். ஜான் டக்ளஸ் முழுக்க குற்றவாளிகளை பிடிக்கவெனவே தனது ஆற்றலை அற

மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  டியூக் பல்கலைக்கழகம், சீனா நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா! சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம். இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்   போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேற்குநாடுகளின் அறிவியல், பொறியிய

இந்தியாவில் கிறித்தவத்தின் எதிர்மறை செயல்பாடுகள்! - சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

படம்
  சிலுவையின் பெயரால்…. ஜெயமோகன் கிழக்குப் பதிப்பகம்   ஜெயமோகன், அவரது வலைத்தளத்தில் கிறித்தவம் பற்றி எழுதிய கருத்துகளும் அதற்கு எதிர்வினையாக வந்த பல்வேறு வாசகர்களின் கருத்துகள், அதற்கு பதில் அளித்த எழுத்தாளரின் கருத்துகள் என அனைத்துமே சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. நூலில், ஜெயமோகன் விரிவாக கிறித்தவம் தன்னை இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள முயல்கிறது என கூறியுள்ளார். ஏறத்தாழ சிறில் அலெக்ஸ், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் எதிர்வினைகளும் அதை எப்படி ஜெயமோகன் எதிர்கொள்கிறார் என்பதையும் வாசிக்கும்போது நமக்கு கிறித்தவம் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளள முடிகிறது. பெந்தகொஸ்தே சபையின் அரசியல், தமிழில் கிறித்தவத்தை பரப்புபவர்கள் அதற்கு செய்யும் அநீதியான செயல்கள், இலக்கியவாதிகளை பணம் கொடுத்து வளைப்பது, அதற்கென போலித் தகவல்களைக் கொண்ட நூல்களை எழுதுவது என நிறைய செயல்களை நூலெங்கும் பட்டியலிடுகின்றனர்.   ஒருவகையில் இந்த நூல் கிறித்தவ அடிப்படை மதவாத தன்மையை வெளிச்சம்போட்டு காட்ட எழுதப்பட்டதோ என தோன்றுகிறது. அல்லது இந்தியாவிற்கு விரோதமான அந்நிய மதம் என்று கூற வருகிறார

யாவரும் ஏமாளி 2 - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளத்தில்.... விரைவில்

படம்
 

ஒடிஷா இளைஞர்களை முன்னுக்கு கொண்டு வந்த மனிதர்! - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  சுப்ரதோ பக்சி - கோ கிஸ் தி வேர்ல்ட் நூல் 16.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தத்திற்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? வீட்டில் உள்ளோரின் நலனைக் கேட்டதாக சொல்லுங்கள். இம்முறை வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அமலாகி இருக்கிறது. எனவே, அனைத்து நாட்களும் ஆபீஸ் செல்வதில் விருப்பம் இல்லை. சில நாட்களில் வேலையை முடித்துவிட்டு உடனே எங்காவது பயணம் செய்வது என நினைத்துள்ளேன். பார்ப்போம். ‘தெருக்களே பள்ளிக்கூடம் என்ற மொழிபெயர்ப்பு நூலை ஆலிவர் அண்ணாவிடம் இரவல் வாங்கி வந்தேன். அதையும் இனி வாசிக்க வேண்டும். பஸ்சில் திருவண்ணாமலையிலிருந்து சென்னை வரும்போதே, அந்நூலில் 44 பக்கங்களைப் படித்துவிட்டேன். இந்த நூலின் தொடக்க தமிழ்மொழிபெயர்ப்பை நான்தான் செய்தேன். அந்த நூல் இலவச நூலாக ஃப்ரீதமிழ் இபுக்ஸில் உள்ளது. நூலின் மொழிபெயர்ப்புத் தரம் சரியானபடி கைகூடி வரவில்லை. புஷ்பா – தெலுங்குப்படம் பார்த்தேன். கொண்டாட்டமாக உள்ளது. தெலுங்கிலேயே பார்த்தேன். நன்றாக எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கு நல்ல வருமானம் உள்ளது. தென்னிந்தியாவில் இப்போது ஓடிடியில் கூட வந்துவிட்டது. ஒடிஷாவில் பணியாற

தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதி

திருவண்ணாமலையில் சுமைதாங்கி யாருமில்லை!

படம்
  பயணம் 6.1.2022 அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்று திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். அதற்காக அங்குள்ள நண்பர் வினோத்திற்கு போனில் அழைத்தேன். அப்போது நான் அவரது வீட்டில் தங்கிவிட்டு வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது வீட்டில் ஏற்கெனவே இரண்டு விருந்தாளிகள் இருக்கிறார்கள் என்று கூறினார். ‘’முன்னமே தகவல் சொல்லிவிடு அங்கு வந்தால் தங்கும்படியான அறையைத் தயாரித்து வைக்கலாம்’’ என்று சொன்னார். நான் அதை மறந்துவிட்டேன். வீடு, அவர்களுக்கும் சேர்த்து வேண்டுமே? அவர்களது குடும்ப உறுப்பினர்களே நான்கு பேர் ஆகிவிட்டனர். இனிமேல் தனியார் விடுதியில் தங்கிவிட்டு வினோத் அண்ணனைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இனியும் அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்துள்ளேன். சென்னையில் மெல்ல நோய்க்கட்டுப்பாடு இறுகி வருகிறது. வேலையை செய்துவிட்டால் வேறு எங்காவது போய்விட்டு வரலாம் என நினைத்துள்ளேன். ஆபீஸ் வேலையை முடித்துவிட்டால், சொந்த வேலைகளை செய்துகொண்டிருக்கலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைக்கிறேன். இயற்கை சார்ந்த நூல்களைப் படிக்கலாம். அத்துறை சார்ந்த செயல்பாட்டாளர்களை பற்றி எழு