பால் புதுமையினர் பற்றிய பயம் திரைப்படத்துறையினருக்கு உள்ளது! - இயக்குநர் ஒனீர்
2005ஆம் ஆண்டு ஓனீரின் மை பிரதர் நிகில் என்ற படம் வெளியானது. இது, இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளியான டொமினிக் டி சூசா என்பவரின் வாழ்க்கையை தழுவியது. பிறகு ஒனீர் எடுத்த படம், ஐ யம் -2010. இந்த படம் இந்திப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்களை ஒலிக்கும் இயக்குநர் ஓனீர் தனது சுயசரிதையை ஐ யம் ஓனீர் அண்ட் ஐ யம் கே என்ற நூலை எழுதியுள்ளார். திரைப்பட இயக்குநராக உங்களது பயணம், இத்துறையில் வெளியில் உள்ள நபராக அனுபவங்கள் என இரு பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம். திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர், எனது பாலின அடையாளம் என இரண்டுமே எனக்கு முக்கியமாக உள்ளது. நான் வாழும் காலத்தில் தன் பாலினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு பிறகு அக்குற்றம் குற்றமல்ல என மாறியது. பொது இடத்தில் நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். இளைஞர்களுக்கு அவர்களை வெளிப்படுத்த குரல் தேவைப்படுகிறது. என்னுடைய கதை அவர்களுக்கு உதவும். பள்ளி, கல்லூரி என பார்த்தாலும் எனக்கான முன்மாதிரிகள் வேறுபட்டவை. நீங்கள் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மை பியூட்டிபுல் லாண்ட்ரெட