இடுகைகள்

குறுநாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காமத்தாலும் சுயநலத்தாலும் அலைகழியும் மனிதர்களின் கதைகள்- சுகவாசிகள் - கரிச்சான்குஞ்சு- காலச்சுவடு

படம்
  சுகவாசிகள் கரிச்சான் குஞ்சு காலச்சுவடு பதிப்பகம் இரண்டு குறுநாவல்கள் – சுகவாசிகள், ஒரு மாதிரியான கூட்டம்   தனது குறுநாவல்கள் பற்றி கரிச்சான் குஞ்சு முன்னுரையில் எப்படிப்பட்டவை என்று கூறிவிடுகிறார். எனவே, முடிந்தவரை அதை படிக்காமல் கதைகளை படித்தால் கதைகளை உங்கள் மனதில் உணர்ந்து பார்த்து காட்சிகளாக வாழ்ந்து பார்த்த அனுபவம் கிடைக்கும். சுகவாசிகள் குறுநாவலில் நாகு அய்யர் வருகிறார். இவருக்கு சொத்துகள் ஏகபோகம். அந்த சொத்துகள்தான் காமத்தை தூண்டுகின்றன. இதன் விளைவாக மூன்று பிள்ளைகளை கட்டிக்கொடுத்து விடுதலைப் பத்திரம் வாங்கியும் கூட ஐம்பது வயதில் பார்வதி என்ற மலையாளப் பெண்ணை மணம் செய்துகொள்கிறார். வயதாகி, உடல் வேகமாக இயங்காதபோதும் தங்க பஸ்பம் சாப்பிட்டு உடலை இயங்கவைத்து மகன் ஒருவனை பெற்றெடுக்கிறார். அவன்தான் சீனு. நாகு அய்யரைப் போன்ற உருவம். ஆனால் அதற்குப் பிறகு நாகு அய்யர் உடலுறவில் தீவிரமாக ஈடுபடுகிறார். இதனால் உடல்நலம் குன்றுகிறது. உடல்நலம் குன்றிய காலகட்டத்தில் பார்வதிக்கு கிருஷ்ணன், ராசாளி என இருவர் மீதும் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் விளைவுகளால் சொத்துகள் பறிபோகிறது.