இடுகைகள்

காதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

பிடிவாதமாக குழந்தையுடன் உள்ள நாயகனை காதலிக்கும் குழந்தைநல மருத்துவர்!

படம்
  சந்தோஷம்  நாகார்ஜூனா, ஷ்ரியா சரண், பப்லு வெளிநாட்டில் வாழும் நாயகனுக்கு ஒரே ஒரு ஆண் குழந்தை. பள்ளி சென்று வருகிற வயது. நாயகனின் தங்கை, அவளது கணவர் என மூவரும் ஒன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்று, அஞ்சலில் வருகிறது. அது வேறு யாருமல்ல. நாயகனின் மனைவி வழி சொந்தங்கள்தான். நாயகன் தனது தங்கை, மாப்பிள்ளை ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இந்தியாவிற்கு செல்கிறார். ஆந்திரத்திற்கு மாமனார் வீட்டுக்கு சென்றாலும், அங்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், நாயகன் அவர்கள் வீட்டு பெண்ணை சம்மதமின்றி அழைத்துச் சென்று காதல் மணம் செய்துகொண்டதுதான். இந்த பின்னணிக் கதையில் நாயகன் விரும்புகிற பெண், அவனை விரும்புகிற மனைவி வழி சொந்தக்காரப் பெண் என இருவர் வருகிறார்கள். திருமணம் செய்து சொற்ப ஆண்டுகளில் மனைவி விபத்தில் இறந்துவிட, நாயகனை விரும்பும் சொந்தக்கார பெண் மீண்டும் அவனது வாழ்க்கைக்கு வருகிறாள். அவளை நாயகன் ஏற்றானா, மனைவி வழி சொந்தங்கள் இந்த உறவுக்கு பச்சைக்கொடி காட்டினார்களா என்பதே மீதிக்கதை.  படத்தில் வில்லன் என யாருமே கிடையாது. இங்கு எதிரியாக ஒருவருக்கு முன்னே நிற்பது காலம்தான

காலதாமதம் ஆன காதலை மீட்டெடுக்க முயலும் அறுவை சிகிச்சை வல்லுநர்!

படம்
  நாட் டூ லேட் 11 எபிசோடுகள் சீன டிராமா ராக்குட்டன் விக்கி ஆப் பள்ளிக்காலத்தில் டிங் ரான், தன்னுடன் படிக்கும் மாணவியைக் காதலிக்கிறான். அவன் அகவயமானவன். எனவே, தனது உணர்வுகளை வெளிப்படையாக உணர்த்த முடியவில்லை. அவன் காதலிக்கும் மாணவிக்கும் டிங் ரான் மீது விருப்பம்தான். காதல்தான். ஆனால், அதை அவள் வெளிப்படையாக டேட்டிங் பண்ணலாமா என்று கூறும்போது, டிங் ரான் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் மறுத்துவிடுகிறான். காலம் கடக்கிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். இந்த முறை, டிங் ரானின் அப்பா, அவன் காதலித்த பெண்ணின் அம்மாவை மணம் செய்துகொள்ள போகிறார். இதனால் டிங்ரான், அவனது முன்னாள் காதலி என இருவருமே ஒரே வீட்டில் வாழவேண்டிய நிலை. அக்கா, தம்பி என உறவு மாறும் சூழ்நிலை. ஒன்றாக வாழும் சூழ்நிலையில் அதுவரை மறைந்திருந்த காதல் புதிதாக துளிர்விடத் தொடங்குகிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.  தொடரில் மொத்தம் ஆறு பாத்திரங்கள்தான். முக்கியப்பாத்திரங்கள். அதனால் பழி, வஞ்சம், துரோகம், வன்முறை என பிரச்னை இல்லாமல் பார்க்கலாம். ரசிக்கலாம். பதினொரு எபிசோடுகள்தான். நேரமும் மிச்சம் பாருங்கள்.  டிங் ரா

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு,

கூலிக்கொலைகாரன் தொன்மைக் காலத்திற்கு நகர்ந்து போர்வெறி கொண்ட வீரனாகும் கதை!

படம்
  டேங் யின்  மாங்கா காமிக்ஸ்  250 அத்தியாயங்கள்----- நகரத்தில் வாழும் கூலிக்கொலைகாரன். பாரில் உள்ள பெண்ணை ஒரு ரவுடிக்கூட்டம் போதைக்குள்ளாக்கி வல்லுறவு செய்ய முயல்கிறது. நாயகன் அதை தடுத்து அத்தனை பேர்களையும் கொல்கிறான். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். பிறகு தனது அறைக்கு திரும்புகிறான். தூங்குபவனின் ஆன்மா தொன்மைக்காலத்திற்கு பயணிக்கிறது.  ஒரு காட்டில் இலையை கட்டிக்கொண்டு நிற்பதை உணர்கிறான். உண்மையா என்று பார்த்தால் உண்மைதான். அங்கே உள்ள விலங்கு ஒன்றிடமிருந்து சண்டை போட்டு சற்றுவெளியே சென்று பார்த்தால் அங்கு நிங், விண்ட் என்ற இரு நாட்டு ராணுவத்துக்கு இடையில் போர் நடக்கிறது. டேங் யின் என்பது நாயகன் பெயர். கதையில் திடீரென டோமின் மாறுகிறது. நாம் டோமின் என்றே கொள்வோம். நிங் பலம் பொருந்தியவர்கள். விண்ட் பலவீனமானவர்கள். அவர்கள் புறம் நின்று டோமின் நான்கு எதிரிப்படை வீரர்களைக் கொல்கிறான். எதிரிப்படையினர் இறந்துபோன விண்ட் வீரர்களின் பிணங்களை நெருப்பு வைத்து கொழுத்துகிறார்கள். டோமின் நெருப்புக்கு பயந்து குகையில் பதுங்குகிறான். அங்குள்ள டார்க் ஆர்ட்ஸ் மாவீரனின் ஆவி, டோமினுக்குள் ப

4 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்க உலகிற்கு வரும் வாள் போராளி!

படம்
  கிரேட் மேக் ரிடர்ன் 4000 இயர்ஸ் எகோ காமிக்ஸ் ரீட்மங்காபேட்.காம்  தொன்மைக்கால வீரர்களின் தலைவன் லூகாஸ் ட்ராமன். இவர் தலைமையில் ஐந்து வீரர்கள் இணைந்து வேலை செய்து தீயசக்திகளை அழிக்க முயல்கிறார்கள். ஒரு சண்டையில், டெமிகாடின் தலைவரான லார்ட் மூலம் லூகாஸ் சிறைபிடிக்கப்படுகிறார். 4 ஆயிரம் ஆண்டுகள் சிறைவாசம் கழித்து விடுவிக்கப்படுகிறார். அவரது ஆன்மா, பிளாக் குடும்ப மூன்றாவது பிள்ளையான ஃபிரே பிளாக்கின் உடலில் புகுகிறது.  ஃபிரே பிளாக், மந்திரவாதம் கற்க முயன்று அதில் தோற்று, பள்ளி நண்பர்களால் அடித்து உதைக்கப்படுகிறான். அவனது குடும்பத்தாரால் ஊதாசீனம் செய்யப்படுகிறான். அவன் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தபிறகே, லூகாஸின் ஆன்மா அவனது உடலில் புகுகிறது. அதற்குப் பிறகு நடைபெறும் பரபர சம்பவங்கள்தான் கதை.  இந்த காமிக்ஸ் கதையில் சுவாரசியம் என்னவென்றால், ஃபிரே பிளாக் உடலில் லூகாஸ் புகுந்தபிறகு செய்யும் நகைச்சுவைதான். பள்ளி செல்லும் சம்பவங்களில் இந்த நகைச்சுவை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஃபிரே பிளாக் தனது பெண் ஆசிரியை மீது காதல் கொள்ளும் சம்பவம். ஃபிரே பிளாக், வகுப்பில் உள்ள இசபெல்லா என்ற நன

குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!

படம்
  இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும்.  அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது.  ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது

ஒரே நேரத்தில் மூன்று இளம்பெண்களை காதலிக்கும் ரோமியோ!

படம்
  ரோமியோ மலையாளம்  திலீப்,விமலா ராமன், சம்யுக்தா,ஹனீபா சாதி,மதம் மாறி மூன்று பெண்களை காதலிக்கும் ரோமியோ ஒருவரின் கதை. உண்மையில் வதந்தி நாளிதழில் வரும் செய்தியைப் போன்றதல்ல. இங்கு நாயகன் மனு கிருஷ்ணன், தனது வேலை, அதில் வரும் சம்பளத்தையே நம்பியிருக்கிறார். அதில் பிரச்னை வரும்போது, பெயர் மாற்றி, சாதி மாற்றிக்கொண்டு ஓரிடம் செல்கிறார். அங்கு வாழும் ஒரு அய்யங்கார் பெண்,சுப்பிரமணி என்ற பெயருடைய நாயகனை விரும்பத் தொடங்குகிறாள். ஏன் என்றால் அதற்கென அவளுக்கென சில காரணங்கள் உள்ளன. அவளுக்கென பார்த்த மாப்பிள்ளை குடிநோயாளி. சுப்பிரமணிதான் அவனுடைய பெயரும் கூட.  நாயகன், அய்யங்கார் பெண்ணிடம் வாய்ப்பாட்டு கற்கவும் கூட முயல்கிறான். இப்படி சில விஷயங்கள் ஒற்றுமையாக இருக்க அந்தப்பெண் நாயகனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் நாயகன் அவளை காதலிப்பதில்லை..   அடுத்து, டிவி நிகழ்ச்சி பாடகியின் அப்பாவிடம், வாங்கிய காசை அடைப்பதற்காக பாடகியை மணக்க முடிவெடுக்கிறார் மனுகிருஷ்ணன். ஆனால் இந்த சமாச்சாரம் அந்தளவு எளிதாக இல்லை. பாடகியின் அப்பா, நாயகன் மனுவை மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிக்கிறார். இதனால் மானுவேல் என பெயர் மாற

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

ஆதிக்கவாதியாக ஒருவரை மாற்றும் பயிற்சி

படம்
ஆதிக்கவாதியாக ஒருவரை பயிற்சி மூலம் மாற்ற முடியுமா? இதற்கான பதில் சற்று குழப்பமானது. அவர் தனக்குள் ஏன், எதற்கு, எப்படி, அவசியமா என்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும். தான் கொண்டுள்ள உறவில் சலிப்பு ஏற்பட்டு தனது பாத்திரத்தை மாற்றிக்கொள்கிறார் என்றால் ஆதிக்க/அடிமை உறவு கெட்டுபோய்விட்டது என்பதற்கான அறிகுறி என புரிந்துகொள்ளலாம். இயற்கையாக ஒருவர் ஆதிக்கவாதி குணம் கொண்டவராக இல்லை. ஆனால் பயிற்சி மூலம் மாற்றமுடியுமா என்றால் முடியும். கதையில் ஒரு நடிகர் நன்றாக நடிக்கிறாரா என்று பார்த்து அதற்கேற்ப படத்தின் முடிவை இயக்குநர் கௌதம் எழுதுகிறாரே, அதுதான் இங்கு கான்செப்ட். ஒருவர் எந்தளவு ஆதிக்கவாதி பாத்திரமாக தன்னை மாற்றிக்கொள்ளமுனைகிறார் என்பதே இதில் முக்கியம். அதைப் பொறுத்து பயிற்சியாளர் பயிற்சிகளை அமைப்பார். பயிற்சி கொடுப்பவருக்குமே இது கடினமான பயணம்தான். ஒருவர் தன்னை சிறந்த வாகன ஓட்டுநர் என்று சொல்லிக்கொள்ளலாம். பிரச்னையில்லை. ஆனால் தனக்கு தெரிந்த விஷயத்தை பிறருக்கு சொல்லிக் கொடுப்பது கடினம். அப்படி கற்பிப்பது அனைவருக்கும் கைவராது. ஏன் ஆதிக்கவாதியாக மாற நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த தவற

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க

நேசிக்கும் காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்துகொடுக்க கொடுக்க முன்வரும் காதலன்!

படம்
  சீகா ஃப்ரம் ஶ்ரீகாகுளம்  இயக்குநர் - eshwar அல்லரி நரேஷ், மஞ்சரி, ஷ்ரத்தா தாஸ், வேணு, எம்எஸ் நாராயணா நரேஷ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு உடல் பலம் குறைவு என்றாலும் புத்திசாலித்தனமும் சமயோசிதமும் அதிகம். அதைப் பயன்படுத்தி கல்லூரியில் பெண் ஒருத்தியை வல்லுறவு செய்பவனை தடுக்கிறான். இப்படியானவன், அங்கு படிக்கும் பேரழகியான பெண்ணை பிளான் செய்து மடக்குகிறான். ஆனால் பிறகுதான் தெரிகிறது. அவளின் அப்பா ஊரிலேயே பெரிய ரௌடி என. உயிரு முக்கியம்ப்பா என முடிவெடுத்து காதலெல்லாம் வேண்டாம். உனக்கு உங்கப்பாவே நல்ல பையனா பார்ப்பாரு கட்டிக்கோ என சொல்லி ஜகா வாங்குகிறான். ஆண் காதலிப்பது பிரச்னையில்லை. அந்த ஆணை பெண் காதலிக்கத் தொடங்கினால்தானே கதை தாறுமாறாக ட்விஸ்ட் ஆகிறது. அதுதான் இங்கும் நடக்கிறது. அந்தப்பெண் கட்டினால் நரேஷைத்தான் காதலிப்பேன் என அடம் பிடிக்கிறாள். இறுதியாக நரேஷ் தனக்கு நிச்சயம் முடிந்து கல்யாணம் ஆகும்வரை ஊரில் வந்து இருந்தால் போதும். தான் அவனை விட்டுவிடுகிறேன் என கூறுகிறாள். அது எப்படியான பொறி என தெரியாமல் நரேஷ் அவளுடைய ஊரான கர்னூலுக்கு செல்கிறான்.  அங்கு என்ன நடந்தது, நரேஷூ

உடல் மனதை பகிர்ந்தாலும் தனித்துவத்தை இழக்காமல் ஒருவரால் காதலிக்க முடியுமா?

படம்
வாழ்க்கையில் சோறு தின்பதற்கு தரித்திரம் துரத்தாமல் இருப்பவர்கள், நிச்சயம் தான் யார் என்பதற்கான தேடுதலை செய்வார்கள். இதற்காக சினிமா நடிகர்கள் படிக்கும் ஆன்மிக புத்தகங்களை தேடுவது, ஞான யோகியான ரமணரின் ஆசிரமத்தில் அடம்பிடித்து நுழைவது என செய்வார்கள். அடிப்படையான நோக்கம் தான் எதற்கு பிறந்திருக்கிறோம், என்ன செய்யப்போகிறோம், அதாவத நம் மூலம் என்ன நடக்கவிருக்கிறது என அறிவதுதான். ஒருவருக்கு கண்முன்னே இரு பாதைகள் உண்டு. ஒன்று மகிழ்ச்சியும் திருப்தியும் நிறைந்த பாதை. அடுத்து, கடினமான அதிருப்தியான பாதை. வாழ்க்கைக்கான அர்த்தம் தேடுவது என்பதே மோசமான வாழ்க்கையை சமாளிக்கும் பொருட்டுதான் என்று உளவியலாளர் எரிக் ஃப்ரோம் கூறுகிறார்.  அன்புகொண்ட வாழ்க்கையே நல்ல மனிதனை உருவாக்குகிறது என எரிக் நம்பினார். வாழ்க்கை உணர்ச்சிகரமான விரக்தியைக் கொண்டது. ஒரு மனிதர் இயற்கையிலிருந்து தன்னை பிரித்துப் பார்க்கிறார். அவரின் இன்னொரு பகுதி, பிறரோடு தன்னை இணைத்துப் பார்த்து பொருத்திக்கொள்ள முயல்கிறது. இயற்கையிலிருந்து மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்கான காரணம், அவர்களின் புத்திசாலித்தனம்தான். அறிவு கூடும்போது மெல்ல இயற்கையிலி

ஒரே பெண்ணை காவல்துறை அதிகாரி காதலிக்க, சீரியல் கொலைகாரன் பாதுகாக்க நினைக்க.. மூவரது வாழ்க்கையை இணைக்கும் காலச்சரடு!

படம்
  பார்ன் அகெய்ன் கே டிராமா 32 எபிசோடுகள் இரண்டுபிறவி கதை. முதல் பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த மூன்றுபேர் மீண்டும் பிறந்து வாழ்க்கையை வாழ முயல்கிறார்கள். அவர்களது வாழ்க்கை எப்படி அமைந்தது என்பதே கதை. பதினாறு எபிசோடுகள் வரும் கதையை, அரைமணி நேரமாக பிரித்து சீன தொடர்கள் அளவுக்கு நீட்டியிருக்கிறார்கள். இதுதான் தொடரைப் பற்றிய முதல் மைனஸ் பாய்ண்டாக சொல்லவேண்டும். இந்த தொடரில் கொலை, அதைப்பற்றிய விசாரணை, நீதிமன்ற உரையாடல்கள் என நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் கதையின் போக்கு நிதானமாகவே இருக்கிறது. பெரிய பரபரப்பு, திகில் என எதையும் அடையவேண்டியதில்லை. இந்த கதையை அதிகாரத்தில் உள்ளவர்களின் சுயநலம், முன்முடிவுகளால் பாதிக்கப்படும் அப்பாவி ஒருவரின் கதை என்று எளிமையாக கூறலாம். சமூக பொதுப்புத்தியில் கொலைகாரரின் மகன் கொலைகாரன்தான், திருடனின் மகன் திருடன்தான் அல்லது குற்றவாளியாகவே இருப்பான் என நினைக்கப்படுவதை தொடரில் வரும் நாயகியைத் தவிர்த்த பிற பாத்திரங்கள் முழுமையாக ஏற்கிறார்கள். அதைப்பற்றிய குற்றவுணர்ச்சியே இல்லாமல் இயங்குகிறார்கள். இதனால் சீரியல் கொலைகாரரின் மகன் வாழ்க்கை அபாயத்தில் சிக்குகிறது. செய