இடுகைகள்

பாட்மின்டன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றி அறிந்துகொண்டேன் மானசி ஜோஸி

படம்
            பாட்மின்டன் - மானசி ஜோஸி இந்தியா டுடே, சுகானி சிங் பாராலிம்பிக்ஸ் 2021இல் உங்கள் திட்டம் என்ன? இதில் பாட்மின்டன் பிரிவு இல்லையே? நான் கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ் பாண்டேவுடன் இணைந்து விளையாடப்போகிறேன். இவருடன் இணைந்து விளையாடி 2015இல் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி வென்றுள்ளேன். நாங்கள் இணைந்து விளையாடி போட்டிகளில் தகுதிபெற விரும்புகிறேன். அதிகளவு அழுத்தத்தை என்மேல் திணித்துக்கொள்ள விரும்பவில்லை. கடந்த ஆண்டு உலக சாம்பியனான பிறகு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான தூதராக செயல்பட்டீர்கள். இதில் உங்களுக்கு என்ன பொறுப்பு இருப்பதாக நினைக்கிறீர்கள்? உறுப்புகளை இழந்த மக்களின் சார்பாக மட்டும் பேசுவதாக நினைக்கவேண்டாம். இதுபோல வாழும் மாற்றுத்திறனாளிகளின் சதவீதம் அதிகம். நான் இந்த பொதுமுடக்க காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறிந்துகொண்டேன். உங்களைப் போலவே பார்பி மாடல் உருவாக்கப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பெண்கள் பிரிவில் இதுபோல பெருமை பெற்ற இரண்டாவது இந்தியப்பெண் நான் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. பொம்மை என்னை சிறப்பாக நகல் செய்து உருவாக்கப்

உண்மையைப் பேசினால் உங்களை ஓரம் கட்டிவிடுவார்கள் -ஜூவாலா கட்டா

படம்
ஜூவாலா கட்டா, பாட்மின்டன் விளையாட்டு வீரர். காமன்வெல் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் இவர். தெலங்கானாவில் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டார் என்று போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்நிலையில் அவர்களின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க மக்கள், ஊடகங்கள் அழுத்தம் கொடுத்தனர். இதன்விளைவாக அவர்கள் தப்பித்துச் செல்லும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தியை போலீசார் அடுத்த நாள் ஊடகங்களிடம் கொடுத்தனர். போலீசாரின் நடவடிக்கையை மக்கள் ஆதரித்தாலும், மனித உரிமைக்கு எதிரானது. நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இந்த என்கவுன்டர் அழித்துவிட்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர். இதுபற்றி ஜூவாலா கட்டாவும் கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்ற விவகாரங்களில் விளையாட்டு வீரர் பெரும்பாலும் கருத்து தெரிவிப்பதில்லை. என்ன காரணம்? இந்தியாவில் கருத்துகளை வெளிப்படையாக சொன்னால் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். என்னைப் பாருங்கள். எனக்கு தவறு என்று தோன்றும் விஷயங்களில் நான் தைரியமாக பேசுவேன்.