இடுகைகள்

ஆப்பிரிக்க யானை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழமரங்களைத் தேடி பசியில் அலைந்து தவிக்கும் யானைகள்! - ஆப்பிரிக்க சூழல் அவலக் கதை

படம்
  பசியோ பசி! - ஆப்பிரிக்க யானைகளின் அவலநிலை மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது, காபோன் நாடு. இங்குள்ள லோப் தேசியப்பூங்கா  4,921 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பகுதி, 1946ஆம் ஆண்டு நாட்டின் முதல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இப்பூங்காவிலுள்ள பருவ மழைக்காட்டில் அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் வாழ்கின்றன.  காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருவதால், யானையின் முக்கிய உணவான பழங்கள் கிடைப்பது குறைந்துவிட்டது. இதனால், வேறுவழியில்லாத யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு பசியைத் தீர்த்துக்கொள்கின்றன.  உலகளவில், ஆப்பிரிக்காவில், மட்டுமே 70 சதவீத யானைகள் வாழ்கின்றன. ஆப்பிரிக்க சாவன்னா யானைகளை விட, காபோன் பருவ மழைக்காடுகளில் வாழும் யானைகள் அளவில் சிறியவை. இந்த யானைகளின் எண்ணிக்கையும் பத்தாண்டுகளுக்கு மேல் தொடரும் வேட்டைகளால் குறைந்து வருகிறது. இம்மழைக்காடுகளில் உள்ள பெரும்பாலான மரங்கள், யானைகளின் சாணத்தினால் முளைத்தவைதான். காடுகளிலுள்ள சிலவகை பழங்களை யானைகளை தவிர  பிற விலங்கினங்கள் உண்டு செரிமானம் செய்யமுடியாது. இயற்கையாகவே பழங்கள் அவ்வாறு அமைந்துள்ளன.