அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVFM1bpw52Y7__jF-_14a4DFSy0MRFIsQREYdfMtbDeveUAcR_1HRkimQTFoePIdQ4zsjAWP9prrQoD02Js2ygFZApj0OD7VteCZ7ssdi4S_zy83YARhnuvaHiXj1YIAKsABJ2s1FHSPR8v5CLb0buS7iH-CaxKpWaufpK59On9XJ5MTVYgICrGJkoieQk/w640-h426/child-2550326_1280.jpg)
அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்! அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவுகளே