இடுகைகள்

ஜிஎஸ்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழையிலும் தொடரும் வழிகாட்டுதல் சேவை!

படம்
  அடாத மழையிலும் விடாத சேவை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று எங்கள் மயிலாப்பூர் பகுதியில் நல்ல மழை . மழை இடைவேளை விட்டு விட்டு பெய்தது . இதனால் சாலைகள் குட்டைகளாகவே மாறிவிட்டன . சாப்பிட அறைக்கு வரும்போது , பேன்ட் முழங்கால் அளவுக்கு நனைந்துவிட்டது . அடைமழை பெய்யும் நேரத்தில் கூட பெண் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு என்னிடம் வந்து ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபம் செல்ல வழி கேட்டார் . ஆச்சரியம் ... வழி சொல்லிவிட்டுத்தான் நகர்ந்தேன் . அடாத மழையிலும் என்னுடைய தேவை உலகிற்கு இருக்கிறது என நினைத்துக்கொண்டேன் . எங்கள் நாளிதழ் இன்னும் தொடங்கப்படவில்லை . இப்போதெல்லாம் ஆபீசுக்கு வருவதே சிலசமயம் எதற்கு என மறந்துபோய்க் கொண்டிருக்கிறது . உதவி ஆசிரியர் எழுத்தாளர் பாலபாரதி டெங்குவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார் . அலுவலகத்தில் அதற்குள் இன்னொருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறை எடுத்துவிட்டார் . மழைக்கால காய்ச்சல் என நினைக்கிறேன் . ஷோபாடே எழுதிய நூலை தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன் . மத்திய அரசு , அரிசியில் இரும்புச்சத்து சேர்ப்பது பற்றிய கட்டுரை ஒன்றை ஃபிரன்ட்லைனில் பார்த்த

எரிபொருளுக்கான மத்திய அரசு வரியைக் குறைக்க முடியாது! - நிதியமைச்சர் நிர்மலா

படம்
  நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் பொருளாதாரம் மெல்ல நல்ல நிலைக்கு மீள்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? பொருளாதாரம் மீள்வதை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன்.  அனைத்து துறைகளிலும் நேர்மறையான விஷயங்கள், அறிகுறிகள் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். இதனை சிலர் சென்டிமென்ட் என்று கூறுவார்கள். சென்டிமென்ட் நேர்மறையாக இருக்கும்போது நிறைய மாற்றங்களை தரும் என நினைக்கிறேன்.  பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்? இரண்டுமே ஒன்றுபோலவே இருக்காது என்பது உண்மை. மக்களை பாதிக்காத அளவில் பணவீக்கம் இருப்பது பிரச்னையில்லை. இதை தடையாக நினைத்து வளர்ச்சிக்காக திட்டமிடாமல் இருக்கமுடியாது. வளர்ச்சிக்கான எங்களது செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.  கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைகளை ஏன் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவில்லை? அப்படி கொண்டுவருவது மாநிலங்களின் முடிவுகளைச் சேர்ந்தது. எரிபொருள், மது தொடர்பான வரி விஷயங்களை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இதில் அவர்கள் வரிகளை குறைக்க அல்லது உயர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம்.  இந்த நேரத்த

இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள் இந்தியா 75 டெலிவரிக்கு ரெடி!  உலகம் முழுக்க இன்று இந்தியாவின் சமையல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. இப்போது அந்த பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  2020ஆம் ஆண்டு 275. 5 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இதில் பெட்ரோல், எண்ணெய், வைரம், அரிசி, மருந்துகள், நகை, கார்கள் ஆகியவை உள்ளடங்கும். அமெரிக்கா, சீனா, அரபு நாடுகள் நமது முக்கியமான வாடிக்கையாளர்கள்.  எல்லோருமே எஞ்சினியர்கள்தான் இப்படி கிண்டல் செய்தாலும் கூட ஆசியாவில் சிறந்த பொறியாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசு மானிய விலையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து இருப்பதுதான். இதற்கான கட்டமைப்பு, நிதி ஆதாரம் எல்லாமே 1940 முதல் 50 களில் திட்டமிடப்பட்டது என்பதை யாரும் மறக்க கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பெருமையை வெள்ளையர்களுக்கு புரிய வைத்து வென்றிருக்கிறார்கள் நமது எஞ்சினியர்கள்.  ஐடி ஆட்கள் ப்ரோ! ஐடி சார்ந்த சேவைகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் செய்துகொடுப்பது இந்தியாதான். 1967ஆம் ஆண்டு த

ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்குமான உறவு உடைந்துபோய்விட்டது! - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

படம்
  நேர்காணல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கௌன்சில் கூட்டத்தில் அதனை ரப்பர் ஸ்டாம்ப் கௌன்சில் என்று பேசியிருக்கிறீர்கள். மேலும் மத்திய அரசின் அளவுகடந்த அதிகாரம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். மாநில அரசின்  நிதிநிலை மோசமாவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான உறவு முக்கியமானது. ஆனால் இந்த உறவு சுமூகமாக இல்லை. காலப்போக்கில் இந்த உறவு  தேய்ந்துபோய், பல்வேறு விரிசல்களால் நிறைந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவிட்டது. நான் கடுமையாக பேசியிருக்கிறேன் என்று நினைத்தால், நீங்கள் இப்போது பிரதமராக இருக்கும் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என்ன பேசினார் என்பதை எடுத்து பாருங்கள்.  ஜிஎஸ்டி வரியை அவசரமாக அமல் செய்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கூட இன்னும் நாம் மீளவில்லை. ஜிஎஸ்டி கௌன்சில் முறையான படி அமைக்கப்படவில்லை.  திடீரென அதனை அமைத்து விளம்பரம் செய்து வரி சதவீதங்களை அமல் செய்து குழப்பம் ஏற்படுத்தினர். பணமதிப்பு நீக்கத்தை திடீரென அறிவிப்பு செய்தது

புத்தாண்டில் மாறுவது என்னென்ன விஷயங்கள்?

படம்
giphy புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் சொல்லி காஜூ கத்திலி கொடுத்தால் போதுமா? இந்த ஆண்டில் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. ரயில் கட்டண உயர்வு புத்தாண்டு பரிசாக மத்திய அரசு நமக்கு அளித்துள்ளது. வேறு என்னென்ன விஷயங்கள் மாறுகின்றன என்று பார்ப்போம். சேமிப்புக்கணக்குக்கு காசு கிடையாது. சேமிப்பு கணக்கிலிருந்து நெப்ட் முறையில் யாருக்கு பணம் அனுப்பினாலும் சேவைக்கட்டணம் கிடையாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனை இணையம் அல்லது மொபைல் மூலம் செய்து சோதித்துப் பாருங்கள். பாதுகாப்பு முக்கியம் தொழிலதிபர்களுக்கு லட்சக்கணக்கில் வாரிக்கொடுத்துவிட்டு வாராக்கடன் கணக்கு எழுதியதில் பெரிய வங்கி எஸ்பிஐ. தற்போது வாடிக்கையாளர்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்தால் கூட ஓடிபி கேட்கிறார்கள் இது இரவு 8மணியிலிருந்து காலை 8 மணி வரை அமலாகுமாம். உடையும் விண்டோஸ் விண்டோஸ் போன்களை உலகில் அரிதான மனிதர்களே தில்லாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் இதில் வாட்ஸ் அப் இயங்காது. பார்த்துக்கொள்ளுங்கள். உருப்படியான ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் வாங்குவது உங்களது சாமர்த்தியம். வலுக்கட்டாயமாக டிஜிட்டல்

தடுமாறும் மாநிலங்களின் வருமானம்!

படம்
சர்வதேச ரேட்டிங் நிறுவனமான மூடி, இந்தியாவின் வளர்ச்சிவீதத்தைக் குறைத்துள்ளது. இதனால் மத்திய அரசின் பட்ஜெட் பற்றாக்குறை 3.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாநிலங்களின் பங்களிப்பு இதில் குறைந்துபோனதுதான். நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டினாலும் தொடர்ச்சியாக இந்த வருவாய் கிடைத்தால் மட்டுமே இந்திய அரசு பற்றாக்குறை பிரச்னையில் இருந்து தப்பிக்கும். 2019ஆம் ஆண்டு இந்திய அரசு 6.7 சதவீதம் அளவுக்கு உற்பத்தி பற்றாக்குறையை எதிர்பார்த்தது. மாநில அளவில் இது 3.7 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஜிஎஸ்டி உதவாதது ஏன்? நேர்முகம், மறைமுகமாக பல்வேறு வரிகள் இருந்தன. மத்திய அரசு அதனை மாற்றி 2017 இல் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது. இதில் நேரும் இழப்பீடுகளுக்கு மாநிலங்கள் மத்திய அரசை நம்பியுள்ளன. இந்த இழப்பீட்டையும் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தரும், அதற்கு பிறகு வரி பங்கீடு படி கிடைக்கும் தொகை மட்டுமே மாநிலங்களுக்குச் சேரும். மாநிலங்களில் உற்பத்தி குறைந்து போனதால், ஆண்டுதோறும் பத்து சதவீதம் என வரிவருவாய் குறைந்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலங்களில் பொருளாதார வள

தேசிய நெடுஞ்சாலையில் வரி வசூல்!

படம்
giphy.com இந்தியாவில் உள்ள சுங்க வரி வசூலிக்கும் இடங்களில் ஃபாஸ்டேக் முறையில் டிஜிட்டல் வரி வசூலிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுபற்றிய டேட்டா இந்தியாவிலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 525 மாநிலத்திலுள்ள நெடுஞ்சாலை சுங்கவரி சாலைகள் - 500 தினசரி ஃபாஸ்டேக் முறையில் நடக்கும் வரி வசூல் - 1.1 மில்லியன் தினசரி இதன்மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் - 25- 30 கோடி ஃபாஸ்டேக் முறையை ஏற்ற வாகனங்களின் எண்ணிக்கை 6.2 மில்லியன். வாகனங்களின் கண்ணாடியில் பொருத்திக்கொள்ளும் பொருளான ஃபாஸ்டேக்கை வங்கியில் ரூ.25 கொடுத்து பெறலாம். இதனுடன் உங்கள் வங்கி கணக்கை இணைத்து சுங்கச்சாவடிகளில் பணத்தை டிஜிட்டல் முறையில் கட்டலாம். எனவே இனி சில்லறைக்கு அல்லாட வேண்டியதில்லை. மேலும் இதனுடன் வாகன எண்களும் இணைக்கப்படுவதால் உங்கள் வாகனம் காணாமல் போனால், சட்டவிரோத விவகாரங்களில் மாட்டிக்கொண்டால் காவல்துறை அதை எளிதாக அறிய முடியும். இதே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி 2020 ஆம்ஆண்டு ஏப்ரல் மாத த்தில் எரிபொருட்களை வாங்கவும், வாகன நிறுத்தங்களுக்கு கட்டணங்களை செலுத்தவும் விரிவாக்கம் செய்யவிருக்கிறார்கள். நன

அபிஜித் கருத்து என்ன?

படம்
ஷங்கர் படத்தில் தொடங்கிய பழக்கம் இது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்து மனதில் இருக்கும். அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது. விளைவு, படுமோசமாகத்தான் இருக்கும். கேள்வி கேட்டவருக்கு அல்ல, பதில் சொன்னவருக்கு. இம்முறையில் அபிஜித்திடம் பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை கேட்டுள்ளனர். இதில் அவர் என்ன நினைக்கிறார் என்பது படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும். பணமதிப்பு நீக்கம்! இந்த நடவடிக்கையின் பின்னுள்ள லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட வேண்டும்? இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தன்னைவிட கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று மக்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் வெளியிட்ட பணத்தில் 97 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பணக்காரர்களுக்கு அல்லது கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு  என்ன கஷ்டம் நேர்ந்திருக்குமென்று.... பொருளாதாரரீதியில் அரசு செய்த முட்டாள்தனங்களில் ஒன்று பணமதிப்பு நீக்கம். உண்மையில் இந்

ஜனநாயகத்தில் சீர்த்திருத்தங்கள் சாத்தியம்தான்! - சேட்டன் பகத்

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள்! முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள் எளிதாக நடைபெறாது என்று கூறினார். அவர் அதை என்ன பொருளில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு என்ன காரணம் என யோசித்தால், இந்திய மக்களிடையே அரசு புதிய விஷயங்களை கொண்டு வரும்போது அதனை சந்தேகமாக பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட வரி சீர்திருத்தம் அது. ஆனால் பாஜக காலத்தில் எந்த விழிப்புணர்வுமின்றி அமலானது. இன்றுவரையிலும் வரிவிகிதங்களைப் பற்றி மக்களுக்கும் புரியவில்லை. தொழிலதிபர்களுக்கும் எப்போது வரி கட்டவேண்டும் என்பதை ஆடிட்டர்கள் சொல்லும்போதுதான் புரிந்துகொள்கின்றனர். அரவிந்த் சுப்பிரமணியன், சீர்திருத்தங்கள் அமலாக அதிக காலம் எடுப்பதை கருத்தில் கொண்டு மேற்சொன்னது போல கூறியிருக்கலாம். அது உண்மைதான். இங்கு பல்வேறு சிந்தனை அமைப்புகள் உள்ளன. வரி சீர்திருத்தம் என்பது சரி, தவறு, பாதிப்பு என்ன என்பதை முன்னரே அடையாளம் காண இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைவரின் குரல

அக்டோபரில் வரும் மாற்றங்கள் என்னென்ன? - பொருளாதாரம்!

படம்
வங்கிகள் பெட்ரோல் டீசல் வாங்கினால் அளிக்கும் சலுகைகளை இனி தரமாட்டார்கள். அதாவது டெபிட் கார்ட்டில் வாங்குபவர்களுக்கு தரும் சலுகைகள் என புரிந்துகொள்ளுங்கள். வருவாய்த்துறை வரி வசூலில் தீவிரத்தை கடைபிடிக்கப்போவதில்லை. ஆவணத்திலுள்ள எண் தவறானது என்றாலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை தொடங்கும். அதற்குள் அதுதொடர்பான தவறுகளை சரிசெய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விடுதிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி பனிரெண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த வரி 18 சதவீதமாக இருந்தது. முன்னர் பாலீஷ் செய்த கற்கள், வைரங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 3 சதவீதமாக இருந்தது. இந்த வரி 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வைரங்களுக்கு இந்த வரி 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாட்டின விளம்பரங்களைப் பார்த்து பரவசமாகி ஓடிப்போய் வாங்க முடியும். காபீன் கலக்கப்பட்ட பானங்கள் அனைத்தும் குபீர் விலையேற்றம் காணும். முன்னர் இருந்த 28 சதவீத வரி இனி 40 சதவீதமாக மாறும். வெளியில் நீங்கள் பார்ட்டி வைப்பதாக இருந்தால் இனி ஈஸிதான். காரணம் இதற்கான வரி 18 சதவீத த்திலிருந்து 5 சதவீதமாக குறைகிறது.

பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!

படம்
better india பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்! பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது. ரூ.5

வீழ்ச்சியில் சிக்கிய இந்திய ஆட்டோமொபைல் துறை!- பிரச்னை என்ன?

படம்
பொருளாதாரம் வாகனத்துறை சரிவிலிருந்து மீளுமா? இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அரசு உயர்த்திய ஜிஎஸ்டி வரியும், வாகனங்களின் பதிவுக்கட்டண உயர்வும் முக்கிய காரணமாக உள்ளது. பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு பத்திரப்பதிவுக்கட்டணம் 8-16 சதவீதம் உயர்ந்துள்ளது. வாகனத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 3கோடியே 20 லட்சம்பேர் பணியாற்றி வருகின்றனர். இத்துறையின் மதிப்பு 8.3 லட்சம் கோடியாகும். 2021ஆம் ஆண்டில் உலகளவில் மூன்றாவது பெரிய வாகனத்துறையாக இந்தியா மாறும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில்தான் பெரும் சரிவு நடந்துள்ளது. அதிகரிக்கும் வேலை இழப்பு! விழாக்காலங்களில் அதிகரிக்கும் கார் மற்றும் பைக் விற்பனை கூட இந்த ஆண்டு மந்தமானதால், வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ”ஆட்டோமொபைல் துறையில் முதலீடு இல்லை; தேவையும் இல்லை. வளர்ச்சி வானத்திலிருந்தா வரும்?” என்கிறார் பஜாஜ் ஆட்டோ நிறுவனரான ராகுல் பஜாஜ். இவரின் கூற்றை ஆமோதிக்கும் விதமாகவே கார் மற்றும் பைக் விற்பனை நிலவரங்கள் திகிலூட்டுகின்றன.