பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!



Image result for parle g
better india




பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்!

பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது. 


இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது.

ரூ.5 மதிப்புள்ள பிஸ்கெட்டை வாங்கவே மக்கள் தயங்கும் நிலை உருவாகியுள்ளது. நீல்சன் நுகர்வுப்பொருட்கள் பிரிவின் விற்பனை 10 சதவீதம் இருக்கும் என சந்தை ஆய்வு நிறுவனம் நீல்சன் கூறியுள்ளது. முந்தைய ஆண்டில் இப்பிரிவின் வளர்ச்சி 12 சதவீதமாக இருந்தது. ரூ.100க்கு குறைவான பிஸ்கெட்டுகளுக்கு முன்னர் 12 சதவீத வரி விதிக்கப்பட்டது.

தற்போது பிஸ்கெட் வகைகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுவது பெரும் நெருக்கடியை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. பார்லே நிறுவனம், அதிக வரி விதிப்பால் பிஸ்கெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து விற்கிறது.

 ”முதலில் பிஸ்கெட்டுகளுக்கு இந்தளவு வரி கிடையாது. ஆனால் இன்று வரி அதிகம் என்பதால், பிஸ்கெட்டுகளின் விலையை உயர்த்தும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியர்கள் விலையைப் பார்த்தே பொருட்களை வாங்குபவர்கள் என்பதால், எங்கள் விற்பனை சரிவைச் சந்தித்துவருகிறது” என்கிறார் பார்லே நிறுவன அதிகாரி மாயங்க் ஷா. 1929ஆம் ஆண்டு தொடங்கி செயற்பட்டு வரும் பார்லே, மெக்சிகோ, நைஜீரியா, நேபாளம் ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது.

நன்றி: லிவ் மின்ட், எகனாமிக் டைம்ஸ்