பிட்ஸ் - குத்துச்சண்டையில் சாதித்த ஆபிரகாம் லிங்கன்!





man #sketch #eskiz #dibujos


பவேரியா நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்கர்கள் 1740 ஆம் ஆண்டு ரகசியக் குழு ஒன்றைத் தொடங்கினர். இவர்கள் குறிப்பிட்ட அறைக்குள் வருவதற்கு கதவைச் சுரண்டி சிக்னல் கொடுப்பது வழக்கம். 

ஆபிரகாம் லிங்கன் அரசியல்வாதியாக புகழ்பெறுவதற்கு முன்னர் குத்துச்சண்டை வீரராக புகழ்பெற்றிருந்தார். 300 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியைச் சந்தித்திருந்தார். 

இருபதாம் நூற்றாண்டில் மங்கோலியாவில் விநோத தண்டனை வழக்கிலிருந்தது. குற்றவாளிகளை மரப்பெட்டியில் வைத்து பூட்டிவிடுவார்கள். இதனால் பலர், பெட்டியிலிருந்து வெளியே வர முடியாமல் பட்டினி கிடந்து இறப்பது சாதாரண நிகழ்ச்சி.  

1923 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பெல்மாண்ட் பார்க்கில் குதிரைப்பந்தயம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற வீரர் ஃபிராங்க் ஹாயெஸ், போட்டியின் பாதியில் மாரடைப்பால் இறந்தார். ஆனால் அவரது குதிரை உயிரற்ற உடலைச சுமந்து சென்று வெற்றிக்கோட்டை தொட்டதுதான் பிரமிக்க வைக்கும்  செய்தி. 

1945 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் ராணுவ டாங்கிகளில் தேநீர் தயாரிக்கும் வசதி உருவாக்கப்பட்டது. 

அடால்ஃப் ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் ஆகிய தலைவர்களுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இம்மூவருமே அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்பதுதான் அது. 

சுடோமு யமகுசி, அமெரிக்கா ஜப்பானின் மீது வீசிய இரண்டு அணுகுண்டு வீச்சிலும் தப்பி உயிர்பிழைத்தவர். அமெரிக்கா முதல் குண்டை வீசும்போது ஹிரோசிமாவில் இருந்தவர். இரண்டாவது குண்டை வீசும்போது, நாகசாகியிலுள்ள தன் வீட்டிற்கு பயணம் செய்து கொண்டு இருந்தார்.

news: ati