இடுகைகள்

முதலீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிக்டாக்கை பொது எதிரியாக கட்டமைக்கும் அமெரிக்கா!

படம்
  மேற்குலக நாடுகளுக்கு வேற்றுகிரகவாசிகள் என்றுமே எதிரியாகவே இருக்கமுடியும். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பயம் கொள்கிறார்களா என்ன? முதலில் ரஷ்யாவை நினைத்து பீதியடைந்தவர்கள், திரைப்படம், பாடல், டிவிநிகழ்ச்சி, செய்தி என அனைத்திலும் அதற்கு எதிரான கருத்துகளை உருவாக்கினார்கள். இந்த ஆண்டுகூட உக்ரைனில் எடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் செவ்விந்தியர்களை கொன்ற உண்மையைப் பேசும் ஸ்கார்சி படத்திற்கு ஒற்றை விருது கூட வழங்கப்படவில்லை. இப்போது சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை பலவீனப்படுத்த வழி தேடுகிறார்கள். அந்நாட்டு நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். அதற்கு தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறுகிறார்கள்.  டிக்டாக் ஆப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினைந்து நொடி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ஆப். தற்போது, இசை, நூல் வாசிப்பு என வளர்ந்து வருகிறது. இதில் வீடியோ போட்டு சம்பாதிப்பவர்கள் உலகம் எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தில் நாற்பது சதவீத பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பூர்விகம் சீனா.

கருப்பின பெண் தொழில்முனைவோருக்கு உதவும் முதலீட்டு நிறுவனம்!

படம்
  அரியன் சைமன் - அயானா பார்சன்ஸ் arian simone, ayana parsons கருப்பின பாகுபாடு என்பது மேற்குலக நாடுகளில் சாதாரண ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. சமநீதி, ஒரே சட்டம் என்றாலும் மறைமுகமாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கீழே தள்ள நிறவெறியர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முக்கியக்காரணம், அவர்களிடம் தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதற்கு நிதி முதலீட்டையும் பெருமளவு பெற்றுவிடுகிறார்கள். இவர்களோடு போராடி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேரளவுக்கு முதலீடு பெறமுடிவதில்லை.  ஆண்களே முக்கி முனகும்போது, கருப்பின பெண்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் செய்யும் தொழில்களுக்கு முதலீடு செய்யவே ஃபியர்லெஸ் ஃபண்ட் என்ற முதலீட்டு நிறுவனம் உருவானது. இதை 2018ஆம் ஆண்டு அரியன் சைமோன் தொடங்கினார். இவருடன் கூட்டாளியாக அயானா பார்சன்ஸ் இணைந்துள்ளனர். இவர்கள், மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீடுகளை வழங்குகிறார்கள்.  இதுவரை 44 நிறுவனங்களில் 27 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளனர். முதலீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருவது, வெள்ளையர்கள்தான். பெண்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கான முத

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜேபி லீ கா ஷிங் மூத்

கேம்ஸாப், ஏத்தர் வெற்றிக்கதை - 40 அண்டர் 40 பார்ச்சூன் பட்டியல்!

படம்
  தருண் மேத்தா, இயக்குநர், ஏத்தர் ஸ்வப்னில் ஜெயின், தருண் மேத்தா, ஏத்தர் யாஸாஸ் அகர்வால், கௌரவ் அகர்வால், கேம்ஸாப் கேம்ஸாப் கேம்ஸாப் யாஷாஸ் அகர்வால் கௌரவ் அகர்வால் கௌரவ், புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். யாஸாஸ் அகர்வாலுக்கு மொபைலில் விளையாட்டுகளை விளையாடுவதில் ஆர்வம் உண்டு. இதுதான் கேம்ஸாப் நிறுவனம் தொடங்குவதற்கான விதை. இந்திய நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் தொகையினர் 35 வயதினராக இருக்கிறார்கள். தொழிலுக்கு இதை விட நல்ல விஷயம் என்ன வேண்டும்? பல்வேறு விளையாட்டுகளை டெவலப்பர்களிடம் பேசி உரிமம் பெற்று வாங்கி அதை பிரபலமான ஆப்கள், வலைத்தளங்களில் இணைத்துவிடுவதே கேம்ஸாப்பின் வேலை. இப்படி செய்து கடந்த ஆண்டு 42 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளனர். இதில், அவர்களோடு இணைந்துள்ள வலைத்தளம், ஆப்களுக்கு 50 சதவீத தொகையை ஒப்பந்த தொகையை வழங்கிவிட்டனர். கேம்ஷாப்பின் இயக்குநர், யாஸாஸ் அகர்வல். கேம்ஸாப் வேலை செய்யும் என்று தெரிந்தவுடன் கௌரவ், தான் பெய்ன் கன்சல்டன்சியில் பார்த்து வந்த வேலையைக் கைவிட்டார். அட்வெர்கேம் டெக்னாலஜிஸ் பி. லிட் என்பதே கேம்ஸாப்பின் தாய் நிறுவனம். இன்று கேம்ஸாப்பின் விளையாட

கௌதம் அதானி செய்த மோசடிகள் - ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்கள்

படம்
    கௌதம் அதானி, சமையல் பொருட்கள், மின்சாரம், கட்டுமானம், என ஏராளமான தொழில்களை நடத்தும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர். 2013ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருபத்தி இரண்டாம் இடத்தில் இருந்தார். ஆனால் இன்று ராக்கெட் வேகத்தில் வளர்ந்து உலகளவில் மூன்றாவது பெரும் பணக்காரராக மாறி நிற்கிறார். தொழிலதிபர், அவர் செய்யும் தொழில்கள், ஈட்டும் வருமானம் பற்றி சாமானிய மக்கள் ஆர்வம் கொள்ளவோ, பெருமைப்படவோ,   கவலைப்படவோ ஏதுமில்லை. ஆனால் அதானி குழுமம் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன் தொகையைப் பெற்றுள்ளளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களின்(எல்.ஐ.சி, பாரத ஸ்டேட் வங்கி) நிதி முதலீட்டையும் தனது அதானி குழும பங்குகள் மூலம் ஈர்த்துள்ளது. அதானி நிறுவனம் கடன் தொகையை கட்டாதபோது, அல்லது அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்தால் மக்களே அதன் விளைவுகளை ஏற்று சிலுவையை சுமக்க நேரிடும். அதானி குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகை 81,234.70 கோடி. இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 17.8 ட்ரில்லியன் டாலர்களாகும். இந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்கும் மே

ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்?

படம்
  முதலீட்டின் தேவை 1 ஒருவர் எதற்காக முதலீடு செய்யவேண்டும்? நாம் இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பாக, ஒருவர் முதலீடு செய்யவில்லை என்றால் அவரின் நிலை என்னவாகும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம். தோராயமாக நீங்கள் மாதம்தோறும் ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.30 ஆயிரத்தை வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து, பொருட்கள் வாங்குவது, மருத்துவ சிகிச்சை   மேலும் பல செலவுகள் என்ற வழியில் செலவழிக்கிறீர்கள். சம்பளத் தொகையில் மீதமிருப்பது ரூ. 20 ஆயிரம் ஆகும். இதுதான் உங்களின் மாதச் சம்பளத்தில் மீதமாகும் உபரித்தொகை.   எளிமையாக விளக்குவதற்காக, தற்போதைக்கு உங்களின் வருமான வரியை விட்டுவிடுவோம். 1.        இப்போது நாம் சில அம்சங்களை யூகித்துப் பார்ப்போம். 2.        உங்கள் நிறுவனத் தலைவர் கருணையோடு ஆண்டுக்கு பத்து சதவீத அளவுக்கு சம்பளத்தை உயர்த்துகிறார். 3.        விலைவாசி ஆண்டுக்கு எட்டு சதவீதம் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 4.        உங்களுடைய தற்போதைய வயது 30. ஐம்பது வயதில் வேலையில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளீர்கள். உங்களிடம் ஓய்வுக்குத் தேவையான ப

சிங்கப்பூரை முதலீட்டாளர்கள் தேடி ஓடுவது ஏன்?

படம்
          சிங்கப்பூரை தேடி ஓடும் பணக்காரர்கள் ! கிரேஸி ரிச் ஆசியன்ஸ் படம் வந்ததில் இருந்து பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய ஆசை வேர்விடத்தொடங்கிவிட்டது . ஏற்கெனவே சிங்கப்பூர் வேலைகளுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் புகழ்பெற்றது . இப்போது உலகிலுள்ள பல்வேறு பணக்காரர்களும் கூட தங்களது கடைகளையும் , வீடுகளையும் சிங்கப்பூரில் உருவாக்கிக்கொள்ள பரபரக்கிறார்ளள் . அதற்கேற்ப நிலத்தையும் வாங்கிப்போட்டு வருகிறார்கள் . பிற நாடுகளை விட சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் எளிதாக சென்று செட்டிலாக முடியும் . அங்கு அதற்கான உலகளவிலான முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர் . அந்த நாட்டில் 13.8 கோடி ரூபாய் வரையில் யார் முதலீடு செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு பாஸ்ட் டிராக் முறையில் குடியிருப்பதற்கான உரிமைகளை வழங்கி வருகிறது . குறிப்பிட்டளவு சொத்துகள் அதாவது ஆயிரம் கோடிக்கும் மேல் இருந்தாலும் அரசின் சலுகைகள் உங்களுக்கு மழையாக பொழியும் . ஹாங்காங் , இப்போது சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றிய நாடா , தனி நாடா என்று தவித்துக்கொண்டிருக்கிறது . எனவே இந்த நேரத்தில் அங்கு சென்று முதலீடுகளை செய்யவும

நிர்வாகத்தில் சாதித்த பெண்கள்! - கீது வர்மா, கீதா கோபிநாத், மாதுலிகா குகாதாகுர்தா, கிருத்திகா ரெட்டி, ரேவதி அதுவைத்தி

படம்
              சாதனைப் பெண்கள் கீது வர்மா ஆரோக்கியமான உணவுப்ப்பொருட்கள் பிரிவு தலைவர் , இந்துஸ்தான் யுனிலீவர் கீது வர்மா , நிறுவனத்தின் ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பிரிவை விரிவாக்கியுள்ளார் . உலகமெங்கும் ஆரோக்கியமான பானங்கள் , உணவுப்பொருட்களுக்கான கவனம் அதிகரித்து வருகிறது . நாங்கள் இப்போது உள்ளூரில் விளையும் பல்வேறு பொருட்களை எங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம் , நோய் எதிர்ப்பைத் தூண்டும் விட்டமின் சி , ஜிங்க் ஆகியவற்றை நாங்கள் உணவுப்பொருட்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார் . 2018 ஆம் ஆண்டு நிறுவனத்தில் புதிய பொறுப்புக்கு வந்தார் கீது வர்மா . வெஜிடேரியன் பட்சர் , கிரேஸ் ஆகிய பிராண்டுகளை இவர் கையகப்படுத்தி நிறுவனத்தின் வருமான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் . நாங்கள் இப்போது இறைச்சியை தவிர்த்து தாவர புரதங்களில் இருந்து இறைச்சியை தயாரிக்க உள்ளோம் என்றார் . கீதா கோபிநாத் உலக நாணய நிதியத்தின் பெண் பொருளாதாரவியலாளர் ரகுராம் ராஜனுக்குப் பிறகு இரண்டாவது இந்தியராக உலக நாணய நிதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர் கீதா . தனது ப