கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்த கோல்ஃப் புலி! - டைகர் உட்ஸ்
டைகர் உட்ஸ் டைகர் உட்ஸ் கடந்த ஆண்டு டைகர் உட்ஸோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் எங்கள் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிப் பேசினோம். அப்போது எனது நான்கு வயது மகன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிப்பதாக கூறினேன். அதற்கு டைகர் உட்ஸ், தனது பிள்ளைகள் தான் கோல்ஃப் விளையாட்டில் வெல்வதை அவர்கள் பார்ப்பார்கள் என்று கூறினார். பதினொரு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உட்ஸ், தனது 15 வது பட்டத்தை வென்று சாதித்தார். அவரின் போராட்டம் எனக்கு பெருமையாக இருந்தது. சில ஆண்டுகளாகவே அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகளால் ஓய்வில் இருந்தார். பலமணி நேரங்களை உடற்பயிற்சி நிலையத்திலும், கோல்ஃப் மைதானத்திலும் செலவழித்தார். எங்கு 15 வது பட்டம் வென்றாரோ அதே மைதானத்தில் அவர் தனது அப்பாவை 22 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தழுவினார். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றாலும் தனது பிள்ளைகளை கட்டித்தழுவ யாரும் அனுமதிக்கவில்லை. அவர் திரும்ப விளையாடி வெற்றி பெறுவது கடினம் என விளையாட்டு விமர்சகர்கள் கூறிய நிலையில் அவரது வெற்றி மகத்தானது. போராட்டங்கள் நிறைந்தவை. வலி நிறைந்தவை. தனது வெற்றி மூலம்