பொறுப்பான மக்கள் சேவகன்! - ராபர்ட் முல்லர்






Why Robert Muller Was Selected to Be the Special Prosecutor ...
ராபர்ட் முல்லர் 





ராபர்ட் முல்லர்

அமெரிக்காவைச் சேர்ந்த நேர்மையான அரசு அதிகாரி, வழக்குரைஞர் என்றுதான் இவரை சொல்லவேண்டும். தன்னுடைய பதவியில் என்ன செய்யவேண்டுமோ அதனை செய்தார். அதற்கு வரும் விமர்சனங்களைப் பற்றி அணுவளவும் கவலைப்படவில்லை. அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு வருகிறது என்று விமர்சனம் கிளம்ப, அதுபற்றிய விசாரணையைச் செய்து சத்தம் இல்லாமல் சமர்ப்பித்தார். அப்போதும் கூட அவரின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட கசியவில்லை.

வியட்நாம் போரில் சண்டையிட்டு அதற்கான கௌரவப் பதக்கங்கள் பெற்றவர். தன் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களாக நேர்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டவர். பள்ளியில் படித்த தனது தோழியை திருமணம் செய்துகொண்டார். எஃப்பிஐயின் தலைவராகவும் பதவி வகித்தார். தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவுகளை நேர்மையாக நிறைவேற்றினார்.

சாலி யேட்ஸ்


கருத்துகள்