இணையம் வழியாக மக்களை இணைத்தவர்! - மார்க் ஸூக்கர்பெர்க்




Mark Zuckerberg
மார்க் ஸூக்கர்பெர்க்



மார்க் ஸூக்கர்பெர்க்

உலகையே இன்று தனது நிறுவனத்தின் மூலம் மாற்றியமைத்துள்ள மார்க்கை, நான் 2004ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை வாங்கியிருந்தார். ஃபேஸ்புக்கிலும் கூட ஏராளமான நல்ல அம்சங்களை சேர்த்துக்கொண்டிருந்தார்.

தனது நிறுவனத்தின் மூலம் மக்களை எப்போதும் இணைந்திருக்க செய்தவர் மார்க். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை நான் சந்தித்தபோது எப்படி அடக்கமாகவும் கூச்சம் கொண்டவராகவும் இருந்தாரே அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். கலிஃபோர்னியாவில் அவரது நவீனமான இல்லம் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை எளிமையானது. நான் சமூக வலைத்தளத்தை கடுமையாக விமர்சிப்பவன். காரணம் அது மனித உறவுகளுக்கு இடையில் உள்ள பலவீனமான புள்ளிகளைப் பயன்படுத்தி லாபத்தில் கொழிக்கின்றன.

இன்று ஃபேஸ்புக் ஏராளமான தகவல் கசிவு, அரசியல் சீர்குலைவு பதிவுகள், வெறுப்பு அரசியல், போலி செய்திகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் உலகமெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கடந்து நாகரிகமான முறையில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர் உதவுவார் என நம்புகிறேன்.

சீன் பார்க்கர்

கருத்துகள்