இடுகைகள்

வேட்டை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

படம்
  தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம் காட்டுவிலங்குகளில் அதாவது நிலத்தில் வேட்டையாடுவதில் சிறந்தவை பூனைக்குடும்ப விலங்குகள்தான். சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா ஆகியவை வலிமையும் அபாரமான வேட்டைத்திறனும் கொண்டவை. காட்டில் வாழும் சிங்கத்தின் ஆயுள் 13-15 ஆண்டுகளாகும். சிங்கத்தின் கர்ஜனை முழக்கம் 5-8 கி.மீ தொலைவு வரை கேட்கும்.   பனிச்சிறுத்தை, 5,859 மீட்டர் உயரத்தில் வாழக்கூடிய திறன் பெற்றது. இரவில் வேட்டையாடும் புலியின கண்பார்வை திறன், மனிதர்களை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் வாழும் பூனை குடும்ப விலங்குகளில் பெரியது ஜாகுவார்தான். 1.7 மீட்டர் நீளத்தில், 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இரவில் உணவுக்காக மட்டும் ஜாகுவார் பத்து கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. ஜாகுவாரின் குட்டிகள் பிறக்கையில் கண்பார்வை இல்லாமல் பிறந்து, பதினான்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கும் திறன் பெறுகின்றன. பூனை குடும்ப விலங்குகளில் இது பொதுவான அம்சம். புலிகளில் ஒன்பது துணைப்பிரிவுகள் உள்ளன. பலி, காஸ்பியன், ஜாவன் ஆகிய பிரிவுகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் ப

இயற்கைப் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்த வலிமையான அரசியல் தலைமை தேவை - பெலிண்டா ரைட் , சூழலியலாளர்

படம்
  பெலிண்டா ரைட், சூழலியலாளர் பெலிண்டா ரைட், சூழலியலாளர்  பெலிண்டா ரைட் தலைவர், வைல்ட்லைஃப் புரடக்‌ஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இந்தியா, புலிகள் பாதுகாப்பில்,   50 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் காடுகள் அழியாமல் இருக்கின்றன. அதில் வாழ்ந்த புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்ற செய்தி அதிசயமாகவே உள்ளது. புலிகளின் வாழிடத்திற்கு அருகில் வாழ்ந்து வந்த மக்களின் சகிப்புத்தன்மை, புலிப்பாதுகாப்பு திட்டத்தின் சிறப்பான அணுகுமுறை ஆகியவற்றை பற்றி இந்தியா நிச்சயமாக பெருமைப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் இந்தியா மனிதர் விலங்கு மோதல் என்ற பெரிய சவாலை சந்திக்கவேண்டியுள்ளது. மக்களிடம், காடுகளில் உள்ள புலிகளைப் பாதுகாப்பதில் முன்னர் காட்டிய சகிப்புத்தன்மை மெல்ல மறைந்து வருகிறது. அரசின் எரிவாயுவிற்கான மானியம் குறையும்போது காட்டில் உள்ள விறகுகளைத் தேடி மக்கள் வருவார்கள், நகர கட்டுமானத்திற்கான சட்டவிரோத மணல் குவாரிகள், காட்டு விலங்குகளைத் தடுக்கும் சட்டவிரோத மின்சார வேலிகள் ஆகியவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். காட்டுத்தீ மற்றும் காட்டில்

முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

படம்
  தி ஹன்டர் (or dark hunter) மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் 292----- ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம். சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு   வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக். கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர்

மின்சார வேலியால் கொல்லப்படும் யானைகள்!

படம்
  அதிகரிக்கும் மனிதர், விலங்குகள் மோதல்! கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 222 யானைகள் இறந்துள்ளன. இவற்றின் இறப்புக்கு முக்கியக் காரணம் மின்சார வேலி ஆகும். நச்சு, ரயில் மோதல், சட்டவிரோத வேட்டை ஆகியவையும் பிற காரணங்களாகும். 2019 - 2021 காலகட்டத்தில் 197 புலிகள் இறந்துள்ளன. இதில் சட்டவிரோத வேட்டை மூலம் 29 புலிகள் கொல்லப்பட்டன என மத்திய வனம், சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அஸ்வின் சௌபே தகவல் தெரிவித்துள்ளார்.  அதேநேரம், விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்படி, 2019-2022 காலகட்டத்தில் 1,579 மனிதர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டு பலியாகியிருக்கிறார்கள். அதிக மனிதர்கள் பலியான மாநிலங்களில் ஒடிஷா முதல் இடத்திலும், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சட்டீஸ்கர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட புலி காப்பகங்களில், மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 125 பேர், புலிகளால் தாக்கப்பட்டு மரணித்துள்ளனர். இந்த பிரிவில் மகாராஷ்டிரம் 61 இறப்புகள் என அதிகளவிலான இறப்பு எண்ணிக்கையைக்

வேட்டையில் முந்தும் பூமா!

படம்
  வேட்டையில் முந்தும் பூமா! பூமா, ஜாக்குவாருக்கு இணையாக ஒப்பிடப்படும் உடல் அமைப்பைக் கொண்ட விலங்கு. இரவில் துடிப்பாக வேட்டையாடும். காடு தொடங்கி பாலைவனம் வரை தன்னை தகவமைத்துக் கொண்டு  வாழும் இயல்புடைய விலங்கு. பூமாவை குறிப்பிட ஆங்கில மொழியில் மட்டும் நாற்பது பெயர்கள் உண்டு.  அறிவியல் பெயர்: பூமா கான்கலர் (Puma concolor) குடும்பம்:  ஃபெலிடே (Felidae) வேறுபெயர்கள்:  கூகர் (Cougar), பாந்தர் (Panther), காடாமௌன்ட்(Catamount) தாயகம்: அமெரிக்கா அடையாளம்  மார்பும், வயிறும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மீதியுள்ள இடங்களில் பழுப்பு நிற முடி இருக்கும். வாலின் முனையில் கறுப்பு நிறம் உண்டு. வட்டவடிவில் வயிறு, சிறிய தலையைக் கொண்டது.  சிறப்பம்சம் சிறுத்தை போல முதுகெலும்பு நீளமாக இருப்பதால், வேட்டையாடும் வேகம் மணிக்கு 80 கி.மீ. மேற்புறமாக பாறைகளின் மீது 5.4 மீட்டரும்,  கீழ்ப்புறமாக 12  மீட்டர் தூரமும் தாவும் திறன் கொண்டது. இரையின் பின்னாலிருந்து கழுத்தை குறிவைத்து தாக்கி வீழ்த்தும்.  நீளம்  ஆண் (2.4 மீ.), பெண் (2.05 மீ.) எடை  ஆண் (52 முதல் 100 கி.கி வரை), பெண் (29 முதல் 64 கி.கி வரை) வேகம் - மணிக்கு 64 -

ஐஸ்லாந்தின் திமிங்கில வேட்டை தடையால் உருவாகும் மாற்றம்!

படம்
  திமிங்கில வேட்டைக்குத் தடை! ஐஸ்லாந்து நாட்டின், ஃபேக்ஸாபிளோய் விரிகுடா பகுதி. இங்கு, படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றும்போதே வழிகாட்டி, திமிங்கில இறைச்சியை தவிருங்கள். அதனை பாதுகாக்க முயன்று வருகிறோம் என்று கூறிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான திமிங்கில வேட்டையை நிறுத்தவேண்டும் என ஐஸ்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   ஜப்பான் நாடு, சில ஆண்டுகளாக திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது. பிறகு, 2019ஆம் ஆண்டு வணிகரீதியான திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக, ஐஸ்லாந்து நாட்டு திமிங்கில இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அரசின் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் ஸ்வாண்டிஸ் ஸ்வாவர்ஸ்டோட்டிர், ”திமிங்கிலப் பாதுகாப்பே முக்கியம். பொருளாதாரப் பயன் முக்கியமல்ல” என்று  நாளிதழில் எழுதியுள்ளார்.  இதெல்லாம் தாண்டி சூழல் அமைப்புகள், திமிங்கில வேட்டையைத் தடுக்க 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.   ஐஸ்லாந்தில் , 1600 ஆம் ஆண்டிலிருந்தே திமிங்கில வேட்டை நடைமுறையில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தில் நுழைந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்  திமிங்கி

இருவாட்சியை பாதுகாக்க காவலர்களான பழங்குடி மக்கள் - அபராஜிதா தத்தாவின் சூழல் பாதுகாப்பு முயற்சி!

படம்
  இருவாட்சியைப் பாதுகாக்கும் பழங்குடிகள்! அருணாசலப் பிரதேசத்தில், நைஷி பழங்குடிகள் (Nyishi tribe)வாழ்கிறார்கள். இவர்கள் அங்குள்ள காட்டில் தென்படும் பல்வேறு பறவைகளை வேட்டையாடி வந்தனர். அதில், இருவாட்சி பறவையும் ஒன்று. தற்போது, பழங்குடிகள் பறவைகளைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். எனவே, அவற்றைப்  பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.  தி ஹார்ன்பில் நெஸ்ட் அடாப்டேஷன் புரோகிராம் ஆப் அருணாசலப் பிரதேசம் எனும் திட்டம் (Hornbill Nest Adoption Program (HNAP)), 10ஆவது ஆண்டாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பக்கே (Pakke) புலிகள் காப்பக பகுதியில் இருவாட்சி பாதுகாப்புத் திட்டத்தை பத்து பழங்குடி மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். காடுகளில் விதைகளை பரப்பும் வேலையை இருவாட்சி பறவைகளே செய்கின்றன. உலகம் முழுக்க இருவாட்சி பறவைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. இதற்கு அதன் வாழிடம் அழிப்பு, வேட்டையாடப்படுவது ஆகியவை முக்கிய காரணங்கள். பக்கே புலிகள் காப்பகத்தில் கிரேட் ஹார்ன்பில் (The great hornbill,), ரூபோஸ் நெக்ட் ஹார்ன்பில் (Rufous-necked hornbill), ரேத்ட் ஹார்ன்பில் (Wreathed hornbill ), ஓரியன

வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

படம்
  வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்! மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது.  சட்டவிரோத கடத்தல் 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.   கழுகுகளுக்கு விஷம் 2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப

மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

படம்
  மீன் பிடிப்பதை தடை செய்தால்... உலகம் முழுக்க  உள்ள மக்கள் மீன்களை அதிகளவு உண்டு வருகிறார்கள். இதற்காக, கடலில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் மாசுபாடும் கூடுகிறது. 1961 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஆய்வில் இறைச்சியை விட மீன்களை அதிகளவு உணவாக மக்கள் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. உலக நாடுகளிலுள்ள அரசுகள் மீன்பிடிப்பதை தடை செய்தால் என்னாகும்? உணவுத்தேவை உலகம் முழுக்க 40 கோடிக்கும் அதிகமான மக்கள்  மீன்பிடித்தொழில் இருக்கிறார்கள்.அரசின் தடையால், இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.  ”சிறியளவில் மீன்களை பிடித்து விற்கும் மீனவர்களைப் பற்றிய ஆவணங்கள் கிடைப்பதில்லை” என்றார் சூழலியலாளர் ஸ்டீவன் பர்செல். தெற்காசியா, இந்தியா, மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் உள்ள மக்கள் புரத தேவைக்கு அதிகமும் மீன்களையே சார்ந்துள்ளனர்.  ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகளவு மக்கள் புரத தேவைக்கு இறைச்சியை சார்ந்துள்ளனர். நிலத்தில் குறைந்தளவு விவசாயம் செய்யும் நாடுகளில் மீன்பிடி தடை என்பது உணவுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். மீன் பிடிப்பதை முழுமையாக தடை செய்தால், மக்கள் பலரும் பதப

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக

வேட்டையாடுதல் எனும் ஆதி உணர்வு- கடிதங்கள்

படம்
  ஓநாய்குலச்சின்னம் தமிழில் சி.மோகன் அன்புத்தோழர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நன்றாக இருக்கிறீர்களா? நான் இப்போது எங்கள் இதழில் வெளியாகும் சிறப்பிதழுக்காக வேலை செய்து வருகிறேன். நெற்பயிருக்கான சிறப்பிதழ். உதவி ஆசிரியர்களை நிருபர்களாக மாற்ற நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எப்படி சாத்தியமோ? ஓநாய் குலச்சின்னம் நாவலைப் படித்து வருகிறேன். இன்னும் இருநூறு பக்கங்கள் மிச்சமுள்ளன. நாடோடியாக வாழும் மங்கோலியர்களின் வாழ்க்கைப்பதிவு இது. ஓநாய்கள் முக்கியான பாத்திரங்களாக வரும் வேட்டை இலக்கியம் இது. சி.மோகனின் அற்புதமாக மொழிபெயர்ப்பு காலம் கடந்தும் நிற்கும் என நினைக்கிறேன்.  2020 பெரும் போராட்டங்களுடன்தான் தொடங்குகிறது. விளைவு எப்படி இருக்குமோ? பொருட்களின் விலை ஏற்றம் மக்களின் மனதில் சொல்ல முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜல்லிக்கட்டு - ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கிய படம் பார்த்தேன். கறிக்கடைக்காக கட்டப்பட்டிருக்கும் மாடு ஒன்று தப்பித்துவிடுகிறது. காட்டின் உள்ளே ஓடிவிட அதனை வேட்டையாட மனிதர்கள் ஆவேசத்துடன் கிளம்புகிறார்கள். மாட்டை வேட்டையாடினார்களா இல்லையா என்பதுதான் கதை. வேட்டையாடுதல்

வேட்டையாடுவது எப்படி? சைக்கோ டைரி

படம்
  இறப்பதே விதி! ஒருவரை ரத்தம் வெள்ளமாக பீய்ச்சியடிக்கும்படி வேட்டையாடிவிட்டு அதனை நியாயப்படுத்த முடியுமா? சீரியல் கொலைகார ர்கள்  அதனை செய்வார்கள். நான் விலைமாதுக்களை கொன்றேன். அவர்கள் தெருக்களில் குப்பைகளாக கிடந்தார்கள். என்னால் முடிந்தளவுக்கு அவர்களை சுத்தப்படுத்தினேன் என்று சீரியல் கொலைகார ர் பீட்டர் சட்கிளிப் கூறினார்.  பெண்களை கடுமையாக வெறுப்பவர்கள் அவர்களை வெளிப்படையாக போலீசாரின் விசாரணையில் தேவடியாக்கள் என்று திட்டுவது உண்மை. இதற்கு மதரீதியான ஒட்டுதல் முக்கியமான காரணமாக இருக்கலாம்.  விலைமாதுக்களை கொல்லும் எண்ணம், அவர்களை எப்படி விதவிதமாக கொன்றார்கள் என்பதைப் பற்றியும் சீரியல் கொலைகாரர்கள் மகிழ்ச்சியே தெரிவித்துள்ளனர்.  சிங்கத்தின் வேட்டை சீரியல் கொலைகார ர்கள் பெரும்பாலும் சுகவாசிகள். அவர்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கேதான் பெரும்பாலான குற்றத்தை செய்வார்கள். அயனாவரத்தில் உள்ளவர், கே.கே. நகர் சென்று குற்றத்தை செய்துவிட்டு வரமாட்டார். அது அவரின் இயல்பான சூழலை கெடுத்துவிடும். கே.கே. நகரிலுள்ளவர்களும் இவன் நம்ம ஏரியாவைச் சேர்ந்தவன் கிடையாதே என சந்தேகம் வந்துவிடும். மயிலாப்பூரில் 12 எக்ஸ

ஆர்க்டிக் பகுதியில் வாழும் பனிக்கரடி உறையாமல் இருப்பது எப்படி?

படம்
                பனிக்கரடிகளின் சிறப்பம்சங்கள் பனிக்கரடிகளின் உடலில் 4 அங்குல அளவிற்கு கொழுப்பு நிறைந்துள்ளதால் , அதன் உடல் எப்போதும் கதகதப்பாக இருக்கிறது . அடுத்து , அதன் உடலிலுள்ள இரண்டு அடுக்கு முடிக்கற்றைகள் . சிறிய முடிக்கற்றைகள் காற்றை உள்ளே அனுமதித்து உடல் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது . நீண்ட முடிக்கற்றை , நீரில் வேட்டையாட கரடிகள் செல்லும்போது உடலுக்குள் நீர் செல்லாமல் வாட்டர் ப்ரூப்பாக உதவுகிறது . பனிக்கரடிகள் இடைவேளை இன்றி , நூறு கி . மீ . தூரம் துணிச்சலாக நீந்தும் . இதன் கண்களிலுள்ள கூடுதலான இமைகள் கடலில் இரையை வேட்டையாடும்போது தெளிவாக பார்க்க உதவுகிறது . எப்படியென்றால் , பனிப்புயல் வீசும்போது கூட தனது இரையைத் தெளிவாக பார்க்கும் திறன்கொண்டது . கரடியின் மூக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும் மோப்பம் பிடிப்பதில் சிறந்தவை . 30 கி . மீ தொலைவுக்குள் சீல்கள் இருந்தால் உடனே அதனை அறிந்துவிடும் . இதன் முடியில் மற்றொரு ஸ்பெஷல் உள்ளது . அதுதான் அதன் ஹாலோ தன்மை . இதனால் கிடைக்கும் சூரியனின் வெப்பத்தை எளிதாக உடலுக்கு கடத்திக் கொள்ளமுடியும் . இதன் பா

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ

புயலின் தன்மையைக் கணிக்கும் புயல்வேட்டையர்கள்

படம்
தெரிஞ்சுக்கோ! புயல் வேட்டையர்கள் புயல் வருகிறது என்றால் நாம் காய வைத்து துணி முதற்கொண்டு எடுத்து வைத்துக்கொண்டு, இன்வெர்டரில் டீசல் ஊற்றிக்கொண்டு தயாராக இருப்போம். இதில் சிலர் மட்டும் மிக கவனமாக சிறியவகை ஹெலிகாப்டர்களை எடுத்துக்கொண்டு புயலில் செல்வார்கள். இதன்மூலம் புயலின் தன்மையைக் கணிக்க முயற்சிக்கிறார்கள். மணிக்கு 314 கி.மீ வேகத்தில் வீசும் புயலுக்கு ஈடுகொடுத்து பறப்பது சாதாரண காரியமா? புயல் வேட்டையர்கள் இதைத்தான் செய்கிறார்கள். புயலுக்குள் சென்று உயிரோடு திரும்புவது சிரமம்தான். அறிவியல் தகவல்களை துல்லியமாக சேகரிக்க இந்த விஷயத்தை செய்கிறார்கள். புயலுக்குள் செல்லும் புயல் வேட்டையர்கள் அதனை ஆய்வு செய்து முழுமையாக தகவல் திரட்ட தேவைப்படும் நேரம் 8-12 மணிநேரம். இவர்களின் விமானம் தோராயமாக 10 ஆயிரம் அடி தூரத்தில் பயணிக்கிறது. அமெரிக்காவில் உள்ள விமானப்படையில் புயல் வேட்டையாளர்களாக 70 பேர் பணிபுரிகிறார்கள். பருவநிலையைக் கணிப்பதற்காக 70 ட்யூப் வடிவிலான கருவிகள் விமானத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. நோவா எனும் புயல் வேட்டையர்கள் பயன்படுத்தும் விமானத்தில் 3 இஞ்சின்கள் உ