இடுகைகள்

ரத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - மனித உடல்

படம்
  படம் - ஜாக்சன் டேவிட் தெரிஞ்சுக்கோ – மனித உடல் மனித உடலிலுள்ள எலும்புகள் அதிகமுள்ள இரண்டு பகுதி கைகளும், கால்களும் ஆகும். கால்களில் 26, கைகளில் 27 எலும்புகள் உள்ளன. உடலிலுள்ள ரத்த நாளங்களை   விரித்தால் ஒரு லட்சம் கி.மீ. தூரம் வரும். தாடையிலுள்ள தசையான மசெட்டர், உடலில் மிக வலிமையான தசையாகும். இதன் கடிக்கும் வேகம் 91 கி.கிக்கும் அதிகம். ஒருநாளைக்கு, 1.5 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கிறது. இரண்டு நுரையீரல்களிலும் 300 மில்லியன் காற்றுப் புரைகள் உள்ளன. இந்த காற்று புரைகளுக்கு அல்வெயோலி என்று பெயர்.   மனிதர்களின் மூக்கால் இருபதாயிரம் வாசனைகளை வேறுபடுத்தி அறியலாம். கண்களிலுள்ள ரெட்டினாவில் 130 ஒளி உணர்வு செல்கள் உள்ளன. இதனால்தான் மனிதர்களால் வண்ணங்களை எளிதாக காண முடிகிறது. மனிதர்கள் தங்களது வாழ்நாளில் கண்களை தோராயமாக 415 மில்லியன் முறை சிமிட்டுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாக்கிலுள்ள பழைய சுவைமொட்டுகள் நீக்கப்பட்டு, புதியவை வளருகின்றன. குழந்தைகளுக்கு நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின எண்ணிக்கை பத்தாயிரம், ஆனால் பெரியவர்களுக்கு ஆறாயிரம் மட்டுமே உள்ளது.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்

படம்
காப்பா - ஷாஜி கைலாஷ்   காப்பா இயக்கம் ஷாஜி கைலாஷ் பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம். மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம். படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார். ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்கொள்

கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

படம்
    அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 காட்டேரி இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.   எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி   கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார். காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். உனக்கென்ன தண்டனை கி

கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

படம்
  பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார். ஏன் இ

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆ

ஒருவரின் கன்னம் சிவக்க என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ஒருவரின் கன்னம் சிவப்பது என்ன காரணத்தால்?  உண்மை. பொதுவாக ஒருவருக்கு கூச்சம், வெட்கம், அவமானம், திகைப்பு ஆகிய சூழ்நிலைகளில் முகம் சிவந்துபோகும் என புரிந்துகொண்டிருக்கிறோம். அறிவியல்பூர்வமாக பார்த்தால்,  உபரியாக உள்ள ரத்தம் தோலின் கீழுள்ள ரத்த நாளங்களில் வேகமாக பாய்வதால் தான் கன்னம் சிவக்கிறது.  கன்னத்தில் ஏற்படும் சிவப்பு நிறத்திற்கு வெப்பம், நோய், மருத்துகள், மது, காரசார உணவுகள், ஒவ்வாமை, உணர்ச்சிகள் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. கன்னத்தில் உள்ள தசைகளை, நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.  மைக்ரோவேவ் ஓவனில் உலோக பாத்திரங்களை வைப்பது சரியானதா? உண்மை. பிளாஸ்டிக், கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். மாறாக, உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தினால் மைக்ரோவேவ் ஓவன் விரைவில் பழுதடையும். ஓவனில் உணவை சமைக்க பயன்படும் குற்றலைகள், மின்காந்த அலைகளாகும்.  ஓவனில் உருவாகும் குற்றலைகள், உணவுப்பொருளால் ஈர்க்கப்படுவதன் காரணமாகவே உணவு வேகிறது. ஆனால், உலோகப்பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது உணவு சீராக வேகாது. உலோகம் சிறந்த மின்கடத்தி என்பதால், குற்றலைகளை  உடனே பிரதிபலிக்கும். இதனால், உலோகமும், ஓவனும் கட

எறும்புகளின் ரத்தம் உறிஞ்சும் மணல்பேய்! - குள்ளான் பூச்சியின் கதை!

படம்
  கூம்பு வடிவக் குழியில் மணல்பேய்!  வீட்டுக்கு அருகில் கூட கூம்பு வடிவக் குழியில் வாழும் ஆன்ட்லயன் சாண்ட் பிட்டைப் பார்க்கலாம். இதற்கு, குள்ளான், மணல் பேய், டூடுல் பூச்சி  என பல பெயர்கள் உண்டு.  இதன் லார்வா நிலையில் மண் தரையில் குழிதோண்டி, கூம்பு வடிவ பொறியமைக்கும். அதில் விழுந்து மாட்டிக்கொள்ளும் எறும்புகள், பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது.   பெயர் ஆன்ட்லயன் சாண்ட் பிட் (Antlion Sandpit) குடும்பம் :மைர்மெலியோன்டிடே(Myrmeleontidae) வரிசை : நியூரோப்டெரா (Neuroptera) அடையாளம்: கரும்பழுப்பு நிறம் கொண்டது.உடலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும்.  லார்வா நிலையில், உடல் பெரிதாக இருக்கும். சதுர வடிவத் தலையில் சிறிய உணர்கொம்புகள்உண்டு. நீளமான இரையைப் பிடிக்கும் பற்கள் இதன் அடையாளம். பற்களால் இரையை கீறி பிளந்து ரத்தம் உறிஞ்சும். முழுவளர்ச்சி அடைந்த நிலையில் நீண்ட உடலோடு, இரு சிறகுகள் இருக்கும். உடலை மறைத்து முடிகள் இருக்கும். எங்கு பார்க்கலாம்: உலகம் முழுக்க காணப்படுகிறது. குளிர் பிரதேசங்களில் காணப்படும் குள்ளான் பூச்சி வகை, யூரோப்பியன் யூரோலியோன் நாஸ்ட்ராஸ் (European Euroleon nostras)  உணவு: லார்வா இ

ஆக்டோபஸை எதிர்க்கும் சூசைட் ஸ்குவாட்! - ரத்தம் தெறிக்கும் அவல நகைச்சுவைப் படம்!

படம்
சூசைட் ஸ்குவாட் 2021 இயக்குநர் ஜேம்ஸ் குன் முதல் படத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பார். இந்த படத்தில் இட்ரிஸ் எல்பா அந்த கேரக்டரை எடுத்துக்கொண்டு அட்டகாசப்படுத்தியிருக்கிறார். படத்தில் நினைத்து நெகிழ எந்த காட்சிகளும் கிடையாது. அனைத்து காட்சிகளுமே கொண்டாடியபடி பார்க்கவேண்டியதுதான். சூசைட் ஸ்குவாட்டிற்கு இம்முறை ஒரு நாட்டுக்கு சென்று அங்கு நடைபெறும் ஸ்டார்ஃபிஷ் என்ற திட்டத்தை அழிக்க வேண்டிய திட்டம் வழங்கப்படுகிறது. எப்போதும் போல தேசியவாத தலைவர், கைதிகளை மிரட்டி இந்த திட்டத்தில் இணையச்செய்கிறார். பிளட்ஸ்போர்ட், பீஸ்மேக்கர், டாட் மனிதன், கிங் ஷார்க், ராட் கேட்சர் 2 என்ற பெண் என வினோதமான பழக்கம், திறன்களைக் கொண்டவர்கள் இணைகிறார்கள். இவர்கள் எல்லோரும் கார்ட் மால்டிஷ் என்ற தீவுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு முன்னர் சென்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இதற்கு ஸ்குவாட்டில் உள்ள துரோகியே முக்கியமான காரணம். அதில் பிழைக்கும் கேப்டன் பிளேக் என்பவரும் பிளட் ஸ்போர்டும் இணைந்து மால்ட்டிஷ் தீவுக்கு போய் திங்கர் என்ற ஆய்வாளரை மிரட்டி எப்படி ஸ்டார்ஃபிஷ் திட்டத்தை அழிக்கிறார்கள்

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

படம்
          ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது . இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் . இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள் . அவர்கள் வாழும் இடம் , சாப்பிடும் உணவுகள் , டயட் கடைப்பிடிக்கிறார்களா , அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது , செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா , வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள் . இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் . ரத்த சோதனை , தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள் . இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும் , ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம் . மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள் . முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்ட