இடுகைகள்

பூஞ்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த

சமணர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருகர்களின் பாதை! - கடிதங்கள் கதிரவன்

படம்
  13.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மயிலாப்பூரில் வெள்ளப்பிரச்னை குறைவு. ஆனால் முதல்வர் தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியான ராதாகிருஷ்ணன் சாலை மழைநீரால் மூழ்கிவிட்டது. வடிகால் அமைப்புகள் சரியாக இயங்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் வடிகால் அமைப்பில் அடைத்துக்கொண்டுவிட்டன. சாலையில் தூய்மை பணியாளர் குப்பைகளை மழைநீரில் அகற்றிக்கொண்டிருக்கும்போதே, ஒருவர் அலுவலகத்தில் இருந்து குப்பையை எடுத்து சாலையில் வீசி எறிந்தார். என்ன சொல்வது இவர்களை? ஒவ்வாமைக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊருக்குப் போய் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  நாளிதழ் தொடங்குமா என்றே தெரியவில்லை. வேலை என்ற பெயரில் ஏதோ சமாளிப்பது போலவே தெரிகிறது. சீன சிறுகதைகள் -வானதி, அருகர்களின்  பாதை - ஜெயமோகன் என இரு நூல்களைப் படித்தேன். ஜெயமோகனின் எழுத்து பயணத்தின்போதும்,  காடுகளை விவரிக்கும்போதும் புத்துயிர் கொள்கிறது. சில இடங்களை காவிக்கட்சிக்கு ஆதரவாக வரிந்துகட்டி எழுதியிருக்கிறார்.  அதை தவிர்த்துவிட்டுப் படித்தால் பிழை ஏதும் இல்லை. பிரச்னையும் இ

வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

படம்
  ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது! உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர்.  ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்! உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.   பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1 உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாள

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!

படம்
  உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.  ஸ்டேபிலைசர்ஸ் இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ்  ஆகிய பொருட்கள் உள்ளடங்கும்.  இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.  நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ் இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.  ஆன்டிபயாடிக்ஸ் பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.  ஹியூமெக்டன்ட்ஸ்  இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.  ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறை

பூஞ்சை உள்ள பகுதியை வெட்டியெடுத்துவிட்டு பிரெட் சாப்பிடலாமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  Fungus bread image -TOI உணவில் பூஞ்சை உள்ள பகுதியை வெட்டி எடுத்துவிட்டு சாப்பிடலாமா? உணவில் பூஞ்சை உள்ள பகுதியை மட்டும் பிய்த்துவிட்டு சாப்பிடலாம் என சாமர்த்தியமாக நினைக்கிறீர்கள். ஆனால் தாக்கப்படாத பகுதியில் கூட பூஞ்சை நச்சு இருக்க வாய்ப்புண்டு. உணவைத் தாக்கும் பல்வேறு வித பூஞ்சைகள் உள்ளன.  சீஸைத் தாக்கும் பென்சிலியம் (Penicillium), ஸ்ட்ராபெரியைத் தாக்கும் பாட்ரைடிஸ் (Botrytis) ஆகியவை வரை உள்ளன. பூஞ்சைகள் ஏற்படுத்தும் நச்சுக்கு மைக்கோடாக்சின் (Mycotoxins)  என்று பெயர். இவை தாக்கினால் உடல் நடுக்கம், வாந்தி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும். அஃப்லாடாக்சின் (Aflatoxins)என்ற பூஞ்சை நச்சு பாதிப்பு ஏற்பட்டால், ஒருவரின் டிஎன்ஏவே தாக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும். முடிந்தவரை பூஞ்சை பாதிப்பு ஏற்பட்ட உணவுப்பொருளை தூக்கி எறிந்துவிடுவதே நல்லது.  உலகிலேயே அதிக விஷம் கொண்ட மரம் உள்ளதா? வடக்கு, மத்திய தெற்கு அமெரிக்கா, கரீபியன் பகுதிகளில் ஹிப்போமனே மன்சினெல்லா  (Hippomane mancinella) இனத்தைச் சேர்ந்த கடும் விஷம் கொண்ட மரம் உள்ளது. கடற்புரங்களில் உள்ள மாங்குரோவ் காடுகளில் 15 மீட்டர் உயரத்திற்கு இம்மரம் வளர

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழிய

பள்ளிக்கு செய்யும் நன்றிக்கடன்! - கடிதங்கள் - வினோத் பாலுச்சாமி

படம்
கடிதங்கள்  வினோத் பாலுச்சாமி அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மழை வருவது போலவே சூழல் உள்ளது. நாள் தங்கியுள்ள அறை முழுவதும் மழை ஈரத்தால் நனைந்துவிட்டது. இதனால், அறையின் சுவர்களில் பூஞ்சைகள் கரும்பச்சை நிற பூக்களாய் பூக்கத் தொடங்கிவிட்டது. அருகர்களின் பாதை - ஜெயமோகன் இன்றுதான் படித்து முடித்தேன். சமணர்களின் வாழ்க்கை , வரலாறு, உணவு, தர்மச்சாலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். ஆரியர், பாஜக, தேசியவாதம் தவிர்த்த பிற விஷயங்கள் நன்றாக உள்ளன.  எங்கள் இதழின் தயாரிப்பு இன்னும் தொடங்கவில்லை. பல்வேறு சூழல்களால் வேலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. வேலையை செய்வதற்குள் எனக்கு இன்னொரு வயது கூடிவிடுமோ என்று பயமாக உள்ளது. நான் தங்களுக்கு அனுப்பி வைத்த ஜென் கதைகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என நினைக்கிறேன். நான் பரிசாக முதல்முறையாக உங்களுக்குத்தான்  நூலை அனுப்பி வைத்திருக்கிறேன். இப்படி அனுப்புவது பற்றி முதலில் நம்பிக்கை வரவேயில்லை.  குளங்களை தூர்வாரிய செல்ல பெருமாள் பற்றிய செய்தியை ஆனந்த விகடனில் படித்தேன். நல்லவேளை, அவர் தனது பணிக்கு ஊக்கம் தந்தது குக்கூ அமைப்புத

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக

உலக மக்களை அதிகம் பாதிக்கும் பூஞ்சை பாதிப்பு! கேண்டிடா ஆரிஸ்

படம்
  அதிகரிக்கும் பூஞ்சைத்தொற்று! வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு நிகராக பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஸ்டெபைலோகாகஸ் ஆரியஸ் (Staphylocaccus aures), குளோஸ்டிரிடியம் டிஃபிசிலே (clostridium difficille) ஆகிய பூஞ்சைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை செயல்படாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக நிமோனியா, கொனோரியா, செப்சிஸ், காசநோய் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இப்போது உலகில் ஏற்படும் 90 சதவீத நோய்த்தொற்றுக்கு காரணமாக கேண்டிடா ஆரிஸ் (Candida auris) எனும் பூஞ்சையே காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை மெல்ல வளர்த்துவருகிறது இந்த நுண்ணுயிரி.  கேண்டிடா ஆரிஸ் இப்பூஞ்சை வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் காற்று மூலம் பரவுகிறது. பயிர்கள் வளருவதற்கு, மதுபானங்கள் தயாரிப்பிற்கு என பூஞ்சைகள் பயன்பட்டுவந்தன. கி.பி.500க்குப் பிறகு பூஞ்சைகளின் தாக்குதல் மனிதர்களின் மீது தொடங்கியது. இதற்கான மருத்துவ சிகிச்சை 1950ஆம் ஆண்டு  கண்டறியப்பட்டது. அசோல்ஸ் என்ற மருந்து கண்டறியப்பட்டது. இதை சாப்பிடும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் பின்னாளில் குறைந்தன. தற்போது நம்மிடம் பூஞ்ச

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

மூளை பற்றி நாம் அறியாத தகவல்கள்! - புத்தகம் புதுசு!

படம்
        புத்தகம் புதுசு ! ஃபாசில் மேன் தி க்வெஸ்ட் ஃபார் தி ஓல்டஸ்ட் ஸ்கெலிடன் அண்ட் தி ஒரிஜின்ஸ் ஆஃப் ஹியூமன்கைண்ட் கெர்மித் பட்டீசன் . மனிதர்கள் எங்கே எப்படி தோன்றினார்கள் , இடம்பெயர்ந்தார்கள் என்று அறிய பலருக்கும் ஆர்வம் உண்டு . அதைப்பற்றிய நூல்தான் இது . இந்த நூலில் ஆசிரியர் உலகிலேயே தொன்மையான மனிதரின் மண்டையோட்டை முன்வைத்து அவர் எங்கு தோன்றினார் என்பதை சுவாரசியமாக விவரிக்கிறார் . செவன் அண்ட் எ ஹாஃப் லெசன்ஸ் அபவுட் தி பிரெய்ன் லிசா ஃபெல்டுமன் பெரட் மூளை பற்றி இல்லாத்தும் பொல்லாததுமாக ஏராளமான கட்டுரைகள் , தகவல்கள் உள்ளன . அவற்றை ஆராய்ந்து ஆசிரியர் எது சரி , எது தவறு என விளக்கியுள்ளார் . நாம் சிந்திப்பது எப்படி , இடது , வலது மூளை பாகங்களின் பங்களிப்பு நம் வளர்ச்சியில் என்பதைப் பற்றிய விவரிப்பு அருமையாக உள்ளது . வாட் டு எக்ஸ்பெக்ட் வென் யூ ஆர் எக்ஸ்பெக்டிங் ரோபோட்ஸ் தி ஃப்யூச்சர் ஆஃப் ஹியூமன் ரோபாட் கொலாபரேஷன் லாரா மேஜர் அண்ட் ஜூலி ஷா ரோபோட்டுகள் இப்போது மனிதர்களின் வேலையை பறித்து வருகின்றன . பெருந்தொற்று சூழ்நிலை இதனை வேகப்ப

தெரிஞ்சுக்கோ - சீசனே இல்லாத சூப்பர் வாழைப்பழம் !

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வாழைப்பழம் சாப்பிடாத மனிதர்கள் இருக்க முடியாது. ஆயிரத்திற்கும் மேலான வெரைட்டிகளில் வாழைப்பழம் பஜார்களை நிரப்பி வருகிறது. எல்லா சீசன்களில் நம் வாயை நிரப்பி பசியை ஆற்றுவது வாழைப்பழம்தான். அதற்காக அதனை ஏழைகளின்...... என்று எந்த பெயர் சூட்டவும் எனக்கு ஆர்வமில்லை. எப்போதும் கிடைக்கும் எளிய பழம் அது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம். எப்போதும் விளையும் பழம் என்பதால், பூஞ்சைத் தாக்குதல்களுக்கு ஆளாகும் வாழைப்பழத்தின் சதவீதம் அதிகம். ஒரு வாழைத்தாரில் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும் என்று எண்ணியிருக்கிறீர்களா? விடுங்கள். விற்கும் செட்டியார் எண்ணுவார். உலகளவில் 473 பழங்கள் இருந்ததே சாதனையாக கூறுகிறார்கள். மனிதர்களுக்கும் வாழைப்பழத்திற்குமான மரபணுப் பொருத்தம் 60 சதவீதமாக உள்ளது. உலகளவில் 5.6 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் வாழைப்பழங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. உலக சந்தையில் 99 சதவீத வாழைப்பழங்கள் கேவண்டிஷ் ரக வாழைதான். அமெரிக்கா கடந்தாண்டில் மட்டும்  2.8 பில்லியன் மதிப்பிலான வாழைப்பழங்களை இறக்குமதி செய்துள்ளது. உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் வாழைப்பழத

இந்தவார புத்தக வாசிப்பு!

படம்
ரஷ்யாதான் 1959 ஆம் ஆண்டு விண்கலனை நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அந்நாட்டை முந்தும் வேகத்தில் அமெரிக்கா, மனிதர்களை தயாரித்து நிலவுக்கு அனுப்பியது மிகப்பெரும் சாதனை. இன்றும் நாம் பிஎஸ்எல்வியா, ஜிஎஸ்எல்வியா என தடுமாறும் நிலையில் 1969 ஆம் ஆண்டு துணிச்சலாக கருவிகளோடு மனிதர்களையும் அனுப்பிய அதிபர்  ஜான் எஃப் கென்னடி மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களின் முயற்சிகள், பிரச்னைகள் ஆகியவற்றை அனுபவக்கட்டுரைகளாக பகிர்கிற நூல் இது. வயதாவது என்பது பலவீனமாக பார்க்கும் சமூகம் மேற்கத்தியது. ஆசியாவில் அதனை பெரும் பலமாக, பல்வேறு பொறுப்புகளை கொடுக்க நரைத்த முடி உதவுகிறது. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் 50 வயது தொடங்கினாலே ஏன், 40 தொடங்கினாலே பெருசு என்று கூறத் தொடங்விடுவார்கள். நிலைமை அந்தளவு மாறியுள்ளது. இச்சூழலில் நாற்பது வயது ஆட்களின் சூழல், மனநிலைமை, அவர்களின் பிரச்னைகள் ஆகியவற்றைக் குறித்து இந்த நூல் பேசுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருள் ட்ரஃபிள். இது ஒரு பூஞ்சை என்றால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். நூல் முழுக்க பூஞ்சை ஏன் அதிக வில