இடுகைகள்

ஆதித்தனார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் சூரியன் சி.பா.ஆதித்தனார்! - தினத்தந்தி உருவான கதை!

படம்
தினத்தந்தி. இன்றுவரை கிராமத்தில் உள்ளவர்கள் செய்தியை எளிமையாக தெரிந்துகொள்வது இதன் வழியாகத்தான். காரணம் மேல்தட்டு பத்திரிகைகள் புராணம், ஆன்மிகம் என எழுதி வந்தபோது, மக்களுக்கு செய்திகள் தேவை என்ற காரணத்தால் தினத்தந்தி எளிய தமிழில் உருவாக்கப்பட்டது. சி.பா. ஆதித்தனார், தமிழ்நேசர். எனவே இங்கிலாந்தில் படித்த பார் அட்லா படிப்பையும், அதன் மூலம் கிடைத்த சிங்கப்பூர் வேலையையும் கைவிட்டு தினத்தந்தி தொடங்கினார். தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கை தினத்தந்தி தொடங்கப்பட காரணம். இன்று அந்த லட்சியம் வென்றதா, அல்லது அதே கோட்பாட்டில் தினத்தந்தி நிற்கிறதா என்பது தனிக்கதை. சி.பா. ஆதித்தனார், இருந்தவரை தினத்தந்தி பத்திரிகையை முக்கியமான நாளிதழாக வளர்ச்சிப் பாதைக்கு உயர்த்தினார். காரணம், அன்று விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்றிருந்தது. கூடுதலாக, இந்தி எதிர்ப்பு போராட்டமும் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் மக்களுக்கு முக்கியமான கருத்துகளைக் கூறும் பொருட்டு எளிய வாக்கியங்களில் அமைந்த கட்டுரைகள் தேவைப்பட்டன. இதற்காக பின்தங்கிய எளிய பகுதிகளிலிருந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்து நிருபர்களாக்கினார் ஆதித்