இடுகைகள்

கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

படம்
  குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.  2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.  வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் முன்னணி வகிக்கி

மருந்தில்லாமல் உளவியல் குறைபாடு குணமாக வாய்ப்புள்ளதா?

படம்
  ஸ்காட்லாந்தின் கிளாக்ஸோவில் பிறந்தவர் ஆர் டி லைங். கிளாக்ஸோ பல்கலையில் மருத்துவம் படிப்பை படித்தவர், பிரிட்டிஷ் ராணுவத்தில் உளவியலாளராக பணியாற்றினார். அங்கு மனநிலை சிதைந்துபோன நோயாளிகளைப் பார்த்தார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அந்த ஆர்வம் அதிகமாக, லண்டனில் இயங்கிய லாவிஸ்டாக் என்ற மருத்துவமனையில் உளவியல் சார்ந்த சிகிச்சைகளுக்காக பயிற்சி பெற்றார்.  1965ஆம் ஆண்டு லைங் மற்றும் அவரது சகாக்கள் பிலடெல்பியா அசோஷியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினர். இந்த அமைப்பில்  உள்ளவர்களும், உளவியல் குறைபாடு உள்ளவர்களும் ஒரே கட்டிடத்தில் ஒன்றாகவே வாழ்ந்தனர். அன்றைக்கு பிரபலமாக இருந்த உளவியல் சிகிச்சை முறைகளுக்கு முழுக்க எதிரானதாக குடும்ப சிகிச்சை முறை இருந்தது. அதை முழுமையானதாக லைங் உருவாக்கவில்லை. அவரது குண இயல்புகளும், சிகிச்சை செயல்பாடுகளும், ஆன்மிக செயல்பாடுகளும் பின்னாளில் அவரது பெருமையை உருக்குலைத்தன. 1989ஆம்ஆண்டு மாரடைப்பால் காலமானார்.  முக்கிய படைப்புகள்  1950 the divided self 1961 the self and others 1964 sanity madness and the family 1967 the politics of experience பத்தொன்பதாம் நூற்றாண்ட

இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!

படம்
 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்! இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி.  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடுக்கவே உணவ

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற்பத்தி செய்ய ப

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

படம்
  விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள் இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது. 2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI) விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம். இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது. சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்

செய்திகளில் தகவல் துல்லியம், தெளிவு அவசியம்!

படம்
  மாநகரில் ஓரிடத்தில் வன்முறை சம்பவம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்டவர்களை அணுகி கட்டுரை ஒன்றை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொளவோம். அப்படி எழுதும்போது ஒருவர் அனுபவித்த துயரத்தை அதிகப்படுத்திவிடக்கூடாது. அதேசமயம் தேவையான கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெற்று எழுத வேண்டும். பெறும் தகவல்களில் தெளிவு, துல்லியம் அவசியம். சிலர் பேசும்போது முக்கியமான நபர்கள், சம்பவங்களைத் தவிர்த்துவிட்டு சில விஷயங்களைப் பெரிதுபடுத்தி பேசுவார்கள். இதைக் கவனித்து கட்டுரையில் செம்மை செய்வது முக்கியம். பெறும் செய்திகளை நடுநிலையாக எழுத முயல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு, அரசு தரப்பு, எதிர்தரப்பு, என தகவல்களைத் தேடி கேட்டு தொகுத்து கட்டுரையாக செய்தியாக எழுத வேண்டும். வன்முறை சம்பவம் வழக்காக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தால், அதைபற்றி முன்முடிவாக எந்த கருத்தையும் கூறக்கூடாது. இப்படி கூறும் கருத்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பத்திரிகையாளருக்கும், வெளியீட்டு நிறுவனத்திற்கும் சட்டச் சிக்கலைக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பத்திரிகையாளரான நீங்கள் மையமாக இருந்தால், அதாவது பாதிக்கப்பட்டவராக இரு

பத்திரிகையாளர்கள் தம் நண்பர்களைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுதினால்...

படம்
  பத்திரிகையாளராக ஒருவர் இருந்தாலும் அவருக்கும் மனதில் சில ஆதரவு, விருப்பு வெறுப்பு கருத்துகள் இருக்கும். அரசியல் கட்சி தொடங்கி, சினிமா பிரபலம், சிறந்த தொழில்நிறுவனம், வங்கி முதலீடு, பிடித்த ஆளுமை, ஆதரவான பல்வேறு துறைசார்ந்த நண்பர்கள் என விளக்கிக் கூறலாம். ‘’பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு நண்பர்களாக இருக்க முடியாது’’ என்று அவுட்லுக் வார இதழ் ஆசிரியர் வினோத் மேத்தா கூறுவார். நான் இங்கு உண்மையான பத்திரிகையாளர்களைப் பற்றி சொல்கிறேன்.   நீங்கள் அரசியல்வாதிகளின் நண்பராக இருந்தால், அவரைப் பற்றி நேர்மையாக கட்டுரை எழுத முடியாது. அவர் செய்த ஊழல்கள், தவறுகள் பற்றி நண்பர் என்ற காரணத்திற்காக பூசி மெழுகி சமாளிக்க வேண்டும். உங்கள் கட்டுரையைப் படிக்கும் வாசகர் இதனால் ஏமாற்றப்படுகிறார். ஆக, பத்திரிகையாளராக நீங்கள் நேர்மையாக செயல்படவில்லை என்றாகிறது. பத்திரிகையாளர் என்பது தொழிலாக இருந்தாலும் வேலையைக் கடந்து அவரும் விருப்பு, வெறுப்பு கொண்ட மனிதர்தான். பொதுவாக 30 வயதில் ஒருவருக்கு உலகம், சமூகம் என திட்டவட்டமாக முடிவுகள் உருவாகிவிடுகின்றன. ஆனால் பத்திரிகையாளரைப் பொறுத்தவரை இப்படி முடிவுகளை உரு

வன்முறைச் சம்பவங்களை எழுதுவது எப்படி?

படம்
  இன்று உலகம் முழுக்க பத்திரிகையாளர்கள் பல்வேறு செய்திகளை எழுதுகிறார்கள். அதில் அதிகம் கவனம் பெறுவது மனிதர்களைப் பற்றிய செய்திகள்தான். வெற்றி, தோல்வி, மீண்டு வந்த கதைகள் என வைத்துக் கொள்ளலாம். இவற்றை எப்படி எழுதுவது என பார்ப்போம். ஜாதி, மதம், இனக்குழு, நிறம், பாலியல் என பல்வேறு வகையாக குறிப்பிடப்பட்டு மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள். இப்படி தாக்கப்பட்டவர்களைப் பற்றிய செய்திகளை எழுதும்போது, பெயர்களை வெளியிடவேண்டாம் என தொடர்புடையவர் கூறினால் அதன்படியே செய்தியை எழுத வேண்டும். ஏனெனில் செய்தி வெளியாகி அவரின் மீதமுள்ள வாழ்க்கை, மரியாதை பாதிக்கப்படக்கூடாது. முற்றிலும் அழிந்துவிடக்கூடாது.   பாலியல் வல்லுறவு, சீண்டல் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டால் முடிந்தளவு அவர்களின் பெயர், புகைப்படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட நினைத்தால் பாதிக்கப்பட தரப்பிடம் உரிய அனுமதி வாங்கவேண்டும். இல்லையெனில் இந்த சம்பவம், பத்திரிகையாளருக்கு தண்டனை அளிக்கும் குற்றமாகவும் மாறலாம். வன்முறை சம்பவத்தை பதிவு செய்யும்போது எழுதும் மொழி, நடை என்பது சற்று மத்திய நிலையில் இருக்கவேண்டும். எந்த தரப்பிற்கும் ஆதரவாக அம

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்

செய்திகளை எழுதும்போது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள்!

படம்
  ஒரு விவகாரத்தில் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கிறீர்கள் என்றால், முதலில் அந்த விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள முயலுங்கள். அதில் மக்களுக்கு கூறவேண்டிய விஷயம் என்னவென்று பத்திரிகையாளர்கள் இறுதியான முடிவுக்கு வரவேண்டும். ஒரு விவகாரம் சரியா, தவறா என்று முடிவெடுப்பது உண்மையான கொள்கை ரீதியான தன்மையைக் குறிக்காது. அந்த விவகாரத்தில் ஏதும் செய்யாமலேயே சரியான முடிவு கிடைத்துவிடும் என்றாலும் கூட அதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு பிரச்னையை வெவ்வேறு வழிகளில் சரியானது என்று சொல்லும்படி தீர்க்க முடியும் என்றால் கீழ்க்கண்ட கேள்விகளை பத்திரிகையாளர் கேட்டுக்கொண்டு பதில் கண்டறிவது முக்கியம். பிரச்னையை இந்த வகையில் தீர்க்கும்போது உலகத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அரசு, சட்ட விதிகள், மத கோட்பாடுகள் ஏதேனும் பாதிக்கப்படுமா? அவை என்ன மாதிரியான எதிர்வினைகளை வெளிப்படுத்தும்? அனைத்து மக்களுக்கும் சமரசமாக செல்லும்படியான தீர்வு, நடுநிலையான முடிவு ஏதேனும் இருக்கிறதா? பெரும்பாலான மக்களுக்கு நன்மை கிடைக்கும்படி என்னால் செயல்பட முடியுமா? எனது செயல்பாட்டால் மக்கள் பயன் பெறுவார்களா? பிரச்னையை நான

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரியான ப

நேர்மை, சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை எனும் மூன்று நம்பிக்கை கொள்கைகள்! - இதழியல் அறம்

படம்
  உலக நாடுகளிலுள்ள பத்திரிகை ஊடக நிறுவனங்கள் அவற்றுக்கே உரிய கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. இதில், நிலப்பரப்பு, உள்ளூர் கலாசாரம் சார்ந்து சில அம்சங்கள் மாறுபடலாம். உலகளவில் புகழ்பெற்ற மதிக்கப்படும் ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ், பின்பற்றும் இதழியல் கொள்கைகளுக்கு ட்ரஸ்ட் பிரின்சிபல் என்று பெயர். இந்த நம்பிக்கை கொள்கைகளில் சுதந்திரம், பாகுபாடற்ற தன்மை, நேர்மை ஆகியவை அடங்கியுள்ளன. இந்த மூன்று கொள்கைகளையும் நிருபர் / செய்தியாளர், ஆசிரியர் ஆகியோர் அனைத்து செய்திகளிலும், கட்டுரைகளிலும் கடைபிடிப்பது அவசியம். இப்போது பத்து முக்கியமான கடைபிடிக்கவேண்டிய விஷயங்களைப் பார்ப்போம். 1.     செய்திகளில் எப்போதும் துல்லியம் இருக்கவேண்டும். 2.       நேரும் தவறுகளை வெளிப்படையாக ஏற்று சரி செய்யவேண்டும். 3.     பாகுபாடற்ற தன்மையை சமநிலையாக பராமரிக்க வேண்டும். 4.     ஆர்வமுள்ள செய்திகளைப் பற்றி மேலாளர் / மூத்த ஆசிரியரிடம் கூறவேண்டும். 5.     ரகசியமான செய்திகளை எப்போதும் மதிக்க வேண்டும். 6.     செய்திகளைக் கொடுக்கும் ஆதாரங்களை, அதிகாரத்திடமிருந்து பாதுகாக்கவேண்டும். 7.     கட்டுரை அல்லது செம்மைப்

சமூகத்தில் பத்திரிகையாளரின் பணி என்ன?

படம்
  ஒரு சமூகத்தில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க நேர்மையாக செயல்படும் நிருபர்கள், செய்தியாளர்கள் முக்கியம். அவர்கள் அரசியல், நிதி, வணிக, சமூக அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை கவனமாக கண்காணித்து வருகிறார்கள். இவர்களின் முக்கியமான பணி, மோசடி முறைகேடுகளை வெளிப்படுத்துவதும், அதன் வழியாக மக்களுக்கு கல்வியை அளிப்பதும்தான். பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான பாலம் போன்றவர்கள். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் அரசின் கொள்கைகளை மக்களுக்கு விளக்குகிறார்கள். பின்னர், அதுபற்றிய அவர்களின் கருத்துகளை எதிர்வினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். நிருபர் மற்றும் செய்தியாளர்கள் சமூகத்தின் மதிப்பைக் காப்பாற்றுவதோடு, இதழியல் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டும். நம் சமூகத்தில் நிருபர் / செய்தியாளர்களின் பணிகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நாகரிகங்களை விளக்குவது அரசு, நீதிமன்றம், வணிகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள், வெற்றிகள், தோல்விகளை விமர்சிப்பது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் ஆதார மையங்களை வெளிப்படுத்துவது முறை