இடுகைகள்

தருண் பாஸ்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சரச சல்லாப வீடியோ - கல்யாண நாளில் என்னாகும் நிலைமை?

படம்
மீக்கு மாத்திரம் செப்தா - தெலுங்கு இயக்கம் - சமீர் சுல்தான் ஒளிப்பதிவு - மதன் குணதேவா இசை சிவகுமார் போனில் செய்யும் சிறிய தவறு எப்படி கல்யாண நாளில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதை எவ்வளவு ஜாலியாக சொல்ல முடியுமோ அவ்வளவு ஜாலியாக சொல்லியிருக்கிறார்கள். தருண் பாஸ்கர் இயக்காமல் நடித்திருக்கிற படம். படத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் அவர் இவரும், அபினவ்வும் செய்யும் காமெடிகள்தான் படத்தைப் பார்க்க வைக்கின்றன. பட வாய்ப்புக்காக தருண் ஒரு உப்புமா இயக்குநரை சந்திக்கிறார். அந்த சமாச்சாரம் நடக்கும் வரையில் அவர் உப்புமா ஆள் என தருணுக்கு தெரியாது. படத்தில் தருணின் பெயர் ராகேஷ். அங்கு பார்த்தால், ஒரு பெண், ஒரு பெட், ஒரு லைட் என எல்லாம் மினிம மாகவே இருக்கிறது. யெஸ் ராத்திரி வீரன் ரக படம்தான். இதுதெரியாத தருண், காலை நீட்டிப்போட்டு... பெட்டில்தான். படுத்து தூங்கிவிடுகிறார். ஏசி காற்று தூக்கத்தை அள்ளித்தருகிறது. இவருக்காக சாப்பிட சோறு எடுத்துவரச் சென்ற பெண், இதனால் டென்ஷன் ஆகிறாள். அதனால் என்ன செல்போன் கேமராவை திருப்பிவைத்து உறங்கும் நிலையில் இயக்குநர் சொன்ன சமாச்சாரத்தை முடிக்கிறார

பி.டெக் வெப்சீரிஸ் எப்படி? - தருண் பாஸ்கரின் திரைக்கதை அசத்தல்

படம்
huffingtonpost பி.டெக் ஜீ5 தயாரிப்பு இயக்கம்: உபேந்திர வர்மா கதை, திரைக்கதை: தருண் பாஸ்கர்   Abhay Bethaganti , Kaushik Ghantasala, Madhulatha Reddy, Vishnu Mohan Chaitanya Garikipati, Meraj Ahmed and Arjun Chukkala பெல்லி சூப்புலு படத்திற்கு முன்பு எழுதிய கதை இது என தருண் பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் சொல்லி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டி தட்டிவிட்டார். அதனால் இதில் முக்கிய கேரக்டர்கள் தடுமாறினாலும் அந்த பிரச்னை இதனால்தான் என புரிந்து கொள்ள முடியும். பெல்லி சூப்புலு படம் எடுத்து தேசிய விருது வென்ற இயக்குநரின் வெப் சீரிஸ் என்று விரக்தி அடையக்கூடாது என்பது விமர்சனத்திற்கு முன்பே நாங்கள் கூறும் அட்வைஸ். மூன்று இளைஞர்கள் தங்கள் கனவைத் துரத்துகிறார்கள். அதில் அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா என்பதே கதை. ஹரி, விக்ரம், அக்தர் என மூன்று இளைஞர்கள். இதில் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்பதே. இரண்டாவது ஒற்றுமை மூவருக்கும் படிப்பைத் தொடர அதுதொடர்பான வேலைக்குச் செல்ல அணுவளவும் ஆர்வம் கிடையாது. ஹரி, காலேஜூக்கு அட்டன்டன்ஸ் கொடுத்துவிட்டு குழந்தைக