ஊரடங்கு காலத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்கள் தற்காலிகமானவைதான்! - உளவியலாளர் பி.என். கங்காதர்
pixabay பி.என். கங்காதர் உளவியலாளர், தேசிய உளவியல் நலம் மற்றும் நரம்பியல் கழக தலைவர் ஊரடங்கு காலத்தில் முக்கியமான மனநிலை தொடர்பான பிரச்னை என்னாவாக உள்ளது என்று நினைக்கிறீர்கள்? நிறைய வகையான உளவியல் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் அவையெல்லாம் தற்காலிகம்தான். விரைவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு நிலைமை மாறும். உளவியல் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் காணாமல் போகும். இவை அனைத்துமே வயதுக்கு தகுந்தாற்போல மாறுபடும். உதாரணமாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விரைவில் சலிப்பு ஏற்படும். எரிச்சலுக்கு உள்ளாவார்கள். அதேசமயம் கல்லூரி மாணவர்கள், தங்கள் கல்லூரி ஆண்டு ஒன்று வீணாவதை நினைத்து வருந்துவார்கள். வேலை செய்து வருபவர்கள், தங்களது வேலை பற்றியும் பொருளாதார நிலை பற்றியும் கவலைப்படுவார்கள். பொருளாதார சூழ்நிலையும் அவர்களுக்கு கவலை ஏற்படுத்தும். வயதானவர்கள், தங்களுக்கு கொரோனா வந்துவிடும் என்று நினைத்து பயந்துகொண்டிருப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் தற்காலிகம்தான். நிலை மாறி விதிகள் மாற்றப்பட்டதும் அறிகுறிகள் மறைந்துவிடும். மன அழுத்த பிரச்னையை நாம் எப்படி சமாளிப்பது? இவற்றை நாம் சாதாரணம