இடுகைகள்

ஜூன், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயக்குநர் ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்

படம்
ஏஞ்சலோ பவுலோஸ் நாம் அதனை அரசியலுக்கான உருவகம் என்று கருதலாமா? அரசியல் விஷயங்களுக்கான விளக்கம் கருத்துகள் அனைத்து இடங்களிலும் உள்ளது. ஆனால் அதனை அதிகம் செய்துவிடக் கூடாது. இந்தக்கோணத்தில் வயதான மனிதர் ரஷ்யனாக அல்லது கிரீக் ஆக இறக்கிறார் என்பதல்ல. அவர் எந்த மொழியினைப் பயன்படுத்தி இருந்தாலும் வார்த்தைகள் ஒன்றுதான் அழுகிய ஆப்பிள்தான் அது. படப்பிடிப்புக்கான இடங்களைக் காண ஒர வீட்டிற்குள் சென்றபோது இந்த விஷயம் விபத்தாக எனது மூளையில் பளிச்சிட்டது. யாரோ ஒருவர் தளத்தில் தவறவிட்டுப் போன ஆப்பிள்கள் மெல்ல கெட்டுப்போகத் தொடங்கி இருந்தன. அந்த வாசனை ஆற்றல் கொண்டதாக, இணக்கமானதாக, வெம்மை கொண்டதாக மனித வாசனையாக இருந்தது. கவிதைப் பொருளின் தத்துவமாக சாரச்சுருக்கமாக படம் முழுவதும் பரவியிருக்கிறது. சிதெராவிற்குப் பயணம் என்பதில் படத்திற்குப் படம் என்பதாக இயக்குநரும் நாடு கடத்தப்பட்டவர் போல தன் வீட்டிற்குத் திரும்பி 32 ஆண்டுகளாக இல்லாத தன் நாட்டினை திரும்ப அறிவதாகக் கொள்ளும் இது பல்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒருவரின் அடையாளத்தை உடல்ரீதியாக அல்லது உணர்வுரீதியாக அல்லது அடையாளமாக கண்

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்

படம்
தியோ ஏஞ்சலோ பவுலோஸ் திரைத்தேர்வு மற்றும் கிராமத்தில் நிலத்தை விற்கும் உழவர்களை அழைக்கும்போது அவர்கள் ஒவ்வொருவரும் தரும் பதிலான பாரோன் –‘இங்கிருக்கிறேன்’ என்பதற்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? நிச்சயமாக. இரண்டு விஷயங்களிலும் இயந்திரத்தனமான பதிலை மனிதர்கள் கூறுகிறார்கள். அவர்கள் பொருட்கள் போல நடத்தப்படுகிறார்கள். ஒன்றில் வயதான நடிகர்கள் வேலை தேடுவது, இரண்டாவது கிராமத்தார்கள் தமது அடையாளமான நிலத்தை விற்பது என உள்ளது. இயக்குநர் இந்த இரு தருணங்களிலும் இவற்றை உள்வாங்கியபடி இருந்தாலும் அவற்றில் இடையூறு செய்யாததன் காரணம் முதியவர் உண்மையில் அவன் தந்தை என்பதை அவன் அறியாததே, உறுதி இல்லாததே காரணம் எனலாம். தனிப்பட்ட காட்சிகளிடையே ஏதாவது கருத்துகளின் எதிரொலி தங்களின் படத்தில் இருக்கிறதா? ஆமாம். உதாரணத்திற்கு, எரிவாயு நிலையத்தை இருமுறை பார்க்கிறோம். ஒன்று பகலில் மற்றொன்றில் இரவில் ஒரே மாதிரியான கோணத்தில் ஒத்தது போல கேமரா நகர்ந்து பயணிக்கும். எரிவாயு நிலையமானது நகரம் மற்றும் கிராமத்திற்கு இடையே அமைந்துள்ளது. யாராவது ஒருவர் கிராமத்த

நேர்காணல்: உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம் -

படம்
உலர்ந்த ஆப்பிள்: சிதெராவிற்கு பயணம் மிட்செல் குரோடன்ட் / 1985 தமிழில்    லாய்ட்டர் லூன் நன்றி கூறத் தொடங்கும் காட்சியில் தொடங்குவோம். இது ஒரு புராணம் போலான மாயை கோணம் என்று கூறலாமா? அக்காட்சி என்னைப் பொறுத்தவரையில் இசையோடு சேர்த்து கனவுலகிற்கு அழைத்துச் சென்று வெளிப்புறமாக அதனைக் காணச்செய்வது போலத்தான். கனவுபோல் விரியும் காட்சியின் காரணம் அது தன்னுள் முக்கியமான கருவைக் கொண்டுள்ளது என்று கூறலாம். பின் தொடரும் காட்சி சிறுவன் வேறொரு கிரகத்தில் இறங்குவது போல அமைந்திருக்கும். உண்மையைக் கூறவேண்டுமெனில் உங்களுக்கு இக்காட்சி பற்றிய சரியான காரணத்தை தூண்டுதலை என்னால் விளக்கி கூறமுடியவில்லை. அம்முறையில் செய்ததன் காரணம் அது எனக்கு பிடித்திருந்தது. அதற்கான தீர்க்கமான தர்க்கரீதியான காரணங்கள் எதையும் என்னால் இதற்காக கூறமுடியவில்லை. சிறுவனும் ஜெர்மன் படைவீரரும் வரும் பகுதி என்பது சிறுவயது நினைவுகளா? ஆமாம், இது மிகத்தெளிவாக நினைவுகள் என்று குறிப்பிடும்படி எடுக்கப்பட்டு இயக்குநரின் குரல் ஒலிக்கும். அந்தக்காட்சியின் இறுதியில் சிறுவனுக்கு விதிகள் கூ

தியோ ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல் அத்தியாயத்தின் இறுதிப்பகுதி

படம்
ஏன் அவனை நீங்கள் தனிமைப்படுத்தி விரிவாக்குகிறீர்கள்? இன்னொருவரின் ஆதரவை அவருக்கு ஏன் தரவில்லை?        காரணம் என்னவென்றால் அவன் தன்னுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை அவனே கண்டறியவேண்டும் என்பதுதான். அதுதான் அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. யாரும், எதுவும் இதில் அவனுக்கு உதவ முடியாது. வெளியிலிருந்து எதுவும் காதல் உட்பட அவனுக்கு உதவ முடியாது. இது அவனுக்கான ஒரு தனித்துவ உயிர்வாழ்வதற்கான துண்டித்துக்கொண்டு தப்பிக்கும் முயற்சி எனலாம். ஆனால் நீங்கள் தொடர்பிற்கான நம்பிக்கையற்ற அழுகை என்பதைப் பற்றி கூறினீர்கள். நான் இந்த தத்துவத்தை ஒருவர் எதுவும் இல்லாது இருந்தால், அல்லது அவரில்லாத போது யாரும தராமல் இருப்பது என்பது என்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்கிறேன். என் உள்ளுணர்வு ஒருவருக்கானது என்பதினை இன்னொருவரோடு தொடர்பு கொண்டு இருக்கிறார் என்று கருதுகிறேன். அல்லது ஒருவரினும் அதிகமாக ஒருவர் நிச்சயம் அதனைச் செய்யக்கூடும். சரியான ஒரு மனிதர் இருந்தால் கூட கடவுள் உலகினை அழிக்கமாட்டார். எனவே தனிமை என்பது கிடையவே கிடையாது. எப்படி அவர்கள் தொடர்பு கொண்டு உணர்வார்கள்? மேலும் நாம் பழங்க

இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்

படம்
  இயக்குநர் ஏஞ்சலோ பைலோஸ் நேர்காணல்                                          தமிழில்: லாய்ட்டர் லூன்                                தக்காளிகளை வளர்ப்பது                        ஜிடியன் பாச்மன் – 1984 தங்களுடைய வேலையில் நேர்த்தியான வடிவமைப்புக்கும் அதன் உள்ளடக்கத்திற்குமான முரண்பாடுகள், போராட்டங்கள் சில சமயங்களில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? இது குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன? அவை பற்றி நான் சிந்தித்ததே இல்லை. பித்து பிடித்தது போல்  நேர்த்தி தேவை என்று விரும்பும் ஒருவர் அதனைச்செய்ய கடும் முயற்சியையும், உழைப்பையும் அதை ஈடுசெய்ய கொடுக்கவேண்டும். நான் இவை தேவைப்படும் இடங்களாக, படப்பிடிப்பிற்கான இடங்கள், அரங்குகள், படப்பிடிப்பு நேரங்கள் போன்றவற்றைக் கூறுவேன். ஒளிப்பதிவாளர் இதிலுள்ள சிக்கல்களை குறைத்துவிடுகிறார் என்பதால் பிரச்சனையில்லை. இறுதியில் அவை மிக எளிதாக மூச்சினை உள்ளிழுப்பது போலாகிவிடும். நீங்கள் கூறுவது போலான தருணங்கள் மிகவும் அரிதானதே. ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். சிதெராவிற்கு பயணம் படத்தில் மூன்று தொடர்ந்த காட்சிகள் முதியவர் நடனமாடுவதைக் காட்டு

எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!

படம்
                                              எடுப்போம் ஒரு கிலோ பிரியாணி!                      திருவல்லிக்கேணியைப் பொறுத்தவரையில் 24ஏ அல்லது 24சி என இரண்டு பேருந்துகள்தான் நான் பயணிக்கும் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. வேறங்கும் இல்லாத போக்குவரத்து நெரிசலை திருவல்லிக்கேணி செல்லும் வழியில் சந்திக்கும் தருணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான தொடக்க அறிகுறிகள் நேபாள் தேசத்தினர் போல இருக்கும் நடத்துநர் கை போடேம்மா, பஸ்சு திரும்ப வேண்டாமா? போடு கையப்போடுங்கப்பா என்பார். பேருந்து திரும்பும் ஆயிரம் விளக்கு மசூதி நிறுத்தம் அருகில் ஆசிப் பிரியாணிக் கடையெல்லாம் தாண்டி. இங்கு போக்குவரத்து மிகுவதற்கான காரணம் நிறைய இருக்கின்றன. முக்கியமான ஒன்று ரிவல்யூசன் செல்வி ஆதிக்கம் செலுத்தும் தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில் உள்ளது. அதனால் தீர்ப்பு எழுதப்படுவதும் வாய்தா வாங்கப்படும் போதெல்லாம் போக்குவரத்தினை நிறுத்தி விடுவதுதான் தொண்டர்களின் பெரும் கவனக்குவிப்பு ஆக்ரோஷ ஆர்ப்பரிப்பாக இருக்கும்.        செல்வி கோவாண்டி நீதிபதியால் விடுதலை செய்யப்பட்ட அன்று போக்குவரத்தில் பேருந்து ஐஸ்ஹவுஸ் க