இடுகைகள்

பரிணாம வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இரண்ட

நத்தையின் உணர்கொம்புகள், கோல்ப் பந்துகளிலுள்ள பள்ளங்கள்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  நத்தையின் உணர்கொம்புகளே அதன் மூக்கு! உண்மை. நத்தையின் (Slug)  உணர்கொம்புகளை (Tentacles) மனிதர்களின் மூக்கு போல என்று கூறலாம். நத்தையின் உடலில் இரண்டு ஜோடி உணர்கொம்புகள் உள்ளன. முதல் ஜோடி உணர்கொம்புகள் தலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சூழலில் உள்ள ஒளி, ஒலியை உணர உதவுகின்றன. தலையின் கீழ்ப்பகுதியில் உள்ள  இரண்டாவது ஜோடி உணர்கொம்புகள், வேதிப்பொருட்களை அறியவும், மனிதர்களின் மூக்கைப் போல சுவாசிக்கவும் உதவுகின்றன.  கோல்ஃப் பந்துகளில் உள்ள பள்ளங்கள் அழகுக்கானவை! உண்மையல்ல. கோல்ஃப் பந்துகளில் அதன் வடிவத்தைப் பொறுத்து 300 முதல் 500 வரையிலான  பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. பள்ளங்களின் வடிவமைப்பு, மட்டையால் அடிக்கப்பட்டவுடன் பந்து செல்லும் தொலைவை அதிகரிக்க உதவுகிறது. தொடக்கத்தில் கோல்ஃப் பந்து, பள்ளங்கள் இல்லாமல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பந்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது செல்லும் தொலைவு குறைந்தது.எனவே, இதற்கான தீர்வாக காற்றில் அதிக உராய்வின்றி பயணிக்க ஏதுவாக பந்தில் பள்ளங்களை உருவாக்கினர்.  https://www.womansday.com/life/entertainment/a37170576/fun-facts/ https://www.thedodo.

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

படம்
  நேர்காணல்  கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily) சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது.  இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா? இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை பார்த்த மாணவர

பாம்பிடமிருந்து தவளைக்கு பரிமாறப்படும் மரபணுக்கள்!

படம்
 பாம்பிடமிருந்து பரிமாறப்படும் மரபணு! பாம்பின் முக்கியமான உணவு,  தவளை. உணவாகும் அந்த தவளை பாம்பின் உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்ற ஆராய்ச்சித் தகவல் புதியது. தவளைகள் தங்களின் மரபணுக்களை, ஒட்டுண்ணி வழியாக  பாம்பிற்கு கடத்துகிறது என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  பொதுவாக ஒரு உயிரினத்திடமிருந்து, அந்நிய உயிரினம் ஒன்றுக்கு (எடு.தாவரத்திலிருந்து விலங்கு, தவளையிலிருந்து பாம்பிற்கு) மரபணு பரிமாற்றம் ஏற்படுவது மிகவும் அரிது. இதற்கு ஹரிஜோன்டல் டிஎன்ஏ டிரான்ஸ்பர் (Horizontal gene transfer (HGT))என்று பெயர். பாக்டீரியாக்களிடம் இந்த முறையில் மரபணு பரிமாற்றம் நடைபெறுகிறது.  பசுக்களின் உடலில் உள்ள போவைன் பி (BovineB BovB) என்ற மரபணு, உண்மையில் பாம்பிடமிருந்து பரிமாற்றமாகியுள்ளது.  இந்த நிகழ்ச்சி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது என மரபியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் உள்ள நகாஹாமா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அட்சுஷி குரபயாஷி , ஆய்வு உண்மை ஒன்றைக் கண்டறிந்தார். போவைன் பி மரபணு, மடகாஸ்கரிலுள்ள தவளைகளிடம்  காணப்பட்டது என்பதுதான் அது.

பரிணாம வளர்ச்சியில் தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

படம்
  தொன்மை தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு! பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒயிட்ஃபிளை என்ற பூச்சி  மரபணு ஒன்றைப் பெற்றது. இதனை  தொன்மையான தாவரம் ஒன்றிலிருந்து பெற்றதாக தாவரவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இத்தாவரம் எதுவென இன்னும் கண்டறியப்படவில்லை. BtPMat1  என்ற மரபணுதான் ஒயிட் ஃபிளை பூச்சிக்கு மாறிய மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது தாவர நச்சு வகையைச் சேர்ந்தது. ஆனாலும் பூச்சியை பாதிப்பதில்லை.  BtPMat1 என்ற மரபணு, தாவரத்திலிருந்து பூச்சி இனத்திற்கு மாறியுள்ளதை சீனா மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றிய செய்தி செல் இதழில் வெளியாகியுள்ளது. ஹரிஸோனல் ஜீன் டிரான்ஸ்பர் (HGT)முறையில் மரபணு மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த முறையில் நடைபெறும் மரபணுமாற்றம் பாக்டீரியா இனங்களிலிருந்து தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நடப்பது இயல்பானதுதான்.   நச்சு கொண்ட தாவரங்கள், தங்களிடமுள்ள உணவைக் காக்க நச்சை சுரக்கிறது. இச்சமயத்தில் ஒயிட்ஃபிளை பூச்சியை நச்சு பாதிக்காமல் காப்பாற்றுவது  தாவர மரபணுதான்.  இப்பூச்சியிடமிருந்த தாவர மரபணுவை நீக்கி சோதித்தபோது, உணவிலுள்ள நச்சு காரணமாக

தவளையில் செல் மூலம் செயல்படும் பயோபாட்! - பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்களின் முயற்சி!

படம்
              பரிணாம வளர்ச்சியை காட்டும் பயோபாட் ! டஃப்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தவளையின் செல்களை வைத்து பயோபாட் என்ற உயிருள்ள கணினி ஒன்றை உருவாக்கியுள்ளனர் . அறிவியலாளர்கள் இன்று தங்கள் சிந்தனையை கணினிக்கு அளித்து அதன் மூலம் வாழ்க்கையை வடிவமைக்க முயன்று வருகிறார்கள் . இயற்கையிலுள்ள பல்வேறு உயிரினங்கள் கைகள் , கால்கள் இல்லாமல் வினோதமான உடல் அமைப்பைக் கொண்டு வாழ்கின்றன . இவற்றை கண்காணித்து ஆராய்ச்சி செய்வது கடினம் . இதற்காகவே இந்த உயிரினங்களின் செல்களைக் கொண்டு பயோபாட்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் . இதன்மூலம் அவற்றின் பரிணாம வளர்ச்சியைக் கணிக்கலாம் . இவற்றால் என்ற பயன் என்று கேள்விகள் எழலாம் . இவற்றின் மூலம் மைக்ரோபிளாஸ்டிக் , அணுஆயுதக் கழிவுகள் பிரச்னையைக் கூட தீர்க்க முடியும் . இவை கணினி மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரிகள் (CDO) என்று அழைக்கப்படுகின்றன . இந்த உயிரிகளுக்கு மூளையோ , அறிவுத்திறனோ கிடையாது . இவை உலகின் நடைமுறைப் பிரச்னைகளை தீர்த்து வைப்பதோடு , செல்களுக்கு இடையிலான தகவல்தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் அற

ஆட்டிச பாதிப்புடன் வாழ்க்கையை பிறருக்கு பகிரும் நூல்! - புத்தகம் புதுசு

படம்
              கைண்ரட் நியாண்டர்தால் லைஃப், லவ், டெத், ஆர்ட் ரெபெக்கா ரெக் சைகஸ் இன்று அனைத்து இடங்களிலும் ஏன் கூகுள் சர்ச்சிலும் கூட நியாண்டர்தால் பற்றிய சர்ச்சைகள்தான் அதிக இடம்பிடித்துள்ளது. பலரும் தேடிப்படித்து வருவதும் இதுதொடர்பான சர்ச்சைகள்தான். இதுபற்றிய தகவல்களை தொல்பொருள் ஆய்வாளர் ரெக் சைகஸ் நமக்கு விளக்குகிறார்.நமது பரிணாம வளர்ச்சி, அவர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், உடல் உறுப்புகள் என ஏராளமான விஷயங்களை நூலில் விளக்கியுள்ளனர். அவுட்சைடர் கைடு டு ஹியூமன்ஸ் வாட் சயின்ஸ் டாஃப்ட் மி அபவுட் வால் வீ டூ அண்ட் ஹூ வீ ஆர் கமிலா பாங் உயிரிவேதியியலாளர் பாங் ஐந்து வயதாக இருக்கும்போது பிற மனிதர்களை அந்நியர்களாக கருத தொடங்கிவிட்டார். சோதித்தபோது அவருக்கு ஆட்டிச பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. தன்னுடைய வாழ்க்கையை, அறிவியல் கலந்து பேசியுள்ள நூல் இது. தி டேங்கில்டு வெப் வி வீவ் இன்சைடு தி ஷாடோ சிஸ்டம் தட் ஷேப்ஸ் தி இன்டர்நெட் ஜேம்ஸ் பால். இணையம், இணைய நிறுவனங்கள் எப்படி இணையத்தை நிலைநிறுத்துகிறார்கள். முன்பு கடவுளாக தெரிந்த இணையம் எப்படி வில்லனாக பார்க்கப்படுகிறது என்பதை எழுதியுள்ளார் ஆசிர

சேவலை ஆராய்ந்து அதன் மரபணு தொடர்ச்சியை கண்டறிய விரும்புகிறேன்! - பெர்முடா ஆராய்ச்சியாளர் ஈபென்

படம்
          ஈபென் ஜெரிங் உயிரியல் பேராசிரியர் நோவா சவுத்ஈஸ்டரன் பல்கலைக்கழகம் தெற்கு புளோரிடா உலகில் எத்தனையோ விலங்குகள் இருக்க நீங்கள் பரிணாமவளர்ச்சி பற்றி அறிய சேவலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் ? பிராக்டிகலாக பார்த்தால் , அதனை எளிதாக கவனிக்கமுடியும் என்பதால்தான் . அவை என்ன செய்தாலும் உங்கள் கண்முன்னேதான் செய்யும் . தனிப்பட்ட பராமரிப்பு விஷயங்கள் தேவையில்லை . தொலைதூரம் பறந்து சென்றுவிடாது . இணையத்தில் கூட சேவல் , கோழிகள் பற்றிய படங்களை எளிதாக பெற்று ஆய்வு செய்யமுடியும் என நடைமுறை எளிதாக இருந்ததால்தான் நான் சேவலைத் தேர்ந்தெடுத்தேன் . வேறு சிறப்புக்காரணங்களைக் கூறுங்கள் . பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வகங்களில் பாக்டீரியாக்களை ஆராய்வதைப்போலசெய்வதை கைவிட்டு அமேசான் மழைக்காடுகள் , பப்புவா நியூகினியா என இரண்டு இடங்களிலும் ஆராய்வது சிறப்பான பயன்களைத் தரும் என நினைக்கிறேன் . சேவல்கள் சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் ஏராளமான உயிரியல் அம்சங்களை சந்திக்கின்றன . அவை சந்திக்கும் எதிரிகள் , போட்டியாளர்கள் , இயற்கை இடர்களை நாம் ஆய்வகத்தில் உருவாக்க முடியாது . பெர்முடா கிழக்குப

மனிதர்களின் கண்களில் மாற்றம் ஏற்பட்டது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி பாலூட்டிகளின் கண்களில் வெள்ளை நிறம் அதிகம் இருப்பதில்லை. ஆனால் நமது கண்களில் வெள்ளை நிறம் அதிகமாக  இருக்கிறது. என்ன காரணம்? பொதுவாக கூடி வேட்டையாடும் விலங்குகள் தமக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த வெள்ளை நிற சங்கதியை பயன்படுத்திக்கொள்கின்றன. பிற பாலூட்டிகளுக்கு இந்த நிறம் குறைவாக இருப்பதன் காரணம், பரிணாம வளர்ச்சிதான். புலி, சிங்கம்  போன்றவை தனியாக வேட்டையாடும். ஆனால் ஓநாய்கள் கூட்டாக வேட்டையாடும். இந்நேரங்களில் சின்ன சின்ன ஒலிகள், ஊளைகள் என சிக்னல்கள் கொடுத்து வேட்டையாடப் பாயும். இதில் மூத்த ஓநாய்களின் அறிவுரைப்படி இளைய ஓநாய்கள் ஆட்டு மந்தைகளை கொல்லும். பரிணாம வளர்ச்சி பங்காளிகளான மனிதக்குரங்களுக்கு கூட கண்களில் வெள்ளைநிறத் தன்மை குறைவுதான். இதனை உறுதியாக இப்படித்தான் என உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இன்று நம்மிடையே மிக குறைவாக உள்ளன. நன்றி - பிபிசி

மனிதர்களுக்கும் விலங்களுக்கும் எலும்பு அமைப்புகள் மாறுபடுமா?

படம்
மிஸ்டர் ரோனி மனிதர்களின் எலும்பும், விலங்குகளின் எலும்பும் ஒன்றுதானா? பொதுவாக உயிரினங்கள் அனைத்தும் பொது மூதாதையரிலிருந்து கிளைபிரிந்து வந்தவைதான். இதில் பாலூட்டியான மனிதர்கள் விதிவிலக்கானவர்கள் கிடையாது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆன எலும்பு அமைப்பு, ஒன்றுபோலத்தான். செயல்பாடு, உருவாக்கம் என அனைத்தும் ஒரேமாதிரிதான். ஆனால் அதன் அடர்த்தி, அதிலுள்ள சத்துகள் என பார்க்கும்போது நிறைய வித்தியாசங்கள் உண்டு. மருத்துவர் அல்லாதவர்கள் கரடியின் கைகளைப் பார்த்தால் அப்படியே மனிதனுடையதைப் போலவே இருக்கிறது என குழம்புவார்கள். இது பலமுறை நடந்திருக்கிறது. விலங்கு, மனிதர்கள் என இரு உயிரினங்களுக்கான வேறுபாடுகள் மிக குறைவானவை. நன்றி - பிபிசி

டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால்.....

படம்
மிஸ்டர் ரோனி டைனோசர்கள் அழியாமல் இருந்திருந்தால் அவர்களைக் கொண்ட குடிமைச்சமூகம் உருவாகி இருக்குமா? இனிய கற்பனைதான். ஆனால் நடக்க வாய்ப்புள்ளது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் விண்கல் மோதலால் உயிரிழந்தன. இதில் பறவைகள் தப்பிப் பிழைத்துவிட்டடன. இதில் முக்கியமான உயிரினம் வெலோசிராப்டர் என்பன. இவை இன்றுள்ள நாய்களைப் போன்ற புத்திசாலித்தனமான விலங்கினம். பெரிய மூளை சுறுசுறுப்பான புத்தியைக் கொண்டவை இவை. இவையும் கோள்களின் தாக்குதலில் அழிந்துபோய்விட்டன. ஆனால் அவை உயிருடன் இருந்திருந்தால் பரிணாம வளர்ச்சியில் அறிவு வளர்ச்சியில் பலபடி முன்னேறி வந்திருக்கும். வளர்ப்பு பிராணியாகவும் மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

நாய்களுக்கு உருவாகியுள்ள பரிணாம வளர்ச்சி தசைகள்!

படம்
ஆல்பா படம் ஓநாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் பேசியது. ஓநாய்கள்தான் மெல்ல மனிதர்களிடம் பழகி வீடு, பண்ணை என காவல் காத்து மெல்ல நாய் என மாறியது என்று கூறப்படுகிறது. இன்றுவரையிலும் கூட பிற விலங்குகளை விட நாய் மனிதர்களோடு அந்நியோனியமாக உள்ளது. காசுள்ளவர் வீட்டு நாய், ஆடி காரில் உட்காருகிறது. காசில்லாத ரிக்சாவில் தூங்குபவரின் காலடியிலும் ஆதரவாக நாய் இருக்கிறது. இந்த எடுத்துக்காட்டை ஏன் கூறுகிறேன் என்றால், நாய்க்கு தேவையானது மனிதர்களின் அன்பு ஒன்றே. அது உங்களை காசிற்காக மதிக்காது. நீங்கள் அதன் மீது கொண்ட நேசத்திற்காகவே உங்கள் மீது விழுந்து புரண்டு விளையாட அழைக்கிறது. தற்போது ஓநாய்களின் கண்களில் இல்லாத தசைகள் நாய்க்கு உருவாகியுள்ளதாக  Proceedings of the National Academy of Sciences  என்ற   அறிவியல் இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. பிற விலங்குகள் மனிதனை நேரடியாக கண்ணோடு கண் பார்க்காது. முடிந்தளவு அப்படி பார்ப்பதைத் தவிர்க்கும். நாய் மட்டுமே தனக்கான அங்கீகாரத்தைப் பெற இயல்பாக மனிதனின் கண்களைப் பார்க்கும். அப்படிப் பார்க்காதே அது சண்டைக்கு வா என்று சொல்லுவதைப் போல என்ற

ஆண்களின் வன்முறைக்கு காரணம் இதுதான்!

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி ஆண்கள் தீவிரமான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். பெரும்பாலான கலவரங்கள், வன்முறைகள் அனைத்திலும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கையே அதிகம். இதற்கு காரணம் என்ன? உலகமெங்கும் பெரும்பாலான சமூகங்களில் ஆண்களுக்கு அதிகாரம் கொடுத்து அப்படி வளர்ப்பதுதான் காரணம். பெண்களை வீட்டுவேலைகள், அடுத்த தலைமுறையை வளர்ப்பதற்கான பயிற்சிகளை கொடுத்து வளர்க்கிறார்கள். இதனால் குற்றச்செயல்களில் இயல்பாகவே ஆண்களின் பங்கு அதிகமாக இருக்கும். பரிணாமவளர்ச்சி காலகட்டத்தில் ஆண்கள் தங்களின் வலிமையை நிரூபித்தால்தான் பெண்களைப் பெறமுடியும். இதனால் வலிமை என்பது ஒருகாலத்தில் ஆண்களுக்கு சமூக அந்தஸ்தாக இருந்தது. இன்று அது வீடாக, ஐடி வேலையாக, சொத்து மதிப்பாக மாறியிருக்கிறது அவ்வளவுதான். அண்மையில் 63 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயில், இளைஞர்கள் தங்கள் வயதிலுள்ள பெண்களை விட அதிக சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முக்கியக்காரணம், பரிணாம  வளர்ச்சிதான். நன்றி: பிபிசி

எறும்புகளின் பரிணாம வளர்ச்சி!

படம்
எறும்புகள் குறித்த ஆய்வு அறுபது ஆண்டுகளாக எறும்புகள் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறவர், உயிரியலாளர் எட்வர்ட் ஓ வில்சன். விரைவில் 90 வயது ஆகப்போகிறது. ஆனாலும் ஆராய்ச்சியிலும், பேச்சிலும் உற்சாகம் குறையவில்லை. சிறுவயதிலிருந்தே அலபாமாவில் எறும்புகளை தேடிப்பிடித்து அதன் பின்னாலே அலைந்து திரிந்தவர், தன் 29 வயதில் ஹார்வர்டு பல்கலையில் எறும்பு ஆராய்ச்சியில் சேர்ந்தார். பின்னர் 1960 ஆம் ஆண்டு சூழலியலாளர் ராபர்ட் மெக் ஆர்த்தரோடு இணைந்து வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை அவரை புகழ்பெற செய்தது. அறிமுகம் போதும். அவரிடம் பேசுவோம். உங்களுக்கு இந்த ஜூனில் 90 வயது ஆகிறது என அறிந்தோம். முன்கூட்டியே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி. ஆனால் எனக்கு 90 வயது ஆனதுபோல் உணர்வில்லை. 45 வயது ஆனது போலவே தோன்றுகிறது. நான் என் நாற்பது வயதில் படுக்கையிலிருந்து எழுந்த என்ன செய்வேனோ அதையேதான் 90 வயதிலும் செய்து வருகிறேன். நான் ஆண்டுக்கு ஒரு புத்தகம் என இயற்கை குறித்து எழுதி வந்தேன். இன்றும் இயற்கை சார்ந்த பயணங்களை மேற்கொண்டு வருகிறேன். கோரங்கோசா இயற்கை பூங்காவு

விலங்குகள் தப்பித்து பிழைத்து வாழ முடியுமா?

படம்
பிபிசி அழிவிலிருந்து விலங்குகள் தாமே தப்பித்துக்கொண்டுவிட முடியுமா? நிச்சயமாக முடியாது. காரணம், நீங்களே லேஸ் சிப்ஸ் வாங்குகிறீர்கள். அதில் நண்பர்களுக்கு பகிர்ந்தது போக உங்கள் வீட்டு பெட் செல்லம் வாலாட்டி கெஞ்சினால் சிறிது கொடுப்பீர்கள். ஆனால் அதில் மிச்சம் வைத்து தூக்கிப்போடுவது வாய்ப்பில்லை அல்லவா? அதேதான் கான்செப்ட். ஒரு விலங்கு பசிக்காக வேட்டையாடும்போது, அதில் முழுமையாக இறங்கிவிடும். அந்த இனம் அழிவில் இருக்கிறதா என்பது பற்றி இங்கு கவலை அவசியமில்லை. பசி தீர்ந்தால்தான் அந்த விலங்கு உயிர்பிழைக்கும். பரிணாம வளர்ச்சி என்பது அடுத்தநொடி நிகழ்ந்துவிடாது. பல்லாண்டுகள் அதற்குத் தேவை. இதற்கும் கூட நம்மிலும் வலிய விலங்குகள், நோய்கள், இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி நடந்தால்தான் அது சாத்தியமாகும். குறிப்பிட்ட விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்ணும் விலங்குகள், பறவைகள் இயற்கையில் தாக்குப்பிடித்து வாழ்வது கடினம். நியூசிலாந்தில் ஹாஸ்ட் எனும் கழுகு, மோவா என்று பறக்கமுடியாத பறவையை மட்டும் வேட்டையாடி உண்ணும். அங்கு மனிதர்களின் பெருக்கம் அதிகமானபோது, இறைச்சிக்காக அப்பறவையை வேட்டையாடி