சாடிஸம் பற்றிய ஆய்வுகளால் உலகையே அதிர வைத்த ஜெர்மன் மருத்துவர்!
அமெரிக்காவில் மட்டும்தான் தொடர் கொலைகாரர்கள் உருவாகிறார்களா என பலரும் நினைக்கலாம் . இந்தியாவில் ராமன் ராகவ் ரக கொலைகார ர்கள் இருப்பதைப் போல அனைத்து நாடுகளிலும் உண்டு . இவர்களைப் பற்றிய முழுமையான ஆவணம் கிடைப்பதில்லை என்பதுதான் அவர்களைப் பற்றி பேச முடியாததற்கு காரணம் . ரெக் கிறிஸ்டி இவரைத்தான் இங்கிலாந்தின் ரிலிங்டன் பிளேசின் ராட்சசன் என்று அழைக்கின்றனர் . 1953 ஆம் ஆண்டு இங்கிருந்த வீட்டை வாங்கியவர்கள் அதனை புதுப்பிக்க நினைத்தனர் . சமையல் அறையில் இருந்த வால்பேப்பர்களை அகற்றியதும்தான் உள்ளே இருந்த விபரீதம் புரிந்தது . அங்கிருந்த கப்போர்டில் மூன்று பெண்களின் பிணம் பிளாஸ்டிக் உறையில் மடித்து வைக்கப்பட்டிருந்தது . சாப்பிடும் அறையின் கீழும் ஒரு பெண்ணின் பிணம் கிடைத்தது . தோட்டத்தில் மூன்றுக்கும் அதிகமான பிணங்கள் இருந்தன . ஏன் இந்த ரத்த வெறியாட்டம் . அத்தனைக்கும் காரணம் , கண்ணாடி போட்ட ரெக் கிறி்ஸ்டி என்பவர்தான் . வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் வேலையை முக்கியமாக கருதும் குடும்பத்தில் பிறந்தவர் , பின்னாளில் அனைவரின் பொருட்களையும் திருட