இடுகைகள்

காப்புரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவுப்பொருட்களிலிருந்து சிஎன்சி இயந்திரம்!

படம்
  மாதிரிப் படம்  கழிவுப்பொருட்களிலிருந்து இயந்திரம்! வேலூர் விஐடியில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவர், கவின்பிரபு சுந்தர ராஜ். பூர்வீகம், பொள்ளாச்சி. கவின்பிரபு, வெறும்  1,500 ரூபாயில் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிஎன்சி இயந்திரம் உற்பத்திதுறையில் (பிளாஸ்டிக், உலோகம், மரம்) பயன்படுகிறது.  மனிதர்கள் உதவியின்றி கணினி கோடிங் மூலம் இயந்திரத்தை எளிதாக இயக்கலாம். எலக்ட்ரானிக் கடைகளில் கழிவாக கிடைக்கும் போல்ட், நட்டுகள், டிவிடி ரைட்டர், பிவிசி குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் கவின்பிரபு.  தான் உருவாக்கிய சிஎன்சி புரோடோடைப் இயந்திரத்திற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ”கடந்த ஆண்டு எனது நண்பரின் பிறந்த நாளுக்காக மினியேச்சர் ஓவியம் ஒன்றை உருவாக்க நினைத்தேன். அப்படித்தான் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கினேன்” என்றார் கவின்பிரபு.  https://www.newindianexpress.com/good-news/2022/may/22/tn-farmers-son-puts-together-scrap-comes-up-with-ultra-cheap-compact-cnc-machine-2456516.html https://www.thebetterindia.com/286293/tam

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரட

அறிவியல், ஆராய்ச்சி தொடர்பான மசோதாவில் என்னென்ன அம்சங்கள் மக்களுக்கு உதவும்? -மத்திய அரசின் புதிய கொள்கை வரைவு

படம்
                தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கொள்கை ஜனவரி 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இதில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன , மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை டாக்டர் அகிலேஷ் குப்தா விளக்குகிறார் . முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கொள்கைகள் நினைத்த இலக்கை எட்டவில்லை . தற்போதையை ஐந்தாவது தொழில்நுட்பக் கொள்கை மையப்படுத்தப்படாதது , வல்லுநர்களைக் கொண்டது , கீழே வரை வளர்ச்சியை ஏற்படுத்துவது , குறிப்பிட்ட காலத்தில் இதனை ஆய்வு செய்வது , மேம்படுத்துவது , இதுதொடர்பான கருத்துகளைப் பெறுவது ஆகியவற்றை உள்ளடக்கமாக கொண்டது . பத்தாண்டுகளுக்குள் உலகின் மூன்று முக்கிய அறிவியல் ஆற்றல் கொண்ட நாடாக இந்தியா மாறவேண்டும் என்பதே இலக்கு . முழுநேர ஆராய்ச்சியாளர்கள் . தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு , ஆராய்ச்சிக்கான நிதியுதவி ஆகியவை இதில் கிடைக்கும் . தற்சார்பு இந்தியாவின் கீழ் பல்வேறு திட்டங்கள் இதில் உள்ளன . உலக அங்கீகாரத்தோடு விருதுகளும் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது . இதில் ஒருவர் செய்யும் ஆராய்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்வமுடன் அணுகி அதனைப் படிக்கமுடியும் . அர

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள்! - மின்சாரம், டின் உணவுகள், வயர்லெஸ் தகவல்தொடர்பு, பிளாஸ்டிக்

படம்
                    மகத்தான கண்டுபிடிப்புகள் மின்சாரம் 1752 இதனை கண்டுபிடிப்பு என்று கூறமுடியாது . மின்னல் , இடியைப் பார்த்து அதிலிருந்து மின்சாரம் வருவது பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள் . எனவே இதனை கண்டறிந்தனர் என்று கூறலாம் . கி . மு 600 ஆண்டிலே இதுபற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது வந்த து . ஆனாலும் கூட பெஞ்சமின் பிராங்களின் கண்டுபிடிக்கும் வரை வெளியில் சொல்லும் முன்னேற்றங்கள் மின்சாரத்தில் ஏற்படவில்லை . இதனைப் பயன்படுத்தி மைக்கேல் பாரடே எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்குவதற்கான முயற்சிகளை செய்தார் . மின் அமைப்புகளை முதலிலேயே சிறப்பாக அமைத்துவிட்டதால் தாமஸ் ஆல்வா எடிசன் க ண்டுபிடித்த பல்பு எளிதாக விற்பனையானது இதன் அர்த்தம் ,, முதலில் வணிக மார்க்கெட்டை கண்டுபிடித்தபிறகு பொருளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் . இதனால்தான் கண்டுபிடிப்புகளை விட மார்க்கெட்டிங்கிற்கு கவனம் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் ஜிஇ எனும் நிறுவனத்தை உருவாக்க முடிந்தது . டின் உணவுகள் வெளிநாடுகளில் டின் உணவு இல்லையென்றால் மக்கள் வாழ்வதே கடினம் . காரணம் அங்கு நிலவும் குளிருக்கு உணவை சமைத்

பிறந்தநாள் வாழ்த்துப் பாடலின் வரலாறு! - தெரிஞ்சுக்கோ!

படம்
தெரிஞ்சுக்கோ! ஹேப்பி பர்த்டே டூ யூ! பீட்டில்ஸ் பிரிட்டிஷ் பேண்ட்டின் பாடல்களை விட பிரபலமான பாடல்கள் உலகில் உண்டு. அதில் ஒன்றுதான், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல். இப்பாடலை 1889 ஆம் ஆண்டு பார்ட்டி ஹில் மற்றும் அவரது சகோதரியான மில்ட்ரெட் ஆகியோர் சேர்ந்து உருவாக்கினர். இன்று உலகம் முழுவதும் இப்பாடல் பாடப்பெற்று வருகிறது. கேக்கைத் தின்னும் வெறியில் பாடலைக் கூட பாடாமல் சிலர் இருப்பார்கள். ஆனால் பாடலின் வரிகள் மனதில் வராமல் இருக்காது. அதுபற்றிய  தகவல்கள்: 1893 ஆம் ஆண்டு இப்பாடல் ஹில் சகோதரிகளால் பதிப்பிக்கப்பட்டது. இதில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்பது மாற்று வார்த்தையாக சேர்க்கப்பட்டிருந்தது. 1912 ஆம் ஆண்டு குட்மார்னிங் டு ஆல் எனத் தொடங்கும் பாடலில் ஹேப்பி பர்த்டே டூ யூ என்ற வார்த்தையும் முதன்முதலாக இடம்பெற்றது. 1933 ஆம் ஆண்டில் தந்தியில் செய்தியாக அனுப்ப ப்பட்ட முதல் பாடல், இதுதான். 1935 ஆம் ஆண்டு இப்பாடலுக்கான காப்புரிமை ஹில் சகோதரிகளுக்கு கிடைத்தது. 1955 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பியர் மான்ட்யூக்ஸ் என்பவரின் 80 வது பிறந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுக்கு ட