இடுகைகள்

violence லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொய் சொல்வது எதனால்?

 மூளை, ஒருவர் சொல்லும் பொய்யை ஏற்றுக்கொள்கிறதா? மூளை, ஒருவரின் ஆளுமையை தெளிவாக உருவாக்கி வைத்திருக்கிறது. அதை பாதிக்கும் விதமாக பொய்கள் கூறப்பட்டால் அதை முதலில் ஏற்காதுதான். ஆனால், தொடர்ச்சியாக பொய்களை சொல்லிக்கொண்டே இருந்தால் மனதில் குற்றவுணர்ச்சி குறைந்து அதை ஏற்றுக்கொண்டுவிடும். வலதுசாரி மதவாத கட்சி உறுப்பினர்கள், இப்படி பொய்களை சொல்லியே பிழைப்பு நடத்தி தாங்கள் சொல்வது தங்களது நன்மைக்கு என கூறிக்கொள்கிறார்கள். இதனால்தான் விமான விபத்து நடந்தால் கூட அந்த இடத்தில் நின்று இன்ஸ்டா ரீல்ஸ் போட முடிகிறது. அழகான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. தாங்கள் செய்யும் செயல் யாரையும் காயப்படுத்தாது என அவர்களாகவே நம்பிக்கொள்கிறார்கள். வலதுசாரி மதவாதிகளின் உலகம் முழுக்க கடந்தகாலத்தில் இருப்பது. அவர்கள் வேற்றுமதம் அல்லது எதிரிகளாக கட்டமைக்கப்பட்டவர்களின் கல்லறைகளைத் தோண்டி அதை வைத்து பிழைப்பு செய்வார்கள்.  மூளைக்கு தொடக்கத்தில் பொய் சொல்லும்போது தடுமாற்றம் இருக்கும். பொய்யை உடல் ஏற்று ஒத்துழைக்காது. எனவே, பொய் சொல்லும்போது ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எதிரில் உள்ளவர் எளிதாக அறியலாம். உடல் அசை...

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்

படம்
 சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள் ராமச்சந்திர குகா கிழக்கு பதிப்பகம் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மூலம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டனர் என்பதை நூல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையோடு, முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சந்தேகப்பட்டது, அரசியல் பிரசாரங்களில் பேசியது, அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுத்தது எல்லாமே ராமச்சந்திர குகாவின் எழுத்தில் பதிவாகியுள்ளது.  இதைப் படித்தால், மதவாத சக்திகள் வல்லபாய் படேலுக்கு எதற்கு சிலை வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கிறித்தவ கன்னியாஸ்தீரிகள் மதமாற்றம் செய்ததாக இந்து குண்டர் அமைப்பு கொடுத்து புகாரின் பெயரில் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே, இ்ந்திய ஐக்கிய நாடு என்பது நொறுங்கிக்கொண்டிருக்கும் குடியரசுதான். இனி இந்த நாடு, எத்தனை துண்டுகளாக உடையப்போகிறது என்பதுதான் எதிர்பார்க்க வேண்டிய ஒரே விஷயம்.  நூலில் நேரு கொண்டிருந்த க...