இடுகைகள்

கிறித்தவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேரளத்தில் பிரார்த்தனை மூலம் மக்களுக்கு உதவுகிற நாடகம் நடத்தும் கிறித்தவ கோவில்!

படம்
          இந்துக்களின் வாழ்வில் அதிசயத்தை நடத்தும் கிருபசனம் கோவில்! சாமியார் விவகாரங்களில் முதலில் காஷ்மீருக்கு போனோம். இப்போது கேரளத்திற்கு செல்வோம். இன்றைக்கு மத அடிப்படைவாதிகள், தம் சித்தாந்த எதிரிகளான கம்யூனிஸ்டுகளை குறிவைத்து இயங்கி வருகிறார்கள். பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அடிப்படைவாதிகள் கோரிக்கை வைத்து மிரட்டி வருகிறார்கள். மதச்சார்பற்ற, கல்வி அறிவு கொண்ட மாநிலத்தை தரைமட்டமாக்க வலதுசாரி மதவாத சக்திகள் முயன்று வருகின்றன. இந்த நேரத்தில்தான் நாம் கிருபசனம் கிறித்தவ கோவிலைப் பார்க்கப்போகிறோம். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆன்மிக அருள் தரும் எண்ணெய், உப்பு, ஒரு பண்டல் கிருபசனம் செய்தித்தாள் ஆகியவற்றை வாங்கியே ஆகவேண்டும். ஒரு பண்டல் நாளிதழ் கட்டின் விலை ரூ.100. இந்த நாளிதழ் பதினைந்து மொழிகளில் வெளியாகிறது. அப்படியொன்றும் செய்திகள் ஏதும் இருக்காது. எல்லாம் அதிசய நிவாரண செய்திகள்தான். கடனைத் தீர்த்தார். நோயைத் தீர்த்தார், கல்யாணம் கைகூடியது, மகன் செத்த துக்கம் நீங்கியது, வேலை கிடைத்தது என ஏராளமான அதிசயங்களைப் பற்றி கோவில் நி...

இந்தியாவில் கிறித்தவத்தின் எதிர்மறை செயல்பாடுகள்! - சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

படம்
  சிலுவையின் பெயரால்…. ஜெயமோகன் கிழக்குப் பதிப்பகம்   ஜெயமோகன், அவரது வலைத்தளத்தில் கிறித்தவம் பற்றி எழுதிய கருத்துகளும் அதற்கு எதிர்வினையாக வந்த பல்வேறு வாசகர்களின் கருத்துகள், அதற்கு பதில் அளித்த எழுத்தாளரின் கருத்துகள் என அனைத்துமே சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. நூலில், ஜெயமோகன் விரிவாக கிறித்தவம் தன்னை இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள முயல்கிறது என கூறியுள்ளார். ஏறத்தாழ சிறில் அலெக்ஸ், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் எதிர்வினைகளும் அதை எப்படி ஜெயமோகன் எதிர்கொள்கிறார் என்பதையும் வாசிக்கும்போது நமக்கு கிறித்தவம் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளள முடிகிறது. பெந்தகொஸ்தே சபையின் அரசியல், தமிழில் கிறித்தவத்தை பரப்புபவர்கள் அதற்கு செய்யும் அநீதியான செயல்கள், இலக்கியவாதிகளை பணம் கொடுத்து வளைப்பது, அதற்கென போலித் தகவல்களைக் கொண்ட நூல்களை எழுதுவது என நிறைய செயல்களை நூலெங்கும் பட்டியலிடுகின்றனர்.   ஒருவகையில் இந்த நூல் கிறித்தவ அடிப்படை மதவாத தன்மையை வெளிச்சம்போட்டு காட்ட எழுதப்பட்டதோ என தோன்றுகிறது. அல்லது இந்தியாவிற்கு விரோதமான அந்நிய மதம் என்ற...