பொழுதுபோக்குபூங்காகவாக மாற்றப்படும் காந்தியின் சபர்மதி ஆசிரமம்!
2019ஆம் ஆண்டே காந்தியின் சபர்மதி ஆசிரமம் புத்துயிர் அளிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் இயற்கையான தடையாக கொரோனா வந்தது. இக்காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவான பல்வேறு மசோதாக்களை சட்டமாக்கிய பிரதமர் மோடி, இப்போது காந்தியின் பக்கம் கவனம் திருப்பியுள்ளனர். 1,200 கோடி மதிப்பில் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை நவீனப்படுத்தி புதுப்பிக்க உள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. காந்தியை தேசத்தந்தை என்ற இடத்திலிருந்து அகற்றி அதில் ஆர்எஸ்எஸ் பிரிவினைவாதிகளை பொருத்தும் பணியை பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது. இதற்கு அச்சாரமாக காந்தியை ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் அடையாளமாக்கி அசிங்கப்படுத்தியது. காந்தி வெறும் ஒருவரின் தூய்மை பற்றி மட்டும் பேசவில்லை. ஜனநாயகத்தன்மை, அகிம்சை, சுய ஒழுக்கம் பற்றியெல்லாம் கூட பேசியுள்ளார். இவற்றில் தன்னுடைய பங்கு பற்றி நூல்களைக் கூட எழுதியுள்ளார். ஆனால் அதையெல்லாம் படிக்க தெரிந்துகொள்ள ஒன்றிய அரசுக்கு எந்த விருப்பமுமில்லை. ஈடுபாடும் இல்லை. சபர்மதி ஆசிரமத்தை ஏழு அறக்கட்டளைகள் நிர்வாகம் செய்து வருகின்றன. இந்த நிலையை சாதகமாக்கி மாநில அரசு மூலம்