இடுகைகள்

ஐரோப்பா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிளேக் நோய்!

படம்
  2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர்.  பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும்.  நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறி

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் வேளாண்மை!

படம்
  வெப்ப அலை தாக்குல்களால் பற்றாக்குறையாகும் உணவு தக்காளி விலை உயர்ந்தது பற்றி பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவசியமான கவலைதான். உலகம் முழுக்க வெப்ப அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், காய்கறி, பழங்கள், உணவுப்பயிர்கள் என அனைத்துமே மெல்ல அழிந்து வருகின்றன. சூரியனின் வெப்பம் காரணமாக, ஏராளமான உயிரினங்களுக்கு வாழ்விடமான கடலும் வளம் குன்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் வெப்பஅலை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம், எதிர்கொண்டதிலேயே அதிக வெப்பநிலை கொண்டதாக மாறி   மக்களை வதைத்தது. இன்று சந்தை முழுக்க உலகமயம் ஆகிவிட்டது. ஒரு நாட்டில் காய்கறி விளையாதபோது இன்னொரு நாட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த கோணம் தவறு என்று கூறமுடியாது. ஆனால் இதன் இன்னொருபக்கம் இருக்கிறது. இதன்படி, காய்கறிகள் பழங்கள் சந்தையில் கிடைக்கும். ஆனால் அதிக விலை வைத்து விற்கப்படும். எனவே, அனைவராலும் வாங்க முடியாது.   இப்படியான சூழல் ஏற்கெனவே உருவாகிவிட்டது. 2018ஆம் ஆண்டு, ஐரோப்பாவில் வெப்ப அலை தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு விளைவித்த உணவு

உலக கோப்பை பந்துகள் - அடிடாஸ் தயாரித்து வழங்கும் கால்பந்துகளின் தன்மை

படம்
  உலகப்கோப்பை பந்துகளின் வரலாறு பிபா அமைப்பு நடத்தும உலக கோப்பை கால்பந்து முக்கியமான போட்டி. இந்தியாவில் பெரும்பான்மையாக கிரிக்கெட்டிற்கு ஆதரவு இருந்தாலும் கூட முக்கியமான நகரங்களில் கால்பந்துக்கும் ஆதரவான ரசிகர்கள் கூட்டம் உண்டு. வடகிழக்கு இந்தியாவில் கால்பந்திற்கென வெறிகொண்ட ஆட்டக்காரர்களும், ரசிகர்களும் உண்டு. இங்கு நாம் பார்க்கப் போவது கால்பந்துகளைப் பற்றித்தான். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அல் ரிஹ்லா என்ற பெயரில் கால்பந்து அறிமுகமாகியுள்ளது. அல் ரிஹ்லா என்ற அரபி மொழி சொல்லுக்கு பயணம் என்று பொருள். இபின் பத்துதா என்பவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என பல நாடுகளுக்கு சுற்றினார். டெல்லியில் உள்ள மன்னர் முகமது பின் துக்ளக்கையும் சந்தித்தவர். பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மை, சூழலுக்கு உகந்தது. நீரை அடிப்படையாக கொண்டது. கத்தாரின் கலாசாரத்தை மையமாக கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பாலியூரெத்தின் வேதிப்பொருள் மூலம் கால்பந்து உருவாக்ககப்பட்டுள்ளது. இதில் வேகம், துல்லியம், காற்று அழுத

ஐரோப்பாவில் பட்டு சாலை வணிகத்தடம் உருவானதா? - உண்மையா? உடான்ஸா?

படம்
  விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப ராக்கெட்டிற்கு மாற்று ஏதுமில்லை                                                     உண்மை. இப்போதைய தொழில்நுட்பப்படி ராக்கெட்தான் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப உதவும் ஒரே சாதனம். இதற்கு மாற்றாக வளரக்கூடிய விதமாக வர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் 2 விண்வெளி விமானம் உள்ளது. இதே நிறுவனத்தின் லான்ஞ்சர் ஒன் செயற்கைக்கோள்  லான்ஞ்சரையும் இதேபோல குறிப்பிடலாம். ஆனாலும் விண்வெளிக்கு செல்ல ராக்கெட்டின் உதவி உறுதியாக தேவை.  நெகட்டிவ் கலோரி கொண்ட உணவு வகைகள் உண்டு! இல்லை. குறிப்பிட்ட வகை உணவை செரிக்க உடல் செலவழிக்கும் ஆற்றலை கலோரி அளவை, நெகட்டிவ் கலோரி என குறிப்பிடுகின்றனர். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை  இந்த வரையறைக்குள் பொருத்தலாம். இப்படி உணவு இருப்பதாக தெரியவில்லை என ஆராய்ந்த உணவு வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். செரிக்க தாமதமாகும் செலரி (celery) என்ற தாவர உணவு கூட நெகட்டிவ் கலோரி உணவு பட்டியலில் வராது.  சில்க்ரோடு எனும் வணிகத்தடம் ஐரோப்பாவில் உருவானது!                          இல்லை. பட்டு எனும் வணிக வழித்தடம் சீனாவின் ஷியான் எனும் இடத்தில் தான் த

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்குமான நுழைவாயில்!

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நுழைவாயில்!  அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆய்வாளரான

அழிந்துபோன வணிக கண்டம்! - பால்கனாடோலியா

படம்
  ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான நடுவில் உள்ள கண்டம்! அண்மையில், தோராயமாக 40 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கண்டம் மறைந்துபோனதாக ஆராய்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இங்கு, ஆசிய உயிரினங்களும், தனித்துவமான தாவரங்களும் இருந்ததாக ஆராய்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.  மறைந்துபோன கண்டத்தின் பெயர், பால்கனாடோலியா (Balkanatolia). இந்த கண்டம், ஆசியா, ஐரோப்பாவிற்கு பாலமாக இருந்துள்ளது. இதன் வழியாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவிற்கு செல்ல முடிந்துள்ளது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்நீர் பரப்பு குறைவாக இருந்த காலம் அது. அப்போதுதான் இரு பகுதிகளுக்கும் இடையில் பாலம் உருவாக்கப்பட்டது.  3.4 கோடி ஆண்டுகளுக்கு, முன்னர் ஐரோப்பாவில் உள்ள தாவர இனங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அழிந்துபோயின. இந்த நிகழ்ச்சிக்கு கிராண்டே கூப்பூர் (Grande Coupure)என்று பெயர். இச்சமயத்தில் ஆசிய தாவர, விலங்கு இனங்கள் மெல்ல ஐரோப்பா கண்டங்களுக்கு சென்றன.  ”தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆசிய விலங்குகள் எப்போது, எப்படி இடம்பெயர்ந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களும் துல்லியமாக இல்லை” என்றார் ஆ

155 ஆண்டுகளைக் கடக்கும் சூயஸ் கால்வாய்!

படம்
சூயஸ் கால்வாய்  சூயஸ் கால்வாய் உலகில் நீளமான ஆறு, எகிப்தில் உள்ள நைல் ஆறு. ஆனால் நீளமான கால்வாய் எதுவென தெரியுமா? தலைப்பில் சொல்லிவிட்டோமே, இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது. அதைப்பற்றிய கட்டுரைதான் இது.  ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு செல்வது பல மாதங்கள் நீண்ட பயணமாக இருந்தது. காரணம், அனைத்து கப்பல்களும் ஆப்பிரிக்காவை சுற்றி சென்று சுற்றி வந்தன. சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைத்தது.  மத்திய தரைக்கடலிலிருந்து எளிதாக இந்திய பெருங்கடலை அடைய சூயஸ் கால்வாயே உதவியது. இதன்மூலம் கப்பலின் பயண தூரம் 7 ஆயிரம் கி.மீ. குறைந்ததோடு, பயண நாட்களும் 23 நாட்களாக சுருங்கியது. 1859 - 1869  என பத்தாண்டுகள் சூயஸ் கால்வாய் கட்டப்பட்டது. இதன் மொத்த நீளம் 193.30 கி.மீ. ஆகும். இதனை தொடக்கத்தில் ஆங்கர் லைன் என்ற ஸ்காட்டிஷ் கம்பெனி ஒன்று தனக்கு சொந்தமாக்கி வைத்திருந்தது. 1867 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று முதல் கப்பல் இதில் பயணித்தது. 2022ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் கட்டப்பட்டு 155 ஆண்டுகள் ஆகிறது.  இந்த கால்வாயில் 1,50,000 டன்கள் கொண்ட கப்பல்கள் பயணிக்கலாம். இதனைக் கடக்க ஆகும் தோராய நேரம் 15 மணி

மொழிச்சோதனைகளை தொடர்ச்சியாக செய்த நாவலாசிரியர்! - ஜேம்ஸ் ஜாய்ஸ்

படம்
  இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ். 1941ஆம் ஆண்டு குடல் புண் காரணமாக மறைந்தார்.  ஐரிஷ் நாட்டு நாவல் ஆசிரியரான ஜேம்ஸ் ஜாய்ஸ், நாவலை வழக்கமான முறையில் அல்லாமல் பல்வேறு பரிசோதனை பயன்படுத்தி எழுதுவதற்கு பிரபலமானவர்.  இவரின் மிகச்சிறந்த படைப்பு உலிசஸ். படிப்பவர்கள் உணர்ந்துகொள்ளும்படியான அங்கத நடை கொண்ட படைப்பு இது. ஒருநாளில் நடக்கும் விஷயங்களை அடிப்படையாக கொண்ட கதை. பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டது. 1914ஆம் ஆண்டு டப்ளினர்ஸ் என்ற தலைப்பில்  சிறுகதைகளை எழுதினார்.  1916ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நாவல் உள்ளது. அதன் பெயர், எ போர்ட்ரைட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஏஸ் எ யங் மேன். ஜாய்ஸ் எழுதிய கடைசி நாவல்,  ஃபின்னகென்ஸ் வேக். 1939ஆம் ஆண்டு வெளியான இந்த நூலும் கூட மொழிச்சோதனைகள் நிறைய கொண்டதுதான். எழுதியவருக்கு அல்லது படிப்பவருக்கா யாருக்கு அதிக சோதனைகள் இருக்கும் என்று கேட்க கூடாது.  இப்படி எழுதியவருக்கு தொடக்க கல்வி என்பது சிறப்பாக அமையவில்லை. பொருளாதார பிரச்னைகளால் பத்து வயதில் தனது பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டி இருந்தது. கல்லூரிக்கு செல்வதைக் கூட ஓராண்டு ஒத்திவைத்தார்

கண்ட்ரோல் + டெலிட் அழித்து கடந்த காலத்தை கூகுளில் அழிக்க முடியுமா? - ஒரு அலசல்

படம்
              கூகுளில் கடந்த காலத்தை மறைப்பது எப்படி ? காவல்துறையில் ஒருவர் பிடிபட்டு குற்றம் சாட்டப்பட்டால் அது தினகரன் , தினத்தந்தி என அனைத்திலும் செய்தியாகும் . ஆனால் அவர் அக்குற்றச்சாட்டு தவறானது என்றால் அப்படி அவர் விடுவிக்கப்பட்டார் என்று எந்த செய்தியும் பிரசுரமாகாது . இன்று டிஜிட்டல் உலகிலும் அதே நிலைதான் உள்ளது . இதில் ஒரு மாற்றம் உள்ளது . ஒருவர் தவறுசெய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்துவிட்டு பழைய வாழ்க்கையை வாழ நினைத்தாலும் அது முடியாது . காரணம் , வேலை தேடி நிறுவனத்திற்கு சென்றால் அவரைப் பற்றிய பின்னணியைத் தேடும்போது எதிர்மறையான செய்திகளை கூகுள் எளிதாக காட்டிக்கொடுக்கிறது . இப்படி கூகுள் அத்தனை விஷயங்களையும் தனது சர்வரில் தேக்கி வைத்திருப்பதால் , குற்றங்களை மறந்த அமைதியாக வாழ நினைப்பவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பே கிடைப்பதில்லை . கடந்தகாலம் என்பது காலைப்பிடித்த உடும்பாக தடுக்க புதிய வாழ்க்கையை தொடங்க முடியாமல் பலரும் தடுமாறி வருகிறார்கள் . இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது .    குழந்தைகளை பாலியல் சீண்டல் , வல்லுறவு , கொலை செய்தவர்களைப் பற்றியும் கூட தகவல்க

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்

ஐரோப்பாவில் காமிக்ஸ் விழா! - களைகட்டும் காமிக்ஸ் புத்தக நிறுவனங்கள்!

படம்
தெற்கு ஐரோப்பாவில் காமிக்ஸ் திருவிழா தொடங்கியுள்ளது.அங்கு உள்ள இத்தாலி காமிக்ஸ் ஆலன் ஃபோர்டு, செர்பியாவிலுள்ள இதழ் ஸ்ட்ரிபோட்டேகா, யூகோஸ்லேவ் ஆஸ்ட்ரிக்ஸ் டிகன் ஆகிய பதிப்பகங்கள் காமிக்ஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளன. ஆலன் ஃபோர்டு என்ற காமிக்ஸ் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை எழுத்தாளர் லூசினோ சாச்சி உருவாக்கினர். இவரின் புனைபெயர் மேக்ஸ் பங்கர். இவரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ராபர்ட் ரவியாலோ. இருவரின் பங்களிப்பில் காமிக்ஸ் இதழ் மே 2019 அன்று நூற்றாண்டு இதழை கொண்டு வந்துவிட்டது. ஆலன் ஃபோர்டு என்பது துப்பறியும் கதையாகும். இந்த வரிசையில் 27 வது கதையில்தான் ஆலனுக்கு சரியான வில்லனாக சூப்பர்யூக் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது. ராபின்ஹூட் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக இந்த கதாபாத்திரம் இருக்கும். இந்த காமிக்ஸ்கள் பிரான்ஸ், டென்மார்க், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி விற்கப்பட்டன. உள்நாட்டிலும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த காமிக்ஸ் இது. யூகோஸ்லேவியால் உள்ள ஜேஸ்னிக் என்ற நாளிதழில் வெளியாகி புகழ்பெற்றது. இந்த தொடரை நேனாட் பிரிக்சி என்ற ஆசிரியர் மொழ

இயற்கையை அழிக்கும் ஐரோப்பா - மெர்கோசர் ஒப்பந்தம்!

படம்
ஐரோப்பா - மெர்கோசர் வணிக ஒப்பந்தம். ஐரோப்பிய யூனியனுக்கும், மெர்கோசர் - (  Brazil, Uruguay, Argentina and Paraguay   ) ஆகிய நாடுகளுக்குமான வணிக ஒப்பந்தம் நீண்ட நாட்களாக முடிவுகளுக்கு வராமல் இழுபட்டு வந்தது. தற்போது அந்த ஒப்பந்தம் சீராகியிருக்கிறது. இதன்மூலம் மாட்டுக்கறியை பிரேசில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மிக குறைந்த வரியில் ஏற்றுமதி செய்யலாம். ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மெர்கோசர் நாடுகளுக்கு இறக்குமதியாகும் கார்களுக்கு வரி குறைவாக விதிக்கப்படுவது இதன் சிறப்பு. மேலும் மெர்கோசர் நாடுகளின் விவசாயப் பொருட்கள் பலவற்றுக்கும் ஐரோப்பிய நாடுகள் சிறந்த சந்தையாக மாற வாய்ப்பு உள்ளது. வெனிசுலாவும் மெர்கோசர் நாடுகளில் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. ஆனால் அங்கு பொருளாதார பிரச்னை, உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து நீக்கப்பட்டது. இயற்கை சூழலியலாளர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. இதனை சூழலியலுக்கு எதிரானாதாகவே சந்தேகத்துடன் பார்த்து வருகின்றனர். உலகில் மாட்டுக்கறி ஏற்றுமதியில் பிரேசில் நாடு 15 சதவீத த்துடன் முன்னிலை வகிக்கிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், வி

வெள்ளையர்களின் இனவாதம் - ஒரு அலசல்

படம்
dailymail வெள்ளையர்களின் இனவாதம் பரவுகிறதா? நியூசிலாந்தில் மசூதி மீது தாக்குதல் நடத்திய வெள்ளை இனவெறியர் பிரெண்டன் டாரன்ட், அதனை கேமராவில் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அவரின் தாக்குதலின் நோக்கம், அகதிகளை அரசு அனுமதிப்பது தொடர்பானது. ஆனால் இதனை இனவெறியாக பதிவு செய்து மக்களுக்கு காட்சிபடுத்திய அந்நாட்டினை அதிரவைத்துள்ளது. இணையம் என்பது மக்கள் தொடர்புக்கு எவ்வளவு தூரம் உதவுகிறதோ, அதேபோல மோசமான விஷயங்களுக்கும் வதந்திகளுக்கும் உதவுகிறது. தற்போது இந்த இனவாத வெறி இணையம் வழியாக அமெரிக்கா, ரஷ்யா, கனடா என பரவி வருகிறது. இதற்கான தொடக்கம் 1940 ஆம் ஆண்டு நடந்தது. அக்கால கட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பாவில் பாசிஸ்டுகளும் நியோ நாஜிக்களும் வெள்ளை இனவாத கருத்துக்காக போராடினர். கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை நடத்திய டாரன்ட், பின்பற்றிய வழிமுறை ஆங்கிலேயரான ஆஸ்வால்ட் மோஸ்லே என்வரின் கருத்தாக்கத்தை ஒத்தது.  இவர் பயன்படுத்திய ஐரோப்பியர்கள் என்ற சொல்லாக்கம், 1940 ஆம் ஆண்டு அமெரிக்கரான நியோ நாஜியான ஃபிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்பவர் உருவாக்கியது. 1972 ஆம் ஆண்டு வெ