நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி
நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி ஆங்கிலத்தில்: பவன் பலி தமிழில்: பியர்சன் கயே ‘’ கருப்பு பண விவகாரத்தில் பி.ஜே.பி காலங்கடந்த புத்திசாலித்தனத்தைக் கொண்டிருக்கிறது ’’ மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தில் நாட்டின் ரகசிய ஒப்பந்தங்களோடு தொடர்புள்ளதாக கூறி இருக்கிறது இது பற்றி தங்களின் பார்வை என்ன? பி.ஜே.பி இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து முதல்முறையாக இப்போதுதான் அறிகிறார்களா? அக்கட்சி தலைவர்கள் இதனை முன்னரே அறியாதபோது எப்படி முன்னர் இருந்த காங்கிரஸ் அரசினை குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தை ஒரு ஆண்டிற்கு முடக்க முடிந்தது? எப்படி கணக்கு வைத்திருப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்? உடன்படிக்கை பற்றி அறியாத போது, ஏன் இருட்டைப்பார்த்து காலை உதைக்கவேண்டும்? உடன்படிக்கை 26 ன்படி ஸ்விட்சர்லாந்து, தேவையான தகவல்களை நீதிமன்றத்திற்கு தர முடியும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? துணிச்சலாக உடன்படிக்கையை மீறினால், ஸ்விஸ் அரசு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைத்தராது இல்லையா? எதிர்கட்சியாக இருந்தபோது, பி.ஜே.பி கணக்குகளை வெளியிடா