இடுகைகள்

கிணறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம், கொலை செஞ்சிருக்க கூடாது! - முப்பிடாதி

படம்
எனக்கு முதன்முதலில் கிணத்துல இருந்து எடுத்த பிணம் பத்தி ஞாபகம் இல்லை. ஆனால் மறக்கமுடியாத சம்பவம் ஒண்ணு இருக்கு. திருமணமாகாத பொண்ணு தனக்கு பொறந்த குழந்தை கிணத்துக்குள்ள வீசிட்டு போயிருச்சி. அந்த குழந்தை பொறந்து ஒரு நாள்தான் ஆயிருக்கும். கிணத்தில் நாற்பது அடிக்கு கீழே இருந்து. அதை கையில் எடுத்துட்டு வந்தேன். துணியில வெச்சு வெளியே கொண்டு வந்தாங்க. அந்த குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொடுத்திருக்கலாம். கிணத்தில் வீசிக் கொன்னது சங்கடமாக இருந்தது என்றார் முப்பிடாதி. தென்காசி வட்டாரத்தில் யாராவது நீர்நிலையில் இறந்துபோனால் கூப்பிடு முப்பிடாதியை என்றுதான் சொல்லுவார்கள். அந்தளவு பிரபலம். பிணங்களை மூச்சு தம் கட்டி கீழேயிருந்தே மேலே கொண்டு வந்து விடுகிறார். இப்போது 83 வயதாகும் மனிதர். பிணங்களை மீட்பதை 20 வயதிலிருந்து செய்து வருகிறார். இவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண், ஒரு பெண். இவர்கள் யாருக்குமே அப்பா பிணத்தை தூக்குவது பிடிக்கவில்லை. ஆனால் முப்பிடாதி காவல்துறையினர் கூப்பிட்டால் உடனே அந்த குரலுக்கு செவிசாய்த்து தனது பணியை செய்து தருகிறார். போலீசாரும் இவருக்கு இப்போதுதான் முதியோர் பெ