ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்
நூல்வெளி2 ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் கலைவாணன் இ.எம்.எஸ் கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் பொளேரென அறைந்து சொல்கிறது ஒவ்வொரு கவிதைகளும். முதலில் இவற்றைப் படிக்கும் யாரும் இதை கவிதை என்றே கூறமுடியாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல வாழ்வை ஒரு நிகழ்வை நம் முன் வைத்து நம் கவனத்தைக் கோருகிறது. நாம்தான் கையறு நிலையில் அதனை பார்க்காது திரும்பி நிற்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வலிகள் இக்கவிதைகளில் காணமுடிகிறது. ஒன்பதாம் பக்கத்தில் குறிப்போடு துவங்குகிற இந்த கவிதைப்புத்தகம் முகத்தின் மீசை திருத்தும் கவனத்தோடுதான் படிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்.