இடுகைகள்

நூல்வெளி2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்:நூல்வெளி2-ப்ராட்லி ஜேம்ஸ்

படம்
                                                        நூல்வெளி2                                             ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்                                                 கலைவாணன் இ.எம்.எஸ்                                                  கீற்று வெளியீட்டகம் இந்த கவிதைத்தொகுப்பின் கவிதைகள் என்பவை அழகு குறித்தவையல்ல. முடிதிருத்தம் செய்யும் ஒருவனது வாழ்வு, சமூகம் சார்ந்து எப்படி பார்க்கப்படுகிறது என்பதையும் அதனால் அவனது மனம் படும் பாட்டையும் வலியையும், வேதனையையும் பொளேரென அறைந்து சொல்கிறது ஒவ்வொரு கவிதைகளும்.           முதலில் இவற்றைப் படிக்கும் யாரும் இதை கவிதை என்றே கூறமுடியாது. ஒவ்வொரு கவிதையும் ஒரு சிறுகதை போல வாழ்வை ஒரு நிகழ்வை நம் முன் வைத்து நம் கவனத்தைக் கோருகிறது. நாம்தான் கையறு நிலையில் அதனை பார்க்காது திரும்பி நிற்க வேண்டியிருக்கிறது. அவ்வளவு வலிகள் இக்கவிதைகளில் காணமுடிகிறது.  ஒன்பதாம் பக்கத்தில் குறிப்போடு துவங்குகிற இந்த கவிதைப்புத்தகம் முகத்தின் மீசை திருத்தும் கவனத்தோடுதான் படிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான்.            

சாவுக்கே சவால்:நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

                                                        நூல்வெளி2                                             சாவுக்கே சவால்                                                                                       விளாதிஸ் லாவ் தித்தோவ்                                                                              தமிழில்: பூ. சோம சுந்தரம்                தலைப்பைப் பார்த்ததும் லயன் காமிக்ஸ் கௌபாய்களின் மிரட்டல் கதைகளைப் போல் என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்புதான் அப்படி வைத்துவிட்டார்கள்.  கதை உயிரோட்டமானதுதான். ரஷ்யாவின் கதைகளைப் பொறுத்தவரை போர் அவர்களது வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இருந்திருக்கிறது. பல கோடி மக்களின் வாழ்வைக்கூட மாற்றியிருக்கிறது. அது அவர்களது இலக்கியத்தில் இடம்பெறக் காரணம் அந்தளவு ஆழமான வடுவாகி இருக்கிறது அந்நிகழ்வுகள் என்று கூறலாம்.   இக்கதையில்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தான்யா, ஸெர்கேய் பெத்ரோவ் என இருவரும் தங்களின் பெற்றோர் ஒருவரையோருவர் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். விடுமுறை கிடைத்தால் எங்கேனும் சுற்றிப்பார்க்க ப

கவர்மென்ட் பிராமணன்- நூல்வெளி2(ப்ராட்லி ஜேம்ஸ்)

படம்
                                                          கவர்மென்ட் பிராமணன்                                                         அரவிந்த் மாளகத்தி                                                         தமிழில் : பாவண்ணன்   இந்த நூல் கன்னட எழுத்தாளர் அரவிந்த் மாளகத்தியின் சுயசரிதையாகும். கவர்மென்ட் பிராமணன் என்று கூறப்படுவது ஏன் என்றால் அவருக்கு அளிக்கப்படும் அரசு சலுகைகளின் மீதான கேலி எனலாம். முழுக்க அவரின் ஒவ்வொரு வாழ்வின் நிகழ்வுகளும் இதில் கூறப்படுவதில்லை என்றாலும் குறிப்பான பலவையும் அவர் தேர்ந்தெடுத்து இதில் தொகுத்திருக்கிறார். தொடர்ச்சியாக பல நூல்களும் இவர் எழுதி வருகிறார்.          ஏறத்தாழ தாழ்த்தப்பட்ட பலரும் அனுபவித்த கொடுமைதான் முதல் சில அத்தியாயங்களில் குறிப்பிடப்படுவது. பள்ளி ஆசிரியர் அரவிந்த் மாளகத்தியை கடுமையாக அடித்து நொறுக்குவது. தினசரி வகுப்பறையைக் கூட்டுவது என்று அதனை செய்யவில்லை என்றால் அவர்களை சாதிப்பெயர் கூறி கடுமையாக தண்டிப்பது. ஏறத்தாழ எனக்கும் எனது ஆசிரியர் பாலுச்சாமி நாயக்கர் நினைவுக்கு வருகிறார். அவர் ஒவ்வொருநாளும் பள்ளிக்கு வரக்கூடாது எ

குலாத்தி: தந்தையற்றவன் நூல்வெளி2

படம்
                                                      குலாத்தி                                                 கிஷோர் சாந்தாபாய் காலே                       ஆங்கிலம் வழி தமிழில் : வெ. கோவிந்தசாமி                                                     விடியல் பதிப்பகம்           இந்த நூல் தமாஷா எனும் நடனம் ஆடும் தாயின் மகனாகப் பிறந்து சமூகத்தின் பல தடைகளைத் தாண்டி , சாதிக்கொடுமைகளை அனுபவித்து தளராத மனவுறுதியினால் மருத்துவரான ஒருவரின் கதை இது. தன் வரலாற்று நூலில் இந்த நூல் வேறுபடுவது இதனுடைய இலக்கை குறிவைத்து தளராது முன்னேறினால் நிச்சயம் நினைத்ததை அடையமுடியும் என்று கூறும்   தன்மையினால்தான் என்பதை இங்கு குறிப்பிடலாம் . குலாத்தி என்பது தமாஷா எனும் நடனமாடும் ஒரு ஜாதிக்காரர்களைக் குறிப்பிட பயன்படுகிறது . இந்த ஜாதியில் பிறந்த ஆண்கள் யாரும் வேலைக்குச் செல்வதெல்லாம் கிடையவே கிடையாது . அவர்கள் தம் தங்களை , அல்லது அக்கா , அல்லது மகள் என்று யாரையேனும் நடனமாடச் சொல்லி அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்வதுதான் அவர்களது வழக்கமாக இருக்கிறது

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர் சார்லி ட்ராம்ப்

நூல்வெளி ஆக்கம் ஜோஸபின் விஸ்பர்  சார்லி ட்ராம்ப் தொகுப்பாளர்கள் ஷான் ஜே கிறிஸ்டின் வர்னிகா விஷ்வதி மின்னூல் பதிப்புரிமை ஆரா பிரஸ் வெளியீட்டு உரிமை Komalimedai.blogspot.in கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் 2015 ன் கீழ் வெளியிடப்படும் இந்நூலினை யாரும் படிக்கலாம், பகிரலாம், வேறுவகையில் பயன்படுத்தும்போது, பதிப்புரிமை நிறுவனங்களை குறிப்பிடவேண்டும்.   1 இது யாருடைய வகுப்பறை இரா.நடராசன் பாரதி புத்தகாலயம் இந்த நூல் ஆசிரியர்களுக்கானது என்பதை முதலிலேயே கூறிவிடவேண்டிய அவசியம் உள்ளது. படித்துவிட்டு தூக்க மருந்தாக பயன்படுகிறது என்று கூறக்கூடாது. இந்த நூலில் கல்வி எப்படி இருக்கவேண்டும், பள்ளி என்பது என்ன, இதற்கான சிந்தனைகளை தோற்றுவித்தவர்கள் யார், அதன் பின்னிருந்த நோக்கம் என்ன என்று தீவிரமாக வரலாற்றுத்தகவல்களோடு பேசுகிற கல்வி குறித்த முக்கியமான நூல் இது. குழந்தைகளுக்கு கருணை போல ஒவ்வொரு ஆட்சியிலும் இடும் திட்டங்களுக்கெல்லாம் யுனிசெப், யுனெஸ்கோ உதவி செய்கிறது என்பது முக்கியமான தகவலாக உள்ளது.  பின்லாந்து கல